குடுமியான்மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
குடுமியான்மலை, [[புதுக்கோட்டை|புதுக்கோட்டையிலிருந்து]] ( [[தமிழ் நாடு]], [[இந்தியா]]) 20 [[கி.மீ]]. தொலைவில் உள்ள சிற்றூர். இங்குள்ள குகைகளில், [[பல்லவர்]] கால (கி.பி.ஏழாம் நூற்றாண்டு) [[இசைக் குறிப்புகள்]] பொறிக்கப்பட்டுள்ள [[கல்வெட்டு|கல்வெட்டுகள்]] கிரந்த எழுத்தில் காணக்கிடைக்கின்றன. இங்குள்ள கோயிலின் ஆயிரம் கால் மண்டபமும் புகழ் பெற்றது ஆகும். [[தமிழ்நாடு வேளாண் பலகலைக்கழகம்|தமிழ் நாடு வேளாண் பலகலைக்கழகத்தின்]] பண்ணையும் (
== வரலாறு ==
வரிசை 10:
இந்தக் கல்வெட்டுகள், குடிமியான்மலை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளின் வரலாற்றை உறுதி செய்ய உதவுகின்றன. இசைக் கல்வெட்டுகளும் பிற பாண்டியக் கல்வெட்டுகளும் (ஏழு-எட்டாம் நூற்றாண்டு), குடுமியான்மலை கோயில் மற்றும் நகரமைப்பின் தொடக்கத்தை ஏழாம் நூற்றாண்டின் ஆரம்பத்திற்கு இட்டு செல்கின்றன. மேலக் கோயிலில் உள்ள, பாறையைக் குடைந்து கட்டப்பட்ட இந்த சிவாலயம் [[சைவ சமயம்|சைவ சமய]] மீட்சிக்குப் பிறகு கட்டப்பட்டிருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. இங்குள்ள சிற்பங்களில் ஒன்றில், [[சிவன்]] வீணை வாசிப்பது போல் காட்சியளிக்கிறார் (வீணா-தாரா).(சிவன், வீணை வாசிப்பதில் விருப்பமுடைய கடவுள் என்று நம்பப்படுகிறது). இத்தகைய தனித்தன்மை வாய்ந்த இசைக்குறிப்புகள் குடுமியான்மலையில் பொறிக்கப்பட்டிருப்பதை கருத்தில் கொண்டு, பழங்காலத்தில் இவ்விடம் இசை அறிஞர்களும் மாணவர்களும் அடிக்கடி வருகை தந்திருக்கக் கூடிய பண்பாட்டு மையமாகத் திகழ்ந்திருக்க வாய்ப்புண்டு எனக் கருதப்படுகிறது.
ஏகாதிபத்திய [[சோழர்|சோழப்]] பேரரசின் தொடக்க காலம் முதல் தான், இக்கோயிலின் வளர்ச்சி மற்றும் கட்டுமான நடவடிக்கைகள் குறித்த தொடர்ச்சியான கல்வெட்டு ஆதாரங்கள் காணக் கிடைக்கின்றன. தொடக்க கால சோழர் கல்வெட்டுகள் (கி.பி ஒன்பதாம்-பத்தாம் நூற்றாண்டு) மேலக்கோயிலிலோ இரண்டாம் [[பிரகாரம்|பிரகாரத்தின்]] சுவர்களிலோ காணப்படுகின்றனவே தவிர முதன்மைக் கோயிலில் (Main shrine) காண இயலவில்லை. இதனால், இக்கோயில் மாற்றி வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும் (remodelled) என்று அறியப்படுகிறது. கட்டிடக்கலை பாணியை கருத்தில் கொண்டு பார்க்கையில், முதலாம் மாரவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் தான் இந்த மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்றிருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது.
கி.பி 1215 முதல் 1265 வரை, ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலம், மறு சீரமைப்பு பணிகள் நடை பெற்றன. பழைய மண்டபங்கள் புதுப்பிக்கப்பட்டதுடன் புதிய கட்டுமானப் பணிகளும் நடைபெற்றன. இந்தப்பணியில் கோனாட்டை சேர்ந்த நாடுகளும் (வட்டார ஊர்கள் ஒன்றிணைந்த அமைப்பு) நகரங்களும் (வணிகருகளின் அமைப்பு) ஊர்களும் படைப்பற்றுகளும் (Cantonments) பங்கு கொண்டன. ஈகை உள்ளம் கொண்ட தனி நபர்களும் உதவினர். 24 adam-s (one league) கொண்ட ஒவ்வொருவருக்கும் வரிப்பணம் விதிக்கப்பட்டு கோயில் பணிக்காகத் திரட்டித் தரப்பட்டது. பணம் தவிர்த்த இன்ன பிற பங்களிப்புகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
வரிசை 38:
=== மேலக்கோயில் ===
TEMPLE ARCHITECTURE
|