பாண்டியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: en:Pandyan Dynasty
சி தானியங்கிமாற்றல்: fr:Empire Pândya; cosmetic changes
வரிசை 2:
|+<big>'''பாண்டியர்'''</big><br />
|-
| align=center colspan=2 | [[படிமம்:pandya territories.png|200px]] <br />''கி.பி. 1200ல் பாண்டியரின் ஆட்சியின் பரப்பு</br>
|-
| '''[[அரசமொழி]]கள்'' || [[தமிழ்]]
வரிசை 25:
[[சேரர்|சேர]],[[சோழர்|சோழர்கள்]] போன்ற பேரரசுக்களைக் காட்டிலும் மூத்த குடியினர் பாண்டியரே ஆவர்.இவர்களின் தோற்றம் கூற முடியாத அளவிற்குத் தொன்மை வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.[[குமரிக்கண்டம்|குமரிக் கண்டத்தில்]] தோன்றிய ஆதி மனித சந்ததியினரே பாண்டியராக உருப்பெற்றிருக்கலாம் என்பது பொதுவாக நிலவும் கருத்து.பாண்டியர்களின் தோற்றத்திற்குச் சான்றாக கி.மு 7000 ஆண்டளவில் உருப்பெற்றதனக் கருதப்படும் [[தொல்காப்பியம்|தொல்காப்பியத்தில்]] கூறியபடி
{{cquote|
"''முன்னீர் விழவின் நெடியோன்''<br />
 
''நன்னீர் மணலினும் பலவே''" |40px|40px|(புறம் - 9)}}
வரிசை 32:
 
== பாண்டியரைப் பற்றிய பதிவுகள் ==
=== [[இராமாயணம்|இராமாயணத்தில்]] ===
பாண்டிய மன்னர்களின் தலைநகர் பொன்முத்துக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.[[முத்து]],[[பொன்]] அலங்கரித்த கோட்டை வாயில் இருந்தது இவ்வாறு [[இராமாயணம்|இராமாயணத்தில்]] உள்ளது.
=== [[மகாபாரதம்|மகாபாரதத்தில்]] ===
[[திருச்செங்குன்று|திருச்செங்குன்றில்]] [[பாண்டவர்]] படுக்கை உண்டு.திருப்பாண்டி கொடுமுடிதான் [[விராடநாடு]].பாண்டவர் கொடுமுடியின் புறநகரில் வன்னி மரத்தில்தான் ஆடைகளையும் ஆயுதங்களையும் மறைத்து வைத்தனர்.மேலும் [[அர்ச்சுனன்]] பாண்டிய மன்னன் ஒருவன் மகளை மணந்தான் எனவும் உள்ளது.
=== [[அசோகன்|அசோகனின்]] கல்வெட்டுக்களில் ===
மகத நாட்டு அரசர்கள் [[மௌரியர்கள்]].மௌரிய அரசன் [[அசோகன்]] கல்வெட்டுக்களில் பாண்டிய நாடு பாண்டியர் பற்றிய செய்திகள் உள்ளன.
=== [[மகாவம்சம்|மகாவம்சத்தில்]] ===
[[இலங்கை|இலங்கையை]] ஆண்ட [[விஜயன்]] தனியாட்சி புரிந்தவன் இவன் பாண்டிய மன்னன் ஒருவனின் மகளை மணந்தான்.அப்பாண்டிய மன்னனுக்கு ஆண்டுதோறும் பல பரிசுகளை அனுப்பினான் என்று [[மகாவம்சம்]] கூறுகின்றது.
=== பிற நாட்டவர் பதிவுகள் ===
கி.மு மூன்றாம் நூற்றாண்டு சந்திரகுப்தன் ஆண்ட காலமான கடைச்சங்க காலத்தின் துவக்கம் '[[மெகஸ்தனீஸ்]]' என்ற [[யவன் நாடு|யவன நாட்டுத்]] [[தூதுவன்]] பாண்டிய நாட்டிற்கு வந்ததாகக் கருதப்படுகின்றது மேலும் அவனது நாட்டுக் குறிப்பில் பாண்டிய நாடு பற்றி தகவல்கள் பல உள்ளன. கொக்கிளிசுக்குப் 'பண்டேயா' என்ற பெண் பிறந்தாள்.அவளுக்கு கடல்சார்ந்த தென்னாட்டைக் கொடுத்தான்.அதில் 350 ஊர்கள் இருந்தன.நாள்தோறும் அரசிக்கு ஓர் ஊர் மக்கள் திறை செலுத்த வேண்டும் என்று ஆணையிட்டான்" என்ற செய்தி யவன நாட்டுத் தூதுவனின் குறிப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 
கி.பி. 19 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் '[[பிளைனி]]' என்ற மேனாட்டான் தமிழகத்தைக் காண வந்தான்.அவனது பயண நூலில் பாண்டிய அரசி பற்றி "இந்தியாவின் தெற்கில் 'பண்டோ' என்ற ஒரு [[சாதி]] மக்கள் இருந்தனர்.பெண் அரசு புரியும் நிலை உண்டு.[[கொக்கிளிசு|கொக்கிளிசுக்கு]] ஒரு பெண் பிறந்தாள்.அவளுக்கு அன்போடு பெரிய நாட்டை ஆளும் உரிமை கொடுத்தான்.முந்நூறு ஊர்கள் அவளது ஆட்சியில் இருந்தது.பெருஞ்சேனை வைத்திருந்தாள்.அவளது மரபினர் தொடர்ந்து ஆண்டனர்.என குறித்துள்ளார் பிளைனி.
 
=== சங்க காலப் பதிவுகள் ===
பாண்டியர்கள் [[சந்திர வம்சம்|சந்திர வம்சத்தைச்]] சார்ந்தவர்கள் எனவும்.[[வேப்பம் பூ]] மாலை அணிந்தவர்கள் எனவும் [[மீன்கொடி|மீன்கொடியினை]] உடையவர்கள் எனவும் சங்க கால நூற்குறிப்புகள், [[கல்வெட்டுக்கள்]], [[சாசனங்கள்]] மற்றும் [[மெய்க்கீர்த்திகள்|மெய்க்கீர்த்திகளும்]] வரலாற்று மூலங்களாக உள்ளன.
 
வரிசை 52:
 
== பாண்டிய நாட்டில் பிற நாட்டவர் ஆட்சி ==
=== களப்பிரர் ஆட்சி ===
[[வட நாடு|வடநாட்டில்]] [[பல்லவர்|பல்லவர்களால்]] அடித்துவிரட்டப்பட்ட [[களப்பிரர்]] கி.பி. (300-600) [[கன்னட நாடு]] வழியாக [[கொங்கு நாடு|கொங்கு நாட்டிலும்]],[[சேரர்|சேர]],[[சோழர்|சோழ]],பாண்டி நாட்டிலும் புகுந்து பாண்டியர்களை அடக்கி ஆண்டனர்.களப்பிரரைத் தொடர்ந்து வந்த [[பல்லவர்]] ஆட்சிக்காலமான கி.பி. 600-700 வரையிலும் பாண்டியப் [[பேரரசு]] பெரும் வீழ்ச்சியிலிருந்ததாகக் கருதப்படுகின்றது.ஆனாலும் [[கடுங்கோன்]] ஆட்சிக் காலத்தில் பாண்டியர் ஆட்சி எழுச்சி பெற்றது.பல்லவர்களின் தாக்கமும் களப்பிரர்களை வீழ்த்தியது. இதன்பின்னர் இடைக்காலப் பாண்டியர் ஆட்சி எழுச்சி பெற்றது.
 
=== சோழராட்சி ===
பாண்டிய நாட்டின் பெரும்பகுதிகள் கி.பி. 1020 முதல் 1070 வரை சோழ மன்னர்களின் ஆட்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. [[இராஜராஜ சோழன்|இராசராசன்]] மகனான [[இராஜேந்திர சோழன்|இராசேந்திர சோழனின்]] மூன்று மகன்களான சுந்தரசோழ பாண்டியன், விக்கிரமசோழ பாண்டியன்,[[பராக்கிரம பாண்டியன்]] மூவரும் சோழ பாண்டியர் எனப் பட்டம்பெற்று பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த சோழ மன்னர்களாவர். பாண்டிய நாட்டிற்கு இராசராச மண்டலம் எனப்பெயரிட்டு தங்கள் ஆட்சிக்கு முரண்பட்ட பாண்டியர்களை [[திறை]] செலுத்துமாறு உத்தரவு பிறப்பித்தனர்.
 
=== மகமதியர் ஆட்சி ===
மகமதியர் [[வட நாடு|வட நாட்டிலிருந்து]] [[தென்னாடு|தென்னாட்டிற்குப்]] படையெடுத்து வந்தனர். [[கோயில்|கோவில்களைக்]] கொள்ளையடிப்பதனை முக்கிய நோக்கமாகக் கொண்டு படை திரட்டி வந்த [[கில்ஜி பேரரசு|கில்ஜி பேரரசின்]] மன்னன் [[மாலிக்காபூர்|மாலிக்காபூரிடம்]] பாண்டிய மன்னனான [[சுந்தரபாண்டியன்|சுந்தரபாண்டியனால்]] தன் தம்பியான [[இரண்டாம் வீரபாண்டியன்|இரண்டாம் வீரபாண்டியனை]] வெல்ல உதவியினை நாடினான். இரண்டாம் வீரபாண்டியனை வெற்றி கொண்ட மாலிக்காபூர் சுந்தரபாண்டியனை அடிமைப்படுத்தினான் என்பதும் குறிப்பிடத்தக்கது. [[சயாவுடீன் பார்னி]] , [[அமீர்குசுரு]], [[வாசப்]] போன்றவர்களின் கூற்றுகள் படி மாலிக்காபூர் பாண்டிய நாட்டில் அமைந்திருந்த கோயில்களை இடித்து அங்கிருந்த [[பொன்]], [[பொருள்|பொருள்களைக்]] கொள்ளையிட்டு [[சிற்பம்|சிற்பங்கள்]] பலவற்றையும் சிதைப்பதற்குக் காரணமானான். மேலும் கொள்ளையிட்ட பொருள்களை [[டில்லி|டில்லிக்குக்]] கொண்டு சென்றான் என்பதும் குறிப்பிடத்தக்கது. [[சுந்தரபாண்டியன்]] மற்றும் [[இரண்டாம் வீரபாண்டியன்]] போன்றோரிடமிருந்து மாலிக்காபூர் 612 [[யானை|யானைகள்]], 20,000 [[குதிரை|குதிரைகள்]], 96,000 மணங்கு [[பொன்]], [[முத்து]] மற்றும் அணிகலன்கள் அடங்கிய பெட்டிகளினை எடுத்துச் சென்றான் என [[பார்னி]] என்பவன் குறித்துள்ளான். 1830 ஆம் ஆண்டளவில் பாண்டிய நாட்டில் மகமதியர் ஆட்சி நுழைந்தது. டில்லி [[துக்ளக்|துக்ளக்கின்]] அதிகாரியாகத் திகழ்ந்த '[[ஜலாலுடீன் அசன்சா]]' [[மதுரை|மதுரையினைக்]] கைப்பற்றி ஆட்சி செய்தான். இவனது ஆட்சிக்குப் பின்னர் [[அல்லாவுடீன் உடான்றி]], [[குட்புதீன்]], [[நாசிருடீன்]], [[அடில்ஷா]], [[பஃருடீன் முபாரக் ஷா]], [[அல்லாவுடீன் சிக்கந்தர்ஷா]] போன்றவர்களின் ஆட்சி மதுரையில் இருந்தது. இவர்கள் தம் பெயர்களினால் [[நாணயம்|நாணயங்கள்]] வெளியிட்டனர். இவர்களைப் பற்றிய தகவல்கள் [[புதுக்கோட்டை|புதுக்கோட்டையில்]] உள்ள இரு கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. [[இபின்படூடா]] என்பவரின் குறிப்பின் படி இம்மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் உள்நாட்டுக் குழப்பங்கள்,கலகங்கள் ஏற்பட்டன. கோயில் வழிபாடு,விழா இன்றி சீரழிந்தன. பாண்டிய நாட்டு மக்கள் துன்புற்றனர். என அவர் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
 
வரிசை 84:
இம்மன்னர்களது கல்வெட்டுகள் பாண்டிய நாடெங்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது மேலும் போசள மன்னனான [[மூன்றாம் விரவல்லாள தேவன்|மூன்றாம் விரவல்லாள தேவனும்]] போர்க்களத்தில் இறந்தான் இச்செய்தியை விஜயநகர அரசனொருவன் அறிந்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
=== [[ராயர்|ராயர்களின்]] ஆட்சி ===
பாண்டியர் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த சமயம் [[வாணாதிராயர்|வாணாதிராயர்கள்]] பலர் இருந்தனர். புதுக்கோட்டை [[கோனாடு]] இருந்த பொழுது [[பிள்ளை குலசேகர வாணாதிராயன்]] ஒருவன் பாண்டிய நாட்டில் ஆட்சி செய்தான். [[இராமநாதபுரம்|இராமநாதபுரத்தில்]] [[கேரள சிங்கவள நாடு]] இருந்தது அங்கு [[வாணாதிராயன்]] என்பவன் ஆட்சி செய்தான். இவர்களின் பின்னர் பாண்டியர் ஆட்சி வீழ்ச்சியடையத் தொடங்கியது.
ஸ்ரீவல்லிபுத்தூரில் 1453 ஆம் ஆண்டளவில் வரையப்பட்ட கல்வெட்டில் "மகாபலி வாணதரையர் சீர்மையான மதுரை மண்டலம் " எனக் குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் [[மதுராபுரி நாயகன்]], [[பாண்டிய குலாந்தகன்]] எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி. 1483 ஆம் ஆண்டளவில் வரையப்பட்ட கல்வெட்டொன்றின்படி மாவலிவாணாதிராயர் பாண்டியருக்குத் திறை செலுத்தினர் எனக்குறிப்பிடும். பாண்டியர் வலிமை குன்றிய வேளை ராயர்கள் [[மதுரை|மதுரையினை]] ஆட்சி செய்துள்ளனர். [[புதுக்கோட்டை]] [[குடுமியான் மலைக் கல்வெட்டு|குடுமியான் மலைக் கல்வெட்டில்]] பாண்டியர் ராயரிடம் போரில் தோற்றமை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. ராயர்களின் ஆட்சி 17 ஆம் நூற்றாண்டு வரையில் தொடர்ந்தது பாண்டியர்களின் ஆட்சி இக்காலத்தில் இல்லாமல் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
 
=== விஜய நகரப் பேரரசாட்சி ===
கி.பி. 1310 முதல் 1748 ஆம் ஆண்டு வரை தமிழகத்தினை [[விஜய நகரப் பேரரசு]] ஆண்டது.[[நாயக்க மன்னர்|நாயக்க மன்னர்கள்]] அரசியல் அதிகாரிகளாக ஆட்சி புரிந்துள்ளனர்.இவர்கள் ஆட்சிக் காலங்களில் தமிழகத்தில் கோயில்கள்,மண்டபங்கள்,சிற்பக் கூடங்கள்,உலகப் புகழ்பெற்ற சிற்பங்கள் போன்றனவை சிறப்பம்சமாக விளங்கின.[[சேரர்|சேர]],[[சோழர்|சோழ]],பாண்டிய போன்ற பேரரசுகள் விஜய நகரப் பேரரசு காலத்தில் வீழ்ச்சியுற்றிருந்தன. பல பாண்டிய மன்னர்கள் குறுநில மன்னர்களாக இருந்து விஜய நகரப் பேரரசிடம் திறை செலுத்தியும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 
வரிசை 108:
== பாண்டியர் ஆட்சி இயல் ==
=== நாட்டியல் ===
[[தமிழகம்|தமிழகத்தின்]] தென்பகுதியில் பாண்டிய நாடு அமைந்திருந்தது.மேற்கே சேர நாடும்,மலை நாடும்;கிழக்கே கடல்,வடக்கே சோழ நாடும் ,கொங்கு நாடும்;தெற்கே கடலும் குமரிமுனை இதன் எல்லையாகவும் இருந்தன.இன்றைய [[மதுரை]],[[திருநெல்வேலி]],[[இராமநாதபுரம்]],[[கன்னியாகுமரி]],[[புதுக்கோட்டை]] வெள்ளாற்றுக்குத் தெற்குப் பகுதியில் அமையப்பெற்றிருந்தது எனலாம்.சங்க காலத்தில் [[ஊர்]],[[கூற்றம்]],[[மண்டலம்]],[[நாடு]] என்ற பிரிவில் அமைந்திருந்தன.
{{cquote|
"''முந்நூறூர்த்தே தண்பறம்பு நன்னாடு''" |40px|40px|(புறம்-110)}}
{{cquote|
"''வல்வேல் சாத்தன் மாய்ந்த பின்றை''<br />
 
''முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே''" |40px|40px|(புறம்-242)}}
வரிசை 199:
பாண்டியர்களின் இயற்பெயரும்,சிறப்புப் பெயரும் வளநாடு பெயராக அமைந்தன.
 
=== குடும்ப இயல் ===
[[அரசன்]],[[அரசி]],[[இளவரசன்]],[[பட்டத்தரசி]] என்ற முறையில் குடும்பம் அமைந்தது.பட்டத்தரசி பாண்டிமாதேவி எனப்பட்டாள்.பட்டத்தரசியை அன்றி பிற பெண்களையும் மணந்திருந்தனர் சில பாண்டிய அரசர்கள்.பெண்களும் முடிசூடி ஆட்சி நடத்தியதோடு [[போர்|போரும்]] செய்திருக்கின்றனர்.அரசனின் மூத்த மகனே பட்டம் பெற முடியும்.இளவரசு பட்டம் பெற இயலும்.மாற்றாந்தாய் மக்களுடன் பகைமை வருதலும் உண்டு.உதாரணமாக [[வீரபாண்டியன்]],[[சுந்தர பாண்டியன்]] போன்றவர்களின் வரலாறுகள் இதற்குச் சான்றாகும்.
 
[[கொற்கை]] பாண்டியரது துறைமுகம்.[[ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்]] ஊழ்வினையால்,[[கண்ணகி]] நீதி கேட்டதால் இறந்தான்.அச்சமயம் இளவரசனாக கொற்கையில் இருந்த [[வெற்றுவேற்செழியன்]] மதுரைக்கு வந்து முடிசூடினான்.ஜந்து பேர் ஒரே சமயத்தில் பாண்டிய நாட்டை ஆண்ட நிலையும் இருந்தது.ஆட்சியின் காரணமாக அண்ணன் தம்பி,தந்தை மகன் சண்டைகள் வந்தன மேலும் ஆட்சிக்காக தந்தையை மகன் கொன்ற சம்பவங்களும் பாண்டியரின் குடும்பவியலில் இருந்தன குறிப்பிடத்தக்கது.
 
=== அரசியல் ஆட்சி இயல் ===
பாண்டியரின் ஆட்சிக்கு உற்ற துணையாக இருந்தவர்கள் [[அமைச்சர்|அமைச்சர்கள்]].அடுத்த நிலையில் அரசியல் அதிகாரிகள்,படைத் தலைவர்கள் இருந்தனர்.அரையர்,நாடுவகை செய்வோர்.வரியிலார்,புரவுவரித் திணைக்களத்தார்,திருமுகம் எழுதுவோர் ஆகியவர்களும் அரசனுக்கு ஆட்சியில் துணை செய்தவர்கள் ஆவார்கள்.
 
வரிசை 244:
காவிரி,ஏனாதி பட்டம் பெற்றவர்களுக்கு [[பொற்பூ]],[[மோதிரம்]],[[இறையிலி நிலம்]] அளித்துக் கௌரவிப்பது பாண்டியர்களின் வழக்கமாகும்.
 
=== அரசின் வரி ===
பாண்டியர் காலத்தில் வரியை [[இறை]] என்றழைத்தனர்.இறை பெறுதல்முறை என்பது வழக்கத்திலிருந்துவந்தது.குடிகள் அரசனுக்கு நிலவரி கொடுத்தனர்.விளைநெல்,[[காசு]],[[பொன்]] வரியாகக் கொடுத்தனர்.ஊர்த் தலைவர்கள் மக்களிடம் பெற்று அரசிடம் அளித்தனர்.தளியிறை,செக்கிறை,தட்டார்ப் பட்டம்,இடைவரி சான்று வரி,பாடிகாவல்,மனையிறை,உல்கு முதலான வரி முறைகள் இருந்தன.இறை,பாட்டம் என்பன வரியினை உணர்த்தும் சொற்களாகத் திகழ்ந்தன.தட்டார்ப் பாட்டம் கம்மாளரின் வரியாகும்.நாடு காவலையே பாடி காவல் என்றழைக்கப்பெற்றது.ஊர்க்காவலிற்கு வாங்கிய வரியே இப்பெயர்பெற்றது.பாண்டிய அரசர்களுள் சில அரசர்களும் ஊர்க்காவலிற்குச் சென்றனர்.[[பொற்கைப்பாண்டியன்]] இதற்குச் சான்றாக விளங்குகின்றான்.வீட்டு வரியினை மனை இறை என்றழைத்தனர்.கலத்தினும்,காலினும் வரும் பொருள்களுக்கு வாங்கும் வரியே [[சுங்க வரி]] எனப்படும்.உல்குவின் பொருள் இதுவேயாகும்.
 
=== நில அளவியல் ===
ஊர்தோறும் உள்ள நிலங்களை அளந்து வரி விதிக்கப்பட்டது.பாண்டிய நாடு முழுவதும் அளக்கப்பட்டது.நாடு வகை செய்வோர் அளந்தனர்.நிலத்தினை அளக்கும் கோல் 'சுந்தர பாண்டியன் கோல்' என்ற பெயரைக் கொண்டிருந்தது.
24 அடி கொண்ட [[தடி|தடியாகும்]] இக்கோல்.குடிதாங்கிக் கோலும் அளவு கோலாக புழக்கத்தில் இருந்தது.நிலங்களை குழி,மா,வேலி என்று பெயரிட்டு அளந்தனர்.அளந்த நிலத்திற்கு [[எல்லைக் கல்]] நாட்டனர்.இக்கற்களே புள்ளடிக் கற்களாகும்.சிவன் கோயில்களிற்கு இடப்பட்ட நிலத்திற்கு '''திரிசூலக்கல்''' நடப்பட்டது.திருமால் கோயிலுக்கு இடப்பட்ட நிலத்திற்கு '''திருவாழிக்கல்''' நடப்பட்டது.நீர் நிலம் நன்செய் எனவும் மேட்டு நிலம் புன்செய் என அழைக்கப்பட்டது.நத்தம்,தோட்டம் என்ற வழக்கும் புழக்கத்தில் இருந்தது.
 
=== இறையிலி ===
இறைவன் கோயிலுக்கு அளிக்கப்படும் கொடை '''இறையிலி''' என அழைக்கப்பட்டது.சிவன் கோயிலுக்கு அளிக்கப்பட்ட இறையிலி '''தேவதானம்''' என அழைக்கப்பெற்று திருமால் கோயிலுக்கு அளிக்கப்பட்ட இறையிலிக்கு '''திருவிடையாட்டம்''' என்று பெயர்.[[சமணம்|சைன]],[[பௌத்தம்|பௌத்த]] கோயில்களுக்கு அளிக்கப்பட்ட கொடை '''பள்ளிச்சந்தம்''' என அழைக்கப்பட்டது.[[அந்தணர்|அந்தணர்களுக்கு]]
வழங்கப்பட்டது '''பிரமதேயம்''';பட்டவிருத்தி எனவும்,மடங்களுக்கு வழங்கப்பட்டது '''மடப்புறம்''' எனவும் புலவர்களுக்கு '''முற்றூட்டும்''',சோதிடர்களுக்கு '''கணிமுற்றூட்டும்''' எனவும் கொடைகள் அழைக்கப்பட்டன.
 
=== அளவை இயல் ===
எண்ணல்,எடுத்தல்,முகத்தல்,நீட்டல் ஆகிய நான்கு அளவைகள் பாண்டியர் ஆட்சியிக் காலங்களில் புழக்கத்தில் இருந்து
வந்திருக்கின்றன.எடுத்தல் என்பது நிறுத்தல் ஆகும்.[[பொன்]],[[வெள்ளி (உலோகம்)|வெள்ளி]],[[கழஞ்சு]],[[காணம்]] ஆகிய நிறை கற்களால் நிறுத்தனர்,[[சர்க்கரை]],[[காய்கறிகள்]],[[புளி]] ஆகியவற்றை துலாம்,பலம் என்பவற்றால் நிறுத்தனர்.[[சேர்]] ,மற்றும் மணங்காலும் நிறுக்கப்பட்டன.[[நெல்]],[[அரிசி]],[[உப்பு]],[[நெய்]],[[பால்]],[[தயிர்]],[[மிளகு]],[[சீரகம்]],[[கடுகு]] ஆகியன [[செவிடு]],[[ஆழாக்கு]],[[உழக்கு]], [[உரி]],[[நாழி]], [[குறுணி]] போன்ற முகக்கும் கருவிகளால் அளக்கப்பட்டன்.
வரிசை 273:
இவ்வாறான அளவு முறைகள் பாண்டிய நாட்டில் இருந்தன,[[சங்க காலம்]] முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை இவ்வளவு முறை புழக்கத்தில் இருந்திருக்கின்றது.14 ஆம் நூற்றாண்டு முதல் புதிய அளவு முறைகள் வந்தன குறிப்பிடத்தக்கது.
 
=== நாணய இயல் ===
பாண்டிய மன்னர்களின் ஆட்சியில் மன்னர்களின் பெயராலும்,சிறப்புப் பெயராலும் [[நாணயம்|நாணயங்கள்]] வெளியிடப்பட்டன. [[பொன்]],[[செம்பால்]] செய்யபட்ட [[காசு|காசுகள்]] புழக்கத்தில் இருந்தன.மீன் சின்னம் பொருத்தப் பட்டதாக வெளியிடப்பட்டது பாண்டியர் ஆட்சிக் கால நாணயங்கள்.
 
சீமாறன் சீவல்லபவன் - அவனிப சேகரன் கோளலிக என்ற பெயரில் நாணயம் வெளியிட்டான்.இதற்குச் சான்றாக சிற்றண்ண வாசல் கல்வெட்டு விளங்குகின்றது.முதல் மாறவர்மன் சுந்தர பாண்டியன் சோணாடு கொண்டான் நாணயம் வெளியிட்டான் சீவல்லபன் "அவனிப சேகரன் கோளகை" என்ற பெயரில் வெளியிட்டான்.1253 ஆம் ஆண்டில் வீரபாண்டியன் "வாளால் வழி திறந்தான் குளிகை" என்ற பெயரில் நாணயத்தினை வெளியிட்டான்.காசு என்பது ஒரு கழஞ்சு எடை உடையது 10 பொன் கொண்டது ஒரு காசு 10 காணம் - 1 கழஞ்சு ஒரு காணம் 4 குன்றி 'காசும் பொன்னும் கலந்து தூவியும்' என்ற தொடர் இதனை உணர்த்துகின்றது.காணம்,கழஞ்சு,காசு,பொன் புறத்திலே வந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
=== ஊரவை ===
பாண்டியர் ஆட்சியில் ஊர் தோறும் ஊரவை இருந்துவந்தது.ஊராட்சியினை இது செயல்பட வைத்தது.குடவோலை முறையில் ஊர்த் தலைவரை தேர்ந்தெடுத்தனர்.சிற்றூர் பல சேர்ந்து கிராம சபை அமைத்தனர்.நிலமும், கல்வியும், மனையும்,அறநெறியும் உடையவர்கள் மட்டுமே ஊரவை உறுப்பினர்களாக முடுயும்.ஊர்களிற்குப் பொது மன்றங்கள் இருந்தன.அரசு அதிகாரிகளின் மேற்பார்வையில் ஊரவை நடைபெற்றது.நீதி விசாரணைக்கு ஊரவையில் உட்கழகங்கள் இருந்தன.வாரியங்கள் என்ற பெயரில் இவை அமைந்தன.
அவை பின்வருமாறு:-
வரிசை 291:
[[மருதனிள நாகனார்]],
{{cquote|
"''கயிறு பிணிக் குழிசியோலை கொண்டமர்''<br />
 
''பொறிகண்டழிக்கு மாவணமாக்களின்''"|40px|40px|(அகம் - 77)}}
வரிசை 297:
என்று (அகம்-77) அகப்பாட்டில் கூறியுள்ளார்.இவ்வரிகளில் கூறியபடி பாண்டியர் காலத்தில் [[குடவோலை]] முறை இருந்தது என்பதனை அறியலாம்.[[நெல்லை|நெல்லையில்]] மானூரில் கல்வெட்டு ஊரவை உறுப்பினரின் தகுதி பற்றி குறித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 
=== ஆவணக்களரி இயல் ===
பதிவு அலுவலகம் பாண்டியர் காலத்தில் '''ஆவணக்களரி''' என்றழைக்கப்பட்டது.ஒவ்வோர் [[ஊர்|ஊரிலும்]] எழுதப்பட்ட ஆவணங்களைக் காப்பிட ஆவணக்களரி இருந்தது.இதனை ஆவணக்களம் என்றழைத்து வந்திருக்கின்றனர். இப்பகுதிக்குப் பொதுவாக நிலம் விற்போர் வாங்குவோர் சென்று தம் நிலத்திற்கு உரிய விலை,பரப்பு,நான்கெல்லை குறிக்கப்படும்.விற்போர் உடன்பட்டு உறுதிமொழியில் கையொப்பம் இடவேண்டும்,ஆவணங்களை கோவில் சுவரில் பொறித்து வைப்பதும் உண்டு.ஆவணக்களரி மக்களின் உரிமைக்கும்,சொத்துக்கும் பாதுகாப்புத் தருவதாக அமைந்திருந்தன.மக்கள் பயன்கருதி பாண்டியர் ஆட்சி நடைபெற்ற அனைத்து ஊர்களிலும் இது செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
=== படை இயல் ===
[[யானைப்படை]],[[குதிரைப்படை]],[[காலாட்படை]],[[தேர்ப்படை]] போன்ற நால்வகைப் படைகளினையும் வைத்திருந்தனர் பாண்டியர்.[[கொற்கை]],[[தொண்டி]] துறைமுகங்களில் வெளிநாட்டுக் [[குதிரை|குதிரைகள்]] ஆண்டுதோறும் வந்திறங்கியது.ஆண்டுக்கு பதினாராயிரம் குதிரைகள் வந்தன என '[[வாசப்]]' கூறியுள்ளான்,[[மார்க்கோபோலோ]] "குதிரைகள் வாங்க மிகுதியான பொருளைச் செலவிடுகின்றனர்" என்று பாண்டியர்களைப் பற்றிக் குறித்துள்ளார்.வாட்போர்வல்ல பெரிய காலாட்படை இருந்தது பாண்டியர் ஆட்சிக்காலத்தில்."'''பெரும் படையோம்'''"எனக் கையெழுத்திடும் குழு பாண்டி நாட்டில் இருந்தது.''''முனையெதிர் மோகர்'''' ''''தென்னவன் ஆபத்துதவிகள்'''' போன்ற படைகளும் இருந்தன என கல்வெட்டுக்களில் குறிப்புகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 
வரிசை 307:
[[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரத்தில்]] வரும் இப்பாடல் வரியிலிருந்து [[உரோமாபுரி|உரோமாபுரிப்]] போர்ப் படை வீரர்கள் [[மதுரைக் கோட்டை|மதுரைக் கோட்டையைக்]] காத்திருந்தனர் என்று கூறுவதற்கிணைய அத்தகு [[வலிமை|வலிமையுடன்]] சிறப்புற்றிருந்தது '''பாண்டியர் படை''' என்பது குறிப்பிடத்தக்கது.
 
=== வணிகவியலும் தொழிலியலும் ===
*பாண்டிய நாட்டில் [[கடைச்சங்கம்|கடைச்சங்க]] நாளிலேயே [[வணிகம்|வணிகமும்]] தொழிலும் மிகச்சிறப்பாக இருந்தன.[[மதுரை]],[[கொற்கை]] முதலான நகரங்களில் கிடைத்துள்ள [[உரோமாபுரி]] நாணயங்களே இதற்குச் சான்றாகும்.
*வெளிநாட்டு வணிகங்கள் சிறப்புற்றும் உள்நாட்டில் [[பண்டங்கள்|பண்டங்களை]] எடுத்துச் செல்வதற்கேற்ற பெருவழித் தடங்களும் இருந்தன.நாடு முழுதும் இச்சாலைகள் அமைந்திருந்தன.
வரிசை 313:
*பாண்டி நாட்டு கொற்கைப் பெருந்துறையில் முத்துக்களும்,[[சங்கு|சங்குகளும்]] பெருவாரியாகக் கிடைத்தன.[[கொற்கை முத்து]] உலகெங்கும் சென்றதும் குறிப்பிடத்தக்கது.இதற்குச் சான்றாக
{{cquote|
"''மறப்போர் பாண்டியர் அறத்திற் காக்கும்''<br />
 
''கொற்கையம் பெருந்துறை முத்து''" |40px|40px|(அகம்-27)}}
{{cquote|
"''பாண்டியன் - புகழ்மலி சிறப்பில் கொற்கை முன்துறை''<br />
 
''அவர்கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து''" |40px|40px|(அகம்-201)}}
வரிசை 323:
இவ்விரு [[அகநானூறு|அகநானூற்றுப்]] பாடல்களும் [[கொற்கை முத்து]] பற்றிக் கூறுகின்றன.மேலும் [[மதுரைக்காஞ்சி]],[[சிறுபாணாற்றுப்படை]],[[சிலப்பதிகாரம்]] ஆகிய நூல்களிலும் இவ்வகைச்செய்திகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 
=== பல்வகைத் தொழில்கள் ===
பாண்டிய நாட்டில் முத்துக் குளித்தல்,சங்கறுத்தல்,வளையல் செய்தல்,உப்பு விளைவித்தல்,நூல் நூற்றல்,ஆடை நெய்தல்,வேளாண்மை செய்தல்,ஆடு,மாடு மேய்த்தல் போன்ற பல தொழில்களும் செய்து வந்தனர்.மதுரையில் நுண்ணிய பருத்தி நூலினாலும்,எலி மயிரினாலும்,பட்டு நூலினாலும் ஆடைகள் நெய்யப்பட்டன எனச் சிலப்பதிகாரப் பாடல்வரிகளான இவ்வரி விளக்கும்.
{{cquote|
"''நூலினும்,மயிரினும்''','''நுழைநூற் பட்டினும்''<br />
''பால்வகை தெரியாப் பன்னூல் அடுக்கத்து''<br />
 
