எம். வி. வெங்கட்ராம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "செளராட்டிரர்" (using HotCat) |
No edit summary |
||
வரிசை 1:
'''எம். வி. வெங்கட்ராம்''' ([[மே 18]], [[1920]] - [[ஜனவரி 14]], [[2000]]) தமிழ் சிறுகதை இலக்கிய வளர்ச்சிக்கு பங்களிப்பு நல்கிய தமிழக எழுத்தாளர். 16வது வயதில் முதன் முதலில் இவர் எழுதிய "சிட்டுக்குருவி" என்ற சிறுகதை [[மணிக்கொடி (இதழ்)|மணிக்கொடி]]யில் வெளியானது. [[1993]] ஆம் ஆண்டில் இவர் எழுதிய "காதுகள்" என்ற புதினத்திற்கு [[சாகித்ய அகாதமி விருது]] கிடைத்தது. "விக்ரஹவிநாசன்' என்ற புனைபெயரில் [[கவிதை]]கள் எழுதியுள்ளார்.
==வாழ்க்கைக் குறிப்பு==
[[1920]] ஆம் ஆண்டு [[கும்பகோணம்|கும்பகோணத்தில்]] [[சௌராஷ்டிர மொழி|சௌராஷ்டிர]]க் குடும்பத்தில் வீரய்யர்-சீதை அம்மாள் தம்பதிக்குப் பிறந்தார் வெங்கட்ராம். ஐந்தாம் வயதில் தாய்மாமன் வெங்கடாசலம்-சரஸ்வதி குடும்பத்தினர் இவரைத் தத்து எடுத்துக் கொண்டனர். [[பொருளாதாரம்|பொருளாதாரத்தில்]] இளமாணிப் பட்டம் எடுத்தவர். தொடக்கத்தில் [[பட்டு]]ச் சரிகை [[வணிகம்]] செய்து கொண்டு மணிக்கொடியில் சிறுகதைகள் எழுதினார். [[1941]]-[[1946]] காலப்பகுதியில், கலாமோகினி, கிராம ஊழியன், சிவாஜி ஆகிய இதழ்களிலும் அடிக்கடி எழுதி வந்தார். 1965-1970 காலகட்டத்தில் த்னது பட்டுச்சரிகை வணிகத்தைக் கைவிட்டு முழுநேர எழுத்தாளர் ஆனார். ஆங்கிலத்தில் இருந்து தமிழில் நிறைய மொழிபெயர்த்திருக்கிறார். [[1948]] இல் "தேனீ" என்ற இலக்கிய இதழைச் சில காலம் நடத்தினார். அவரது வீடு இலக்கியவாதிகளின் சந்திப்புவெளியாக எப்போதும் இருந்து வந்தது. இவரது சிறுகதைகள் முழுத்தொகுப்பாக எம்.வி.வெங்கட்ராம் கதைகள் என்ற பெயரில் வெளியாகியிருக்கின்றன.
மனைவி ருக்மணி அம்மாள், 4 மகன்கள், 3 மகள்களுடன் பெரிய குடும்பம் இவரது. 1952-53-களில் கவுன்சில் தேர்தலில் [[இந்திய காங்கிரஸ்|காங்கிரஸ்]] சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.
==எழுதிய நூல்கள்==
===புதினங்கள்===
*நித்தியகன்னி
*இருட்டு
*உயிரின் யாத்திரை
*அரும்பு
*ஒரு பெண் போராடுகிறாள்
*வேள்வித் தீ
*காதுகள்
===சிறுகதைத் தொகுதிகள்===
*மாளிகை வாசம்
*உறங்காத கண்கள்
*மோகினி
*குயிலி
*இனி புதிதாய்
*நானும் உன்னோடு
*அகலிகை முதலிய அழகிகள்
*எம்.வி. வெங்கட்ராம் கதைகள்
*முத்துக்கள் பத்து
*பனிமுடி மீது கண்ணகி
===கட்டுரைத் தொகுப்புகள்===
*என் இலக்கிய நண்பர்கள்
*நாட்டுக்கு உழைத்த நல்லவர் (40-க்கும் மேற்பட்ட நூல்கள்)
[[ஆனந்த விகடன்|ஆனந்த விகடனில்]] [[1970கள்|1970களில்]] "நஞ்சு" என்ற தொடர் நாவலை எழுதினார். "பாலம்" என்ற இதழின் கௌரவ ஆசிரியராக இருந்தபோது அதில் அதில் "காதுகள்' நாவலை எழுதினார். 1993-ஆம் ஆண்டு "காதுகள்' புதினத்துக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது. "வேள்வித்தீ" என்ற புதினம் சௌராட்டிர நெசவாளர்களின் வாழ்க்கையைப் பிரதிபலித்தது.
==விருதுகள்==
*தமிழக அரசு விருது (எம்.வி. வெங்கட்ராம் கதைகள்)
*சித்த சூரி ரத்ன விருது
*லில்லி தேவசிகாமணி விருது
*சாந்தோம் விருது
*புதுமைப்பித்தன் சாதனை விருது
==வெளி இணைப்புகள்==
* [http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Tamil_Mani&artid=358720&SectionID=179&MainSectionID=179&SEO=&Title="மணிக்கொடி "மணிக்கொடி' எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராம்], பா.முத்துக்குமரன், [[தினமணி]], சனவரி 9, 2011
* [http://e-arc.blogspot.com/2005/06/blog-post_111997256960572358.html எம்.வி.வெங்கட்ராம்]
* [http://www.viruba.com/atotalbooks.aspx?id=780 எம்.வி.வெங்கட்ராம் எழுதிய நூல்களின் தொகுப்பு]
வரி 13 ⟶ 50:
* [http://kundavai.wordpress.com/2008/02/11/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af-%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf/ நித்யகன்னி]
* [http://tamilnesam.blogspot.com/2008/05/blog-post_5336.html எம்.வி.வெங்கட்ராம்.....பின்னிரவின் மழை…]
▲ {{சாகித்திய அகாதமி விருது }}
{{சாகித்திய அகாதமி விருது}}
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:செளராட்டிரர்]]
[[பகுப்பு:1920 பிறப்புகள்]]
[[பகுப்பு:2000 இறப்புகள்]]
[[en:M. V. Venkatram]]
|