மாயை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: மாயை என்பது இந்தியத் தத்துவங்களில் பெரிதும் தாக்கத்தை ஏற்ப... |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
09:44, 1 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்
மாயை என்பது இந்தியத் தத்துவங்களில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் பதங்களில் ஒன்று. இது வேதாந்தம் சிறப்பாக சங்கர வேதாந்தம், சைவ சித்தாந்தம் என்பவற்றில் முதன்மை பெறும் விடயமாகும்.
சங்கர வேதாந்தம்
சங்கர வேதாந்தத்தில் மாயை பெறும் இடம் இன்றியமையாததாகும். சங்கரர் மாயைக்கு பிரதான இடத்தைக் கொடுத்துள்ளார். பிரம்மம் உலகாகவும், ஆன்மாவாகவும் தோன்றுதற்கு மாயையே காரணம் என்கின்றார். மாயைக்கு இவர் கொடுத்த முக்கியத்தினாலேயே சங்கரரை 'மாயாவாதி' என்று அழைக்கும் மரபு உண்டு.