சிங்களத் திரைப்படத்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kalanithe (பேச்சு | பங்களிப்புகள்)
வார்ப்புரு
No edit summary
வரிசை 3:
 
== வரலாறு ==
[[1925]] ஆம் ஆண்டு [[இந்தியா]]வில் தயாரிக்கப்பட்டு [[சிங்கப்பூர்|சிங்கப்பூரில்]] வெளியிடப்பட்ட ''[[ராஜாகீய விக்ரமாயா'']] (''Royal adventure'') முதன் முதலில் தயாரிக்கப்பட்ட சிங்களத் திரைப்படமாகும். பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் [[1947]] ஆம் ஆண்டு தயாரித்து வெளியிடப்பட்ட ''[[கடவுனு பொறொண்டுவ'']] (''The Broken Promise'') திரைப்படமே முதன் முதலில் இலங்கையில் வெளியிடப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படம் இந்தியத் திரைப்படத் துறையினரால் வெளியிடப்பட்டதென்பதும் குறிப்பிடத்தக்கது. [[1948]] ஆம் ஆண்டு ''சிரிசேன விமலவீர'' வெளியிட்ட ''[[அம்மா'']] என்ற அவரது முதல்முதற் படம்திரைப்படம் மூலம் இந்தியத் திரைப்படத் துறைக்கும் சிங்களத் திரைப்படத் துறைக்கும் இருந்த ஒற்றுமைகளைக் கலைந்து புதிய திரைப்பட வகையினை வெளிப்படுத்தினார். [[1956]] ஆம் ஆண்டின் [[எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா|பண்டாரநாயக்கா]] ஆட்சிக் காலத்தில் புத்தமதத்தின் கூற்றுக்களுக்கு மதிப்பளித்து சிங்களத் திரைப்படங்கள் வெளிவந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் எடுக்கப்படும் திரைப்படங்களைப் போன்று காதல் கதைகள் அல்லாது பல வகைகளிலும் சிங்களத் திரைப்படங்கள் எடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. பிரபல இயக்குநரான [[லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ்]] வெளியிட்ட ''[[ரேகவா'']] (''The Line of Destiny'') திரைப்படத்தில் காதல் அற்ற பல விடயங்கள் ஆராயப்பட்டிருப்பதனையும் அறியலாம். மேலும் இத்திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்குகொண்ட முதல் சிங்களத் திரைப்படமென்பதும் குறிப்பிடத்தக்கது.
இத்திரைப்ப்டத்தினைத் தொடர்ந்து இவர் இயக்கிய [[கம்பெரலிய]] (Changing Village) டெல்லியில் நடைபெற்ற சர்வதேச திரைப்ப்ட விழாவில் கிராண்ட் பிரிக்ஸ் விருதைப் பெற்றது.மேலும் இவரின் படைப்பான [[நிதனய]] (Treasure)திரைப்படம் வெனிசில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் பங்குபெற்றதும் குறிப்பிடத்தக்கன.
*1960 ஆம் ஆண்டுகளில் காமினி பொன்சேக,டைடஸ் டொடவத்தே மற்றும் ஜி.டி.எல் பெரேரா போன்றவர்கள் சிங்களத் திரைப்படத்துறையினை வளர்த்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
*1970 ஆம் ஆண்டுகளிலில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியினால் சிங்களத் திரைத்துறையும் வளர்ச்சியினை எட்டியது.இக்காலகட்டத்தில் தர்மசேன பதிராஜ,வசந்த ஒபேய்சேகெர போன்றவர்களில் படைப்புகளும் சிங்களத் திரைத்துறைக்குப் பெரிதும் பலம் சேர்த்தது.
*1977 ஆம் ஆண்டின் பொருளாதார சட்டமைப்புகளினால் இந்திய மற்றும் வெளிநாடுகளின் படைப்புகழ் பெரிதும் வரவேற்கப்பட்டு தொலைக்காட்சி சேவைகளின் அதிகரிப்பும் ஏற்பட்டது.
*1983 இனக் கலவரங்கள் மற்றும் இலங்கையில் ஏற்பட்ட பதற்ற நிலையின் பின்பு சிங்களத் திரைத்துறை பெரிதும் பாதிப்பிற்குள்ளானது.மேலும் இச்சரிவினைச் சரிபடுத்தும் நோக்குடன் சில இயக்குநர்கள் சிங்களக் காமப் படங்களையும்
இயக்கி வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.
*1990 ஆம் ஆண்டுகளில் இளம் இயக்குநர்களிடமிருந்த சிறந்த படைப்பாளிகள் உருவாகினர்.இவர்களுள் பிரசன்ன விதானகெ குறிப்பிடத்தக்கவராவார்.இவர் இயக்கிய நான்காவது திரைப்படமான [[புர ஹண்ட கலுவார]] (Death On a Full Moon Day) திரைப்படம் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற அமியென்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் கிராண்ட் பிரிக்ஸ் விருதினைப் பெற்றது குறிப்பிடத்தக்கது
===இவற்றையும் பார்க்க===
*[[காமினி பொன்சேக]]
"https://ta.wikipedia.org/wiki/சிங்களத்_திரைப்படத்துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது