'''பாரூக்பாரூக்கு''' (''Baruch'') என்னும் நூல் [[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டுப்]] பகுதியாகிய [[இணைத் திருமுறை நூல்கள்|இணைத் திருமுறைத்]] தொகுப்பைச் சேர்ந்த ஏழு நூல்களுள் ஒன்றாகும்<ref>[http://en.wikipedia.org/wiki/Baruch பாரூக்பாரூக்கு நூல்]</ref>. இந்நூல்கள் [[கத்தோலிக்கம்|கத்தோலிக்க திருச்சபையாலும்]] [[மரபுவழி திருச்சபை|மரபுவழி திருச்சபையாலும்]] பிற விவிலிய நூல்களைப் போன்று [[இறைஏவுதல்|இறைஏவுதலால்]] எழுதப்பட்டவையாக ஏற்கப்பட்டுள்ளன.
==பாரூக்பாரூக்கு நூல் பெயர்==
'''பாரூக்பாரூக்கு''' என்னும் இந்நூல் [[செப்துவசிந்தா]]<ref>[http://en.wikipedia.org/wiki/Septuagint செப்துவசிந்தா]</ref> பதிப்பில் கிரேக்க மூல மொழியில் Barùch (Βαρούχ) என்றும் இலத்தீனில் Baruch என்றும் உள்ளது. எபிரேயத்தில் இது בָּרוּךְ (Barukh, Bārûḵ) என்னும் பெயர் ஆகும். இதற்கு "பேறுபெற்றவர்" என்பது பொருள்.
பாரூக்பாரூக்கு நூல் ஏழு [[இணைத் திருமுறை நூல்கள்|இணைத் திருமுறை]] விவிலிய நூல்களுள் ஒன்று ஆகும். விவிலியத்தின் பகுதியாக இந்நூல் கி.பி. 397இல் கார்த்தேசு (Carthage) நகரில் நடந்த சங்கத்திலும்<ref>[http://www.bible-researcher.com/carthage.html கார்த்தேசு சங்கம்]</ref>, பின்னர் [[திரெந்து பொதுச் சங்கம்|திரெந்து சங்கத்திலும்]] (கி.பி. 1546) <ref>[http://www.bible-researcher.com/trent1.html திரெந்து பொதுச் சங்கம்]</ref>அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டது.