''நறும்படி செறிந்த அறுவை வீதியும்''" |40px|40px|(சிலப்பதிகாரம் -ஊர்-205,207)}}
வரிசை 334:
[[முத்து]],[[பவளம்]],[[மிளகு]],பலவகை பட்டாடைகள் மேனாடுகளுக்கு அனுப்பப்பட்டன.மேனாடுகளிருந்து குதிரைகளும்,[[மது]] வகைகளும்,கண்ணாடிப் பொருள்களும் கொற்கைத் துறைமுகத்திற்கு வந்திறங்கின.சுங்க வரியினால் ஆண்டுதோறும் அரசுக்கு அதிக வருவாய் கிடைத்தது.கப்பல்கள் திசைமாறாமல் இருக்க துறைமுகத்தில் கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டிருந்தது.வெளிநாட்டு வணிகர்களும் யவனர்களும் (கிரேக்கர்களும்,உரோமர்களும்),சோனகரும் (அரேபியர்கள்),பாண்டிய நாட்டு மக்களுன் அன்புடன் பழகினர் என்பது குறிப்பிடத்தக்கது.வணிகத்திலும்,கைத்தொழிலிலும் சிறந்து விளங்கிற்று பாண்டிய நாடு.பண்டைக் காலத்தில் தமிழகத்தின் பாண்டி நாட்டில் தான் வணிகமும்,வெளிநாட்டார் தொடர்பும் சிறப்புற்று இருந்தது.
 
=== கல்வி இயல் ===
பாண்டிய நாடு சங்கம் வைத்து [[தமிழ்]] வளர்த்த பெருமையைப் பெற்றிருந்தது.புலமை நலம் சான்ற முடிமன்னர்களும் இருந்தனர்.[[ஆண்]],[[பெண்]] இருபாலரும் கல்வி கற்றனர்.கல்வியின் சிறப்பை [[நெடுஞ்செழியன்]] போல் யாரும் பாண்டியராட்சியில் கூறியதில்லை எனலாம் அதற்கு எடுத்துக்காட்டாக
{{cquote|
"''உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்''<br />
 
''பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே''!<br />
 
''ஒரு குடிப்பிறந்த பல்லோருள்ளும்''<br />
 
''மூத்தோன்வருக என்னாது அவருள்''<br />
 
''அறிவுடையோன் ஆறுஅரசும் செல்லும்''!"|40px|40px|(புறநானூறு)}}
வரிசை 351:
[[தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்]],
{{cquote|
"''பலர் புகழ்சிறப்பின் புலவர் பாடாது வளர்க என்''<br />
 
''நிலவரை''"|40px|40px|}}
வரிசை 357:
என்று புறப்பாட்டில் பாடியுள்ளார்.
{{cquote|
"''கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க''<br />
''அதற்குத்தக''!"|40px|40px|}}
வரிசை 363:
என்றும்,
{{cquote|
"''கண்ணெனப் படுவது வாழும் உயிர்க்கு''<br />
 
''கல்வியே''!"|40px|40px|}}
வரிசை 375:
தலைச்சங்கம் தொடங்கி கடைச்சங்கம்வரை தமிழ் எழுச்சியும்,வளர்ச்சியும் பெற்றது.இன்றைய மதுரையில் பாண்டியர் கடைச்சங்கம் வைத்து தமிழை வளர்த்தனர்.
{{cquote|
"''கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோடமர்ந்து''<br />
 
''பண்ணுறத் தெரிந்து ஆய்ந்த இப் பசுந்தமிழ்''"|40px|40px|}}
வரிசை 389:
[[நல்லூர் நத்ததனார்]],
{{cquote|
"''தமிழ்நிலை பெற்ற தாங்கருமரபின்''<br />
 
''மகிழ்நனை மறுகின் மதுரை''" |40px|40px|(சிறுபா-66-67)}}
வரிசை 400:
செந்தமிழ்நாடு என்று பாண்டிய நாட்டை மட்டுமே [[இளங்கோவடிகள்]],[[சேக்கிழார்]],[[கம்பர்]] ஆகியோர் கூறியுள்ளனர்.[[தொல்காப்பியம்]],[[திருக்குறள்]] அரங்கேற்றப்பட்டது இங்கென்பது குறிப்பிடத்தக்கது.தமிழ்த்தொண்டெனில் அது பாண்டி மண்டலந்தானாகவிருந்தது.பாலாசிருயர்,கணக்காயர் தமிழ் கற்பித்தனர்.ஆசிரியர் புலவராகவும் இருந்தனர்.[[குரு|குருவே]] தெய்வம் என்றனர்.பாண்டிய நாட்டில் குலவேறுபாடு இன்றி கல்வி கற்றனர்.கற்றவர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது பாண்டிய நாட்டில் நிலவியது.
 
=== ஆன்மீக இயல் ===
[[உமையாள்]] மதுரை மீனாட்சியாக வந்து பாண்டியன் மகளாகப் பிறந்தாள் என்றும் பின்னர் [[சிவன்|சோமசுந்தரப் பெருமானை]] மணந்தாள் என்றும் பாண்டி நாட்டை சோமசுந்தரர் ஆண்டார் என்று [[புராணம்|புராணங்கள்]] கூறும்.பாண்டிய [[வரலாறு|வரலாற்றினைக்]] கூறும் இலக்கிய நூற்களிலும் இவ்வாறு ஆட்சி செய்தார்கள் எனச் சான்றுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.பாண்டியர் ஆட்சியில் [[சைவ சமயம்|சைவ சமயமே]] தழைத்தோங்கியிருந்தது. ஆனாலும் [[வைணவம்]],[[சமணம்]],[[புத்த மதம்]] போன்ற பிற [[மதங்கள்|மதங்களும்]] இருந்தன.சிவன் கோயிலில் [[விண்ணகரங்கள்]],[[அருகன் கோட்டங்கள்]],[[புத்த பள்ளிகள்]] போன்றனவையும் அடங்கியிருந்தன.அனைத்து மதத்திற்கும் மதிப்பளிக்கப்பட்டிருந்தன. கோயில்களுக்கு '''நிபந்தங்கள்''','''இறையிலிகள்''' விடப்பட்டன.பாண்டிய அரசர்கள்,[[அமைச்சர்|அமைச்சர்கள்]],அதிகாரிகள், மேற்பார்வையில் கோயில்கள் கட்டப்பெற்றன.[[சங்க கால்ம்|சங்க காலத்தில்]] சமயப் பூசல்கள் தோற்றம் பெறவில்லை.17 ஆம் நூற்றாண்டு கால கட்டத்தில் [[சமயப் பூசல்கள்]] தோற்றம் பெற்றன.மன்னர்களும்,அமைச்சர் மற்றும் அதிகாரிகளும் [[பிறந்த நாள்|பிறந்த நாளில்]] [[கோயில்|கோயில்களில்]] [[விழா]] எடுத்து மகிழ்ந்தனர்.அதற்கென [[நிலம்]] அளிக்கப்பட்டன.[[தேவாரம்]],[[திருவாய் மொழிகள்]] போன்றன ஓதப்பட்டன.[[இயல்]],[[இசை]], [[நடனம்]],[[கூத்து]] முதலியன நடைபெற்றன.[[செங்கற் கோயில்கள்]],[[கற்றளிகள்]],[[செப்புத் திருமேனிகள்]] [[கல்படிமங்கள்]],அமைக்கப்பட்டு [[அணிகலன்கள்|அணிகலன்களினை]] வழிபாடு செய்யத் [[தானம்]] செய்தனர்.கோயில் வழிபாட்டுத் தலமாக அன்றி [[பொருள்]],[[பணம்]] சேர்த்து வைக்கும் இடமாகவும் விளங்கியது.கோயிலின் [[பொதுப்பணம்]] மக்களுக்குக் [[கடன்|கடனாகக்]] கொடுக்கப்பட்டது.தினமும் கோயில்களில் [[அன்னதானம்]] வழங்கப்பட்டது.[[புத்தகசாலை|புத்தகசாலைகள்]] கோயில்களில் அமைக்கப்பெற்றிருந்தன.கோயில் காரியங்களை ஊர் அவையோரும் அதிகாரிகளும் செய்தனர்.கோயில் மற்றும் அறநிலையங்கள் திட்டப்படி நடக்கின்றனவா என கவனிக்கப்பட்டன.[[தவறு|தவறுகள்]] இழைப்போர் [[தண்டனை|தண்டனையும்]] பெற்றனர்.கோயிலில் அமைந்த [[கல்வெட்டு|கல்வெட்டுக்கள்]] வரலாற்று ஏடுகளாக அமைந்திருந்தன.கோயில் புதுப்பிக்கும் சமயம் படியெடுத்துவைத்துப் புதுப்பித்தனர்.மீண்டும் அவை பொறிக்கப்பட்டன.
 
== பாண்டியர் பழக்க வழக்கங்கள் ==
மன்னன் மகன்,[[பெயரன்]] என்ற முறையில் முடிசூடினர்.சிங்காதனங்களுக்கு மழவராயன் காலிங்கராயன் முனையதரையன்,தமிழ்ப் பல்லவராயன் என்று பெயரிடப்பட்டனர்.அரசன் பிறப்பிக்கும் ஆணை திருமுகம்,[[ஓலை]] மூலம் [[மக்கள்|மக்களுக்கு]] அனுப்பப்படும்.[[அரசர்|அரசர்கள்]] [[பிறந்த நாள்]] விழா நடத்தினர்.[[போர்|போரில்]] இறந்த வீரர்களின் குடும்பத்திற்கு '''உதிரப்பட்டி''' என்ற இறையிலி நிலம் அளிக்கப்பட்டது.[[உடன்கட்டை]] ஏறும் வழக்கமும் இருந்துவந்தது.பாடிய [[புலவன்|புலவர்களுக்குப்]] [[பொன்|பொன்னும்]],[[பொருள்|பொருளும்]] பரிசாக அளிக்கப்பட்டன.நீதி தவறாது [[செங்கோல்]] முறை கோடாது வழங்கப்பட்டன.நீதியை நிலைநாட்ட கை குறைத்தும்,உயிர் கொடுத்தும் காத்தனர் சில பாண்டியர்கள்.நீதி காக்க [[பாண்டியன் நெடுஞ்செழியன்]] [[உயிர்]] கொடுத்தான்.[[பொற்கைப் பாண்டியன்]] [[நீதி|நீதிக்குத்]] தன் கையை வெட்டிக் கொண்டான்.தினமும் மக்கள் குறைகேட்கும் வழக்கம் இருந்தது.போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும்,பாராட்டும் செய்யப்பட்டன்.காசுகள் வெளியிடப்பட்டன.பிறவிப் பெருங்கடல் நீந்த நாளும் இறைவனை வழிபட்டனர்.அறம் ஈகையாக,நீதியாகக் காக்கப்பட்டது."மழை வளம் சிறக்க!மண்ணுயிர் வாழ்க! மன்னனும் வாழ்க!" என்று வாழ்த்தும் வழக்கமும் இருந்து வந்தது.இடுவதும்,சுடுவதும் இறந்தோர்க்கு உண்டு!முன்னோடு வழிபடும் வடிக்கமும் இருந்திருந்தன.
பாண்டியர் பண்பாட்டில்
வரிசை 441:
|}
 
== உசாத்துணை ==
*என்.கே வேலன், ''பாண்டியர் ஆட்சி'', சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1979.
*தே. ப. சின்னசாமி,''பெருமைமிகு பாண்டியர்களின் வீர வரலாறு'', 2001.
வரிசை 450:
[[de:Pandya]]
[[en:Pandyan Dynasty]]
[[fr:Empire Pândya]]
[[hi:पाण्ड्य राजवंश]]
[[it:Dinastia Pandya]]
"https://ta.wikipedia.org/wiki/பாண்டியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது