கீற்று முடைதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மேல்
உ.தி., புள்ளிக்கு முந்தைய இடைவெளி நீக்கம்
வரிசை 1:
'''கீற்று முடைதல் ''' அல்லது '''கிடுகு முடைதல்''' (முடைதல் = பின்னுதல் , கட்டுதல் , நிரைத்தல்) என்பது தென் [[இந்தியா]] , [[இலங்கை]] போன்ற நாடுகளில் இருக்கிறவழங்கிவரும் ஒரு [[கைத்தொழில்]] ஆகும் . இவர்கள் தாங்கள் கொண்டாடும் அனைத்து விழாக்களிலும் முடைந்த கீற்றுகளை ([[கிடுகு]]களை) பயன்படுத்தியே பந்தல் , மேடைகள் , கொட்டகைகள் போன்றவற்றை அமைப்பார்கள் . பண்டைகாலத்தில் விழா அலங்காரங்கள் அனைத்தும் பல மரங்களின் [[இலை]]கள், [[பூ]]க்கள், காய்கள் ஆகியவற்றை வைத்தே வடிவமைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது . அதனால் கீற்று முடையும் தொழில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும் .
 
== வரலாறு ==
 
கீற்று முடை தொழில் சுமார் ஆயிரத்து இருநூற்று ஆண்டுகளுக்கு முன்னரே தென் இந்தியாவில் இருந்திருக்கிறது . [[கிடுகு|கிடுகினால்]] குடிசைகளும் , பன ஓலைகளினால் பறைகள் , கூரைகளும் செய்திருக்கிறார்கள் . இதனை கிடுகு கொட்டின (பாரத. அணி. 15) (கிடுகு = வட்ட வடிவான பறை வகை ) என்று இலக்கியச் சான்றினில் இருந்து காண முடிகிறது <ref>[http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3advanced?dbname=tamillex&query=%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%81&matchtype=exact&display=utf8 கிடுகு கொட்டின] (பாரத. அணி. 15)</ref> . ஒரு வீட்டை சுற்றி வேலிகள் அமைப்பதற்கும் கிடுகுகள் பயன்படுத்தப் படுகிறது . இதனை ''கிடுகு வேலி'' என்று கூறுவது வழக்கம் .
 
== மூலப்பொருள் ==
 
[[தென்னைமரம்|தென்னை]] ஓலை , பன ஓலை போன்றவை இந்த தொழிலின் மூலப்பொருட்கள் ஆகும் . இந்த ஓலைகளில் பட்டை பட்டையான பல கீற்றுகள் இருபுறமும் இருக்கும் . இவ்வகையான கீற்றுகள் இரண்டு நீளப் பட்டைகளை ஒரு குச்சியால் இணைக்கப் பட்டது போன்று இருக்கும். கீற்றுகள் முதலில் அகலமானதாகவும் கடைசியில் ஊசி போன்று சுருங்கியதாகவும் இருக்கும் . ஒவ்வொரு கீற்றும் ஒன்று முதல் மூன்று [[முழம்]] வரை நீண்டு இருக்கும் . ஒரு ஓலை மட்டையோ 10-12 [[முழம்]] நீளம் கொண்டதாகும் .
 
சிலர் இந்த தொழிலில் சிறியக் [[கத்தி]]களையும் பயன்படுத்துவர் . இந்த கத்திகள் [[மட்டை]] பின்னும் பொழுது சில நுனிகளை வெட்ட அல்லது நறுக்க பயன்படுத்துவர்.
 
== மூலப்பொருட்கள் பயன்பாடு ==
 
தென்னங்கீற்றுகளை பல வகைகளில் பயன்படுத்துவார்கள் . அவை ,
 
* பச்சை மட்டையை அப்படியே தண்ணீரில் நனைத்து பின்னுதல் . ( பச்சை மட்டை )
* பச்சையை மட்டையை சில நாட்கள் தண்ணீரில் ஊரவைத்து பின்பு அதை பின்னுதல் . ( காய்ந்த மட்டை )
* தோரணக் கீற்று பின்னல் : இது கீற்றினை கொழுந்திலேயே பிரித்து தனித்தனியாக பின்னுதல் .
 
== முடைதலும் , பயன்களும் ==
 
தென்னங் கீற்று பின்னுதல் என்பது பச்சை மட்டையானாலும் , காய்ந்ததானாலும் ஒரே வகையில் தான் பின்னுவார்கள் . ஆனால் தோரண கீற்றை முற்றிலும் வேறு வகையாக பின்னுவார்கள்.
 
==== கீற்றுக்கொட்டகை ====
 
கீற்று பின்னும் பொழுது , மட்டையின் தடித்த பகுதியில் இருந்து தொடங்க வேண்டும் . அதில் முதல் இரண்டு கீற்றை விடுத்து மூன்றாம் கீற்றை கால் [[விரல்]] தூரத்தில் தடித்த மட்டை பகுதியை (அடிமட்டை) நோக்கி கீற்று ஈரை ஒடித்து மடக்க வேண்டும் . அவ்வாறு ஒடிக்கையில் கீற்றுகள் கிழிந்து விடாமல் பார்த்து கொள்ள வேண்டும் . பின் அதனை இரண்டாம் கீற்றின் மேல் பகுதியிலும் , முதல் கீற்றின் கீழ் பகுதியிலும் செல்லும் மாறு 25-30 கோண அளவில் (மட்டையில் இருந்து ) பின்ன வேண்டும் . அடுத்து நான்காம் கீற்றை விடுத்து ஐந்தாம் கீற்றை , முன்னர் மூன்றாம் கீற்றை பின்னியது போல் , ஒரு கீற்றின் மேற் புறமும் , மறு கீற்றின் கீழ் புறமும் செல்லும் மாறு பின்ன வேண்டும் . அனைத்து கீற்றுகளும் இறுக்கமாக பின்னி , கடைசியில் நான்கு புறமும் கொசுறு போன்று உள்ளதை முடுச்சு போட்டு பின்னிய ஓலையை செவ்வக வடிவில் அமைக்க வேண்டும் .
 
==== தோரணம் ====
தோரணம் திருமண , திருவிழாக்களில் பயன்படுத்தும் ஒரு வகை அலைகாரப் பொருள் ஆகும் . கொழுந்தில் பறித்த தென்னங் கீற்றினை (பச்சை மஞ்சள் நிறத்தில் உள்ள ) நடுவிலே கீறி , கீறிய கீற்றை முடித்து போட்டு வைப்பார்கள் . இவ்வகையான் பின்னல் முறை தோரணங்களுக்கு பயன்படுவதினால் , இதனை தனித் தனி கீற்றுகளாகவே பயன்படுத்துவார்கள் .
 
==== கூடைகள் ====
கூடைகள் பன ஓலை அல்லது மட்டையை உரித்து செய்த பண்டங்கள் வைப்பதற்கு பயன்படுத்தும் ஒரு பொருளாகும் . ஓலைப் பொட்டிகளும் இதில் இருந்தே செய்கிறார்கள் . கூடைகளுக்கு கைப்பிடி இருக்கும் . பெரும்பாலான பொட்டிகளுக்கு கைப்பிடி இருக்காது .
 
==== விசிறிகள் ====
விசிறிகள் தென்னை ஓலையிலும் , பன ஓலையிலும் செய்வார்கள் . தென்னை ஓலையில் செய்யும் விசிறிகள் சத்திரமாக இருக்கும் , பனவோலையில் செய்யும் விசிறிகள் வட்ட வடிவில் இருக்கும் .
 
==வேறு பயன்பாடுகள் ==
வரிசை 40:
* படல்
* பாடை
* தடுக்கு
* புறக்காணி (பொடக்காளி)
* வேலி
* குடிசை
* கூரை
* சாளை
"https://ta.wikipedia.org/wiki/கீற்று_முடைதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது