பச்சரிசி, வெல்லம்,நெய் என கூட்டுப் பொருட்களால் செய்யப்படும் '''அதிரசம்''', தமிழனின்தமிழர்களின் முக்கிய திண்பண்டமாகும். தமிழகத்தின் கிராமங்களில் அதிரசமும், முறுக்கும் திருவிழாக்களின் போது செய்யப்படுகின்றன.
==தேவையான பொருட்கள்==
அரிசி – 400 கிலோ கிராம்
வெல்லம் – 250 கிலோ கிராம்
தண்ணீர் – 3/4 டம்ளர்
நெய் – 1 மேசைக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
==செய்முறை==
தூள் [[வெல்லம்]] தண்ணீரில் கொதிக்கவைக்கப்பட்டு உருவாகும் பாகில், நீரில் ஊற வைத்து அரைக்கபபட்ட பச்சரிசி தூவப்பட்டு கிளறி எடுத்து, நெய்யினில் சுடப்பட்டு அதிரசம் செய்யப்படுகிறது,
பச்சரிசியை 4 மணி நேரம் ஊற வைத்து நீரை நன்கு வடிகட்டி ஒரு துணியில் பரப்பி விடவும். ரொம்ப காயக் கூடாது. பச்சரிசியை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
வெல்லத்தை தூளாக்கி தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு வடிகட்டிக் கொள்ளவும். பாகை பிசுக்கு பதம் வரும் வரை கொதிக்க விடவும். (கையில் எடுத்து தொட்டால் பிசுபிசுப்பாக இருக்கும்)
பிசுக்குப்பதம் வந்தவுடன் மாவை சிறிது சிறிதாக தூவி கட்டிகள் இல்லாமல் கிளறவும். மாவு நன்கு வெந்து குமிழ் குமிழாக வரும் போது நெய் ஊற்றி இறக்கவும்.
ஆறிய பின் காற்றுப் புகாத, ஈரமில்லாத டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளவும்.
தேவைப்படும் போது அதிசரங்களாகத் தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.இந்த மாவு 10 முதல் 15 நாட்கள் வரை கெடாது.