பதுருப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Fasly (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 16:
}}
{{Islam}}
'''பத்ர் போர்''' (''Battle of Badr'', {{lang-ar|غزوة بدر}}, [[மார்ச் 17]], [[கிபி]] [[624]]) [[இசுலாமிய வரலாறு|இசுலாமிய வரலாற்றில்]] முஸ்லிம்கள் [[இசுலாம்|இசுலாத்தின்]] விரோதிகளை இராணுவ ரீதியாக எதிர்த்துப் போராடிய முதலாவது போர் ஆகும். இந்தப் போர் தெற்கு [[அரேபியா]]வின் (இன்றைய [[சவுதி அரேபியா]]) ஹெஜாஸ் பகுதியில் [[ஹிஜ்ரி]] 2-ஆம் ஆண்டு [[ரமழான்]] பிறை 17-ல் [[வெள்ளிக்கிழமை]] நடைபெற்றது. [[மெக்கா]]வில் இசுலாத்தை எதிர்த்த [[குறைசி]]யர்களுடன் இடம்பெற்ற இப்போர் [[முகம்மது நபி]] அவர்களுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. முஸ்லிம்கள் பத்ர் யுத்தத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையோடும் ஆயுதப் பலத்தோடும் வெற்றி பெற்றமைக்கான அடிப்படைக் காரணம் அவர்களிடம் காணப்பட்ட ஈமானிய பலமும் இறைவனின் உதவியுமே என இசுலாமிய வரலாற்றில் குறிக்கப்பட்டுள்ளது. [[குரான்|குர்ஆனில்]] விவரிக்கப்பட்ட ஒரு சில சமர்களில் பத்ர் போரும் ஒன்றாகும்.
'''பத்ர் போர்''' (''Battle of Badr'', {{lang-ar|غزوة بدر}}, [[மார்ச் 17]], [[கிபி]] [[624]]) [[இசுலாமிய வரலாறு|இசுலாமிய வரலாற்றில்]] மிக அறியப்பட்ட முக்கியமான யுத்தம் ஆகும். யுத்தத்திற்கான எந்தவித முன்னேற்பாடுகளும் இல்லாமல் [[அல்லாஹ்]]வை மட்டுமே நம்பியிருந்தனர் [[முஸ்லிம்]]கள். அல்லாஹ்விடமே உதவியும் கேட்டனர்.யாரஸூலல்லாஹ் நீங்கள் கூறினீர்களானால் நாங்கள் கடலில் மூழ்கவும் தயாராக உள்ளோம். அல்லாஹ்வையும் அவனுடைய மார்க்கத்தையும் பொய்யாக்குபவர்களோடு நிச்சயமாக நாங்கள் போர் புரிய தயாராக உள்ளோம் என்று ஸஹாபாக்கள் கூறினார்கள்.எந்தவித முன்னேற்பாடுகளும் இல்லையென்று சிறிதும் கவலைப்பட வில்லை ஸஹாபாக்கள். அவர்கள் அல்லஹ்வையே நம்பியிருந்தார்கள். இந்தப் போர் இசுலாமிய வரலாற்றில் முதல் போராகும்.
 
இப்போருக்கு முன்னரும், முஸ்லிம்களும் குறைசியர்களும் பல சிறிய சமர்களில் 623 இன் கடைசிப் பகுதியிலும் 624 இன் முதற் பகுதியிலும் ஈடுபட்டிருந்தனர். ஆனாலும் பத்ர் என்ற இடத்தில் இடம்பெற்ற போரே இவ்விரண்டு படையினருக்கும் இடையில் இடம்பெற்ற பெரும் சமர் ஆகும். முகம்மதுவின் நன்கு ஒழுங்குபடுத்தப்பட்ட படையினர் மெக்காவின் படையினரை ஊடறுத்து பல குறைசித் தலைவர்களைக் கொன்றனர். மெக்காவில் உள்ள எதிரிகளை அழிப்பதற்கு இப்போரை அன்றைய முஸ்லிம்கள் ஒரு திருப்புமுனையாகக் கண்டனர். அக்காலகட்டத்தில் அரேபியாவின் ஒரு பலம் வாய்ந்ததும், செல்வச் செழிப்பு மிக்கதாகவும் திகந்த நகரமாக மெக்கா விளங்கியது. முஸ்லிம்களின் இராணுவ பலத்தைவிட மூன்று மடங்கு படையினரை மெக்கா குறைசியர்கள் கொண்டிருந்தனர். முஸ்லிகள் பத்ர் போரில் பெற்ற வெற்றி அரேபியாவில் ஒரு புதிய வல்லரசு உருவாகி வருவதை ஏனைய இனத்தவருக்கு அறிவுறுத்தியது. இது [[மெதினா]]ல் பிரிந்திருந்த பிரிவினரிடயே முகம்மது அவர்களின் தலைமைத்துவத்துக்கு உறுதியாக அமைந்தது.
 
==போருக்கான காரணம்==
[[படிமம்:Slide15.JPG‎‎|left|thumb|300px|]]
பத்ர் யுத்தம் நடைபெறுவதற்கு பல காரணங்கள் அப்போது தொழிற்பட்டிருப்பதாக வரலாற்றின் ஊடாக விளங்கிக் கொள்ளலாம். மதீனாவில் இஸ்லாம் தனிப்பெரும் சக்தியாக வளர்ந்து வந்தமை எதிரிகளால் விரும்பப்படவில்லை. நாளுக்கு நாள் இசுலாம் மிக வேகமாக பரவி வருவதனை அவர்கள் அவதானித்தனர். இப்பரவல் முழு அரபு உலகத்தையும் மிக வேகமான முறையில் ஆட்கொண்டு வரும் என்று அவர்கள் கருதினர். இதனால் தமது அரசுகளின் செல்வாக்கு இல்லாமல் சென்று விடும் என்று எதிரிகள் அஞ்சினர்.
 
மக்காவின் குறைசியர்கள் நபியவர்களோடு போர் ஒன்றை மேற்கொள்வதற்கு இன்னொரு முக்கியமான காரணம் நபியவர்கள் மதீனாவில் தம்மை திரப்படுத்திக்கொண்டு மக்காவில் இருந்து [[சிரியா]]வை நோக்கிச் செல்லும் குறைசி வணிகர்களைத் தடுத்து நிறுத்தி மக்கா வாசிகளின் பொருளாதாரப் பலத்தை அழித்து விடுவார் என்ற அச்சமாகும்.
 
அத்தோடு நபியவர்களது பிரசாரம் மக்காவையும் புனித [[கஃபா]]வையும் இலக்காகக் கொண்டிருக்கிறது என்பதையும் எதிரிகள் அவதானித்தனர். நபி (ஸல்) அவர்கள் மக்காவை விட்டு வெளியேறும் போது கஃபாவை பார்த்து அழுததையும் எதிரிகளால் மறக்கக் கூடிய நிகழ்ச்சியாக இருக்கவில்லை. இதனால் முகம்மத் அவர்கள் மதீனாவில் முழுமையாக தமது கால்களை ஊன்றிக்கொள்ள முன்னர் அவரை இராணுவ, பொருளாதார இழப்புகளுக்கு உள்ளாக்க வேண்டும் என்று எதிரிகள் சிந்தித்தனர்.
 
இசுலாத்தின் மீது எதிரிகளது நடவடிக்கைகளை மிக நுணுக்கமாக அவதானித்து வந்த நபி (ஸல்) அவர்கள் நக்லா எனும் இடத்திற்கு ஒரு கண்காணிப்புக் குழுவை அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ்யின் தலைமையில் அமர்த்தினார்கள். எதிரிகளது நடவடிக்கைகளை அவதானித்து வரவேண்டும் என்பதே இவர்களுக்கான கட்டளையாக இருந்தது. எனினும் 12 பேர்களைக் கொண்ட இக்குழுவினர் உமர் பின் கழ்ரமி என்பவருடன் வந்த ஒரு வர்த்தகக் குழுவைத் தாக்கினர். அதனால் கழ்ரமி கொலை செய்யப்பட்டார். இந்நிகழ்வு நபியவர்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை. எனினும் இஸ்லாத்தின் எதிரிகள் தாம் ஏற்கனவே எதிர்பார்த்த விடயங்கள் நடைபெறுவதாக முடிவு கட்டி முஸ்லிம்களுக்கு எதிராகப் போராடத் தீர்மானித்தனர்.
 
==போர் நிகழ்வு==
[[Image:Badr campaign.svg|thumb|left|250px|பத்ர் போர் நிகழ்ந்த இடம்]]
மேலே விபரிக்கப்பட்ட காரணிகள் போர் ஒன்றுக்கான சூழ்நிலை எதிரிகளிடத்தில் உருவாகி வந்த போது அபூசூபியான் 50 ஆயிரம் [[தினார்]] பெறுமதி கொண்ட வர்த்தக பண்டங்களோடு சிரியாவில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தான். ஏற்கனவே நடந்த நிகழ்வுகளை வைத்து முகம்மதுவின் ஆதரவாளர்கள் தன்னையும் தாக்கி வர்த்தக பொருட்களையும் கொள்ளை அடிக்கலாம் என்ற அச்சம் அபூசூபியானிடம் ஏற்பட்ட போது, மக்காவுக்கு இது பற்றி செய்தி அனுப்பினான். மக்காவில் இச் செய்தி மிக வேகமாகப் பரவியது. பெரும் செல்வந்தர்களது சொத்துகள் அபூசூபியானிடம் இருந்ததனால் இது ஒரு தேசிய பிரச்சினையாக மாறவே அவர்கள் தலைவர்களை ஒன்றிணைத்து மதீனா மீது படை நடத்தி வரத் தொடங்கினர். 1000 பேர் அவர்களது படைப் பிரிவில் உள்ளடக்கப்பட்டிருந்தனர். 100 முக்கியமான தலைவர்களும் அவர்களில் காணப்பட்டனர். உத்பா இப்னு ரபீ ஆ என்பவரே அக்குழுவுக்கு தலைமை தாங்கினார்.
 
ஹிஜ்ரி 2 ஆம் ஆண்டு 12 ஆவது நோன்பில் நபி (ஸல்) அவர்கள் ஒரு சிறு குழுவினரோடு குறைசியர்களது படை வந்து கொண்டிருந்த தென் மேற்குத் திசையை நோக்கி முன்னேறினார்கள். 16 ஆம் நாள் மதீனாவில் இருந்து 80 [[மைல்]] தொலைவில் இருந்த பத்ர் என்ற இடத்தை வந்து சேர்ந்தார்கள். [[பள்ளத்தாக்கு|பள்ளத்தாக்கின்]] அடுத்த முனையில் எதிரிகள் வந்து சேர்ந்தனர்.
 
மறுநாள் காலை அதாவது நோன்பு 17 இல் எதிரிகளோடு யுத்தம் ஆரம்பமாகியது. போர் மிகவும் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் இறைவனிடம் மிகவும் உருக்கமான முறையில் பின்வருமாறு பிரார்த்தனை புரிந்தார்கள். ''இறைவா உன் தூதரை பொய்யர் என்று நிரூபிக்க ஆணவத்தோடும் ஆயுத பலத்தோடும் இக்குறைசியர் வந்திருக்கின்றனர். நீ வாக்களித்திருக்கும் உதவியை இப்போது தந்து விடு. இன்று இந்த சின்னஞ்சிறு குழு அழிந்து விட்டால் இப்பூமியில் உன்னை வணங்க வேறு யாரும் இருக்க மாட்டார்கள்.''
இந்த ‘பத்ர்’ போர் வரலாற்றின் -[[ஹிஜ்ரி]] 2-ஆம் ஆண்டு [[ரமழான்]] பிறை 17-ல் வெள்ளிக் கிழமை நடைபெற்றது.நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் இரு கரமேந்துகிறார்கள் யாஅல்லாஹ் உன்னையும் உன்னுடைய மார்க்கத்தையும் பொய்ப்பித்தவர்களாகவும் கர்வம் கொண்டவ்ர்களாகவும் போர் புரிய வந்திருக்கிறார்கள். உன் உதவியை என் பக்கம் காட்டுவாயாக இந்த காலைப் பொழுதிலேயெ அவர்களை அழித்து விடுவாயக என்று பிரார்த்தித்தார்கள். அல்லாஹ் வானவர்களைக் கொண்டு உதவினான். ஸஹாபிகளோடு சேர்ந்து மலக்குமார்களும் போரிட்டார்கள். தாக்குதலின் வேகத்தைப் பற்றி [[குறைசி]]களின் படையில் இருந்த அபூஜஹ்லின் மகன் இக்ரிமா (ரலி) அவர்கள் (அப்பொழுது இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டிருக்கவில்லை பின்னர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள்) இவ்வாறு கூறினார்கள், அன்றைய யுத்தத்தின் போது ஒருவரின் தலை வெட்டி கேழே விழும் ஆனால் யார் வெட்டினார்கள் என்று தெரியவில்லை. சுராக்கா இப்னு மாலிக் இன் உருவத்தில் போருக்கு வந்திருந்த இப்லீஸ் மலக்குமார்கள் போரில் நேரடியாக களத்தில் இருப்பதைக் கண்டு போர்க்களத்தை விட்டு சென்று கடலில் குதித்து விட்டான்.
 
இவ்வாறு அவருடைய தோளில் இருந்த போர்வை விழும் வரை பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தார்கள். இதனைக் கண்ட அபூபக்கர் (ரழி) அவர்கள் நபியவர்களிடம் வந்து, ‘’அல்லாஹ்வின் தூதரே! உங்கள் இறைவனிடம் நீங்கள் இறைஞ்சியது போதும் நிச்சயமாக அவன் உங்களுக்கு உதவி செய்வான்,'' என்று கூறி ஆறுதல் படுத்தினார்.
 
இப்போராட்டத்தில் முஹாஜிர் (மக்காவிலிருந்து மதீனாவுக்கு சென்ற முஸ்லிம்கள்) தமது பெற்றோர்களையும் பிள்ளைகளையும் சகோதரர்களையும் எதிர்த்துப் போராட வேண்டிய ஒரு சோதனைக்கு ஆளானார்கள். இப்படியான சோதனையிலும் அவர்கள் இந்த யுத்தத்துக்கு முகம் கொடுத்த போது அல்லாஹ் அவர்களுக்கு வெற்றியை வழங்கினான். இந்த யுத்தத்தில் முஸ்லிம்கள் கொள்கைக்காக இரத்த உறவுகளை களத்தில் சந்தித்தனர். இரத்த உறவுமுறையை விடவும் அதிக பலம் வாய்ந்தது இஸ்லாமிய கொள்கை என்பதை முஸ்லிம்கள் களத்தில் நிரூபித்தனர்.
நபி(ஸல்) அவர்களும் ஸஹாப்பாக்களும் ‘அஹத்’ ‘அஹத்’ என்று கோசமிட்டவர்களாக போரில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள்.
போர் மும்முரமாக நடை பெற்றுக்கொண்டிருக்கும் போது குறைசிகளுக்கு தலைமை தாங்கிய அபூ ஜஹ்ல், முஆத் இப்னு அம்ரிப்னு ஜமூஹ் (ரலி) மற்றும் முஅவ்வித் இப்னு அப்ரா (ரலி) ஆகிய இரு சிறுவர்களின் வாள் வெட்டுக்கு இறையாகின்றான். இந்த போரின் போது முஅவ்வித் இப்னு அப்ரா (ரலி) அவர்கள் சஹீதாகின்றார்கள்.அன்று [[முகம்மது (ஸல்)]] அவர்களும், ஸஹாபாத் தோழர்களும் புனித ரமழான் மாத நோன்பையும் நோற்றவர்களாக யுத்த களத்தில் இறங்கினர். காரணம் உயிரிலும் மேலானதாக புனித தீனுல் இஸ்லாம் மார்க்கம் விளங்கியது. போதிய முன்னேற்பாடுகள் எதுவிம் இல்லாமல் [[அல்லாஹ்]]வை மட்டும் நம்பியிருந்த முஸ்லீம்கள் சுமார் 313 பேர்கள், 1000 பேர் கொண்ட [[குறைசி]]களை களத்தில் எதிர் கொண்டு வெற்றி கண்டனர்.
 
உண்மையில் இந்தக் களத்தில் கொள்கைக்காக இரத்த உறவுகள் தமக்குள் மோதிக் கொண்டன. தந்தையும் மகனும் மோதிக்கொண்டனர் , சகோதரர்கள் மோதிக்கொண்டனர், நண்பர்கள் மோதிக்கொண்டனர். இந்த யுத்தத்தில் [[முஸ்லிம்]]கள் கொள்கைக்காக இரத்த உறவுகளை களத்தில் சந்தித்தனர். இரத்த உறவுமுறையை விடவும் அதிக பலம் வாய்ந்தது [[இஸ்லாமிய]] கொள்கை என்பதை [[முஸ்லிம்]]கள் களத்தில் நிரூபித்தனர்.
 
==உசாத்துணை==
*[http://www.thinakkural.com/publication_west/content.php?contid=4752&catid=9 இஸ்லாமிய வரலாற்றில் இடம்பெற்ற முதலாவது யுத்தம் "பத்ர்”], [[தினக்குரல்]], ஆகத்து 28, 2010
 
{{stub}}
[[பகுப்பு:இசுலாமிய வரலாறு]]
[[பகுப்பு:போர்கள்]]
 
{{Link FA|id}}
"https://ta.wikipedia.org/wiki/பதுருப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது