உயிர்ச்சத்து பி12: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Maheswari (பேச்சு | பங்களிப்புகள்)
Maheswari (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 86:
 
==பித்தபாண்டுவின் சிகிச்சை வரலாறு==
பி12 பற்றாக்குறை தான் [[பித்தபாண்டு]]வுக்கு காரணமாகும். மருத்துவத்தில் இந்த நோய் முதலில் நோய்முதல் அறிய முடியாத பொதுவாக-மரண அபாயமுள்ள நோயாகத் தான் குறிப்பிடப்பட்டது. இதற்கான சிகிச்சை மருத்துவம் தற்சமயமாய் கண்டறியப்பட்டதாகும். [[ஜார்ஜ் விப்பில்]] விலங்குகளில் ரத்தப்போக்கை ஏற்படுத்தி சோகையை செயற்கையாகத் தூண்டிக் கொண்டிருந்தார். பின் அந்த விலங்குகளுக்கு பல்வேறு வகையான உணவுகளைக் கொடுத்து ஆய்வு செய்து எந்த உணவுகள் அனீமியாவில் இருந்து துரித நிவாரணம் பெற வகை செய்கிறது என்பதை அவர் ஆய்வு செய்து கொண்டிருந்தார். இந்த செயல்முறையின் போது, பெருமளவில் ஈரலை செலுத்துவது மிக துரிதமாக ரத்த இழப்பு சோகையைக் குணப்படுத்துவதை அவர் கண்டறிந்தார். இதனால், அந்த சமயத்தில் காரணமும் தெரியாத சிகிச்சையும் இல்லாதிருந்த இந்த பித்தபாண்டு நோய்க்கு ஈரல் செலுத்துவதை முயற்சி செய்யலாம் என்று அவர் அனுமானித்தார். இதனை அவர் முயற்சி செய்து பார்த்ததோடு 1920களில் வெற்றியின் அறிகுறிகளையும் எட்டியிருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து கவனமாய் செய்த மருத்துவ ஆய்வுகளின் பின், [[ஜார்ஜ் மினாட்]] மற்றும் [[வில்லியம் மர்பி]] நாய்களில் சோகையைக் குணப்படுத்திய ஈரல் உட்பொருளை தனியாக பிரித்து அடையாளம் காண தலைப்பட்டனர். அது இரும்பு என்று அவர்கள் கண்டுபிடித்தனர். ''மனிதர்களில்'' பித்தபாண்டுவைக் குணப்படுத்திய, பகுதியாய் பிரித்தெடுக்கப்பட்ட நீரில்-கரையும் ஈரல்-உட்பொருள் முற்றிலும் வேறுபட்ட இன்னொன்று - அது பயன்படுத்தப்பட்ட சூழலில் நாயினத்தின் மீது எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை என்பதையும் அவர்கள் கூடுதலாய் கண்டுபிடித்தனர். 1926 ஆம் ஆண்டில் மினாட் மற்றும் மர்பி இந்த பரிசோதனைகள் குறித்து தெரிவித்தவை தான் இந்த நோய் குறித்த உண்மையான முன்னேற்றத்தை அடையாளம் காட்டின. ஆனாலும்இருப்பினும் நோயாளிகள் தொடர்ந்து பல வருடங்களுக்கு பச்சையாக ஈரலைச் சாப்பிடடுவதும் அதன் சாற்றை அருந்துவதும் அவசியமாய் இருந்தது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/உயிர்ச்சத்து_பி12" இலிருந்து மீள்விக்கப்பட்டது