[[இந்தியச்இந்திய விடுதலைப் போராட்டம்]] நடந்து கொண்டிருந்த போது இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றான [[இந்திய தேசிய காங்கிரஸ்]] இந்த இயக்கத்தைத் தொடங்கியது. ஆங்கில ஆட்சியின்பால் கொண்ட அதிருப்தியின் காரணமாக, காங்கிரசை சேர்ந்த பலரும் வெறும் விண்ணப்பங்களையும் வேண்டுகோள்களையும் அரசுக்குச் சமர்ப்பிப்பதால் பெரிய மாறுதல் எதுவும் ஏற்படப் போவதில்லையென்றும், இதர பல நேரடி நடவடிக்கைளில் ஈடுபட்டுப் போராடுதல் அவசியம் என்றும் கருதிக்கொண்டிருந்தனர். அவ்வெண்ணப் போக்கின் பிரதிபலிப்பாக 1906-ஆம் ஆண்டு [[கல்கத்தா|கல்கத்தாவில்]] நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் [[தன்னாட்சி உரிமை|சுயராஜ்யம்]], சுதேசி, தேசியக்கல்வி, அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதுவே சுதேசி இயக்கம் தோன்றுவதற்குக் காரணமாக அமைந்தது.
[[மகாத்மா காந்தி]] காங்கிஸ் கட்சியின் தலைவரான பின், இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் புதியதோர் திருப்பு முனை ஏற்பட்டது. காந்தியடிகள் அந்நியராட்சியை எதிர்க்கப் பொது மக்களை ஒன்று திரட்டி, அவர்கள் ஆதரவோடு பல போராட்டங்களை நடத்தினார். [[சத்தியாக்கிரகம்|தனி நபர் சத்தியாக்கிரகம்]], [[உப்பு சத்தியாக்கிரகம்|உப்புச் சத்தியாக்கிரகம்]], [[உண்ணாநிலைப் போராட்டம்|உண்ணா நிலை அறப்போர்]] என்று அவர் நடத்திய போராட்டங்களில் ஒன்று சுதேசி இயக்கம்.