சென்னை முற்றுகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
 
==பின்னணி==
பிரித்தானியாவும் பிரான்சும் இந்தியாவில் தமது காலனியாதிக்கத்தைச் செலுத்த ஒருத்தருடன் ஒருத்தர் பெரும் போட்டி போட்டனர். 1746 இல் பிரஞ்சுப் படையினர் சென்னைச் சமரில் வெற்றியடைந்து பிரித்தானியாவிடம் இருந்து சென்னைப் பட்டினத்தைக் கைப்பற்றிக்கொண்டனர். ஆயினும் 1748 இல் மீளவும் சென்னைப் பட்டினம் பிரித்தானியர் வசமானது. 1757 காலப்பகுதியில் பிரித்தானியாவின் ஆதிக்கம் ஓங்கத் தொடங்கியது. இதற்கு முக்கிய காரணமாக ரொபேர்ட் கிளைவ் பெற்றுக்கொடுத்த வெற்றிகள் குறிப்பிடப்படுகின்றது. 1758 இல் பிரஞ்சுப் படