ஆர்மீனிய இனப்படுகொலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.2) (தானியங்கிஇணைப்பு: af, an, ar, az, be, bg, bs, ca, cs, cy, da, de, el, eo, es, et, fa, fi, fr, ga, gl, he, hr, hu, hy, id, it, ja, ka, ko, ku, lt, lv, mk, ms, nl, no, pl, pt, ro, ru, scn, sh, simple, sl, sq, sr |
No edit summary |
||
வரிசை 1:
[[Image:Marcharmenians.jpg|thumb|260px|ஏப்ரல் 1915 இல் ஆர்மீனிய மக்கள் துருக்கிய இராணுவத்தினரால் மெசிரே சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்படுகின்றனர்.]]
'''ஆர்மீனிய இனப்படுகொலை''' (''Armenian Genocide'') அல்லது '''ஆர்மேனிய பெரும் இனவழிப்பு''' என்பது [[ஒட்டோமான்]] பேரரசுக் காலத்தில் [[ஆர்மீனியா|ஆர்மீனியர்]]கள் வலிந்து திட்டமிடப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு ஆகும். இது [[முதலாம் உலகப் போர்|முதலாம் உலகப் போருக்குப்]] பின்னர் நிகழ்ந்தது<ref>[http://www.armenian-genocide.org/Affirmation.169/current_category.6/affirmation_detail.html United Nations Sub-Commission on Prevention of Discrimination and Protection of Minorities, July 2, 1985].</ref>. பெரும் படுகொலைகளாகவும், சாவுக்கு இட்டுச்சென்ற வெளியேற்றங்களாகவும் இது நிகழ்ந்தது. இதில் ஒன்றில் இருந்து ஒன்று அரை மில்லியன் ஆர்மேனியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இக்காலப்பகுதியில் ஆர்மீனியர்களைத் தவிர அசிரியர்கள், மற்றும் கிரேக்கர்களும் ஒட்டோமான் பேரரசினால் படுகொலை செய்யப்பட்டனர்<ref>[http://www.genocidescholars.org/images/Resolution_on_genocides_committed_by_the_Ottoman_Empire.pdf Resolution by the International Association of Genocide Scholars]</ref>.
இவ்வினப்படுகொலை [[1915]] ஆம் ஆண்டு [[ஏப்ரல் 24]] ஆம் நாள் ஆரம்பமாகியது. இந்நாளில் ஆர்மீனியக் கல்விமான்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் 250 பேரை ஒட்டோமான் இராணுவத்தினர் [[இஸ்தான்புல்|கொன்ஸ்டண்டீனப்போல்]] நகரில் கைது செய்தனர்<ref>[http://concise.britannica.com/ebc/article-9368294/Istanbul Britannica, Istanbul]:''When the Republic of Turkey was founded in 1923, the capital was moved to Ankara, and Constantinople was officially renamed Istanbul in 1930.''</ref>. அதன் பின்னர் இராணுவத்தினர் ஆர்மீனியப் பொதுமக்களை அவர்களின் இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றி பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள பாலைநிலத்துக்கு (தற்போதைய [[சிரியா]]) நடைப்பயணமாக அழைத்துச் சென்றனர். அவர்களுக்கு உணவோ நீரோ வழங்கப்படவில்லை. வயது, மற்றும் பால் வேறுபாடின்றிப் பலர் படுகொலை செய்யப்பட்டனர். பெரும்பான்மையான ஆர்மீனியர்கள் புலம்பெயர்ந்து பல நாடுகளில் வசிப்பது இப்படுகொலைகளில் இருந்து தப்பியவர்களே.
ஒட்டோமான் பேரரசின் பின்னர் ஆட்சிக்கு வந்த தற்போதைய [[துருக்கி|துருக்கிக் குடியரசு]] இந்நிகழ்வை இனப்படுகொலை எனக் கூறுவதை மறுத்து வருகிறது<ref name="BBC News">{{cite news |url=http://news.bbc.co.uk/2/hi/europe/6045182.stm |archiveurl=http://web.archive.org/web/20070301211630/http://news.bbc.co.uk/2/hi/europe/6045182.stm |archivedate=2007-03-01 |title=Q&A: Armenian 'genocide' |author=BBC News Europe |publisher=BBC News |accessdate=2006-12-29 |date=2006-10-12}}</ref>. அண்மைக் காலத்தில், இந்த இனப்படுகொலைகளை அங்கீகரிக்கப் பல நாடுகளும் அமைப்புகளும் துருக்கியைக் கோரி வருகின்றன. இது வரையில் 20 நாடுகள் இக்காலப்பகுதியில் இடம்பெற்ற படுகொலைகள் இனப்படுகொலைகளே என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளன<ref>[http://www.nytimes.com/ref/timestopics/topics_armeniangenocide.html Armenian Genocide of 1915: An Overview], ''The New York Times''</ref>.
==மேற்கோள்கள்==
<references/>
[[பகுப்பு:இனப்படுகொலைகள்]]
[[பகுப்பு:ஆர்மீனியா]]
[[பகுப்பு:துருக்கி]]
[[af:Armeense volksmoord]]
|