அபலா போஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 22:
==சமுதாயப்பணி==
 
அபலா போஸ் ஒரு கல்வியாளர் மட்டுமல்ல அந்தக் காலத்திலேயே பெரிய பெண்ணியவாதியும் கூட. பெண்களுக்குக் கல்வி தரும் நோக்கம் அவர்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணையைத் தேடித் தருவதற்கோ அல்லது அவர்களைப் புகுந்த வீட்டில் நல்ல மருமகளாக்குவதற்கோ இல்லை. ஆண்களைப் போல பெண்களுக்கும் மனமுண்டு, அவர்களுக்கு வெளித்தோற்றமும் உருவமும் இரண்டாம் பட்சந்தான். அதனால் அவர்களுக்கு ஆழ்ந்ததும் பரந்ததுமானதொரு கல்வி அவசியம் தரப்பட வேண்டுமென பிரபல ஆங்கிலப் பத்திரிக்கை ''மாடர்ன் ரெவியூவில்'' எழுதியிருந்தார். இவரது கருத்துக்கள்தான் இவருடன் பெத்தூன் பள்ளியில் இவருடன் படித்த காமினி ராயும் ஒரு பெண்ணியவாதியாகக் தூண்டுகோலாயிருந்தன.<ref name = "Ray"> Ray, Bharati, ''Women in Calcutta: the Years of Change'', in ''Calcutta The Living City'' Vol II, edited by Sukanta Chaudhuri, Oxford University Press, first published 1990, paperback edition 2005, pp36-39, ISBN 019563697 X.</ref>
 
அபலா போஸ் பெண்களுக்குக் கல்வி அளிப்பதற்கும் விதவைகளுக்குப் பண உதவி செய்வதற்கும் 1915ல் ''நாரி சிக்‌ஷ சமிதி'' என்ற அமைப்பை நிறுவினார். இந்த அமைப்பு கிராமப்புறங்களில் 200 பள்ளிகளைத் தொடங்கியது. இந்தப் பள்ளிகளுக்குத் தேவைப்பட்ட ஆசிரியர்களை உருவாக்க ''வித்யாசாகர் பானி பவன்'', ''மகில ஷில்பா பவன்'', ''பானி பவன் பயிற்சிப் பள்ளிகள்'' ஆகியவற்றை நிறுவி விதவைகளுக்கு ஆசிரியப் பயிற்சியளிக்க ஏற்பாடு செய்தார். தனது கணவரின் மறைவுக்குப்பின் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடையளித்து ''சகோதரி நிவேதிதா பெண்கல்வி நிதி''யை ஏற்படுத்தினார். அதன் மூலம் முதியோர் தொடக்கக் கல்வி மையம் நிறுவப்பட்டது. 1910 முதல் 1936 வரை ''பிரமோ பாலிக சிக்‌ஷாலாயா''வின் செயலராக இருந்தார்.
 
"https://ta.wikipedia.org/wiki/அபலா_போஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது