ஆதவன் (எழுத்தாளர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 6:
இந்திய ரயில்வேயில் சில ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, டெல்லியில் உள்ள நேஷனல் புக் டிரஸ்டின் தமிழ்ப் பிரிவின் துணையாசிரியராகப் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். தனது 45 வயதில் சிருங்கேரிக்குச் சென்றபோது, ஆற்றில் எதிர்பாராதவிதமாக அடித்துச் செல்லப்பட்டு மரணமடைந்தார்.
இவர் மறைந்த பிறகு, இவருடைய இலக்கிய பணியினை பாராட்டி இந்திய சாஹித்திய அகாதெமி, இவருக்கு 1987இல் தமிழுக்கான சாஹித்திய அகாதெமி விருதினை வழங்கியது.
நடுத்தர மக்களின் எண்ணப்போக்கினையும், முரண்பாடுகளையும் பாரபட்சமின்றி துகிலுரித்துக் காட்டுபவை இவர் கதைகள். இவருடைய நாவல், "என் பெயர் ராமசேஷன்", காமம் என்பதை உளவியல் ரீதியாக அணுகி மக்களின் போலித்தன மூகமூடியினை கிழித்துக் காட்டும் தன்மையுடையது.
இவரது படைப்புகள் பல இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்யன் உள்ளிட்ட உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
|