முறம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
'''முறம்''' (அல்லது சுளகு, சொலவு) என்பது தானியங்களை [[உமி]], [[கல்]] போன்றவற்றிலிருந்து பிரித்தெடுக்க [[தமிழ்நாடு|தமிழகத்தின்]] கிராமப்புறங்களில் பயன்படுத்தப்படும் ஒரு எளிமையான கருவி. இவ்வாறு பிரித்தெடுப்பதை புடைத்தல் என்பர். விவசாயிகளின் இல்லங்களில் இது பரவலாக காணப்படும். [[மூங்கில்]] பட்டைகொண்டு முடையப்பட்டு விளிம்புகள் கட்டப்பட்ட முறம், அடிப்பகுதியில் அகண்டும் நுனிப்பகுதியில் குறுகியும் ஒரு முக்கோண வடிவில் இருக்கும். இலங்கையில் பனை ஈர்க்கு கொண்டு முடையப்பட்ட சுளகுகள் அதிகம் பயன்பாட்டில் உள்ளன. சில சமயங்களில் நெடுநாட்கள் பயனிலிருப்பதற்காக முறத்தின் அடிப்புறம் [[பசு]]வின் சாணத்தால் மெழுகப்பட்டிருக்கும்.
 
==பயன்படுத்தப்படும் முறை==
வரிசை 7:
==பண்டைய தமிழ் சமூகத்தில் முறம்==
 
* நெற்கலத்தில் முறத்தைக்கொண்டு [[நெல்]]லை ஒரு தமிழ்ப் பெண்மணி தூற்றிக்கொண்டிருந்த பொழுது, [[புலி]] ஒன்று தாக்க வந்ததாகவும், அந்த மங்கை புலிக்கு அஞ்சாமல் முறத்தைக் கொண்டே அதை விரட்டியதாகவும் ஒரு கதை வழக்கத்தில் உள்ளது. தமிழ்ப் பெண்களின் பயமின்மைக்கு எடுத்துக்காட்டாக இக்கதையை கூறுவர். இக்கதையின் நினைவாக புலியை முறம் கொண்டு ஒரு தமிழ் மங்கை விரட்டுவது போன்ற ஒரு சிற்பத்தை [[மாமல்லபுரம்|மாமல்லபுரத்தில்]] தமிழக அரசு நிறுவியுள்ளது.
 
* பண்டைய பாடல்களில் ஒன்று
<blockquote>இருந்து முகம் திருத்தி<br />
ஈரொடு பேன் வாங்கி<br />
விருந்து வந்தது என்று விளம்ப<br />
வருந்திமிக<br />
ஆடினாள் பாடினாள் <br />
ஆடிப் பழ'''முறத்தால்'''<br />
சாடினாள் ஓடோடத் தான்</blockquote>
 
[[பகுப்பு:கருவிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/முறம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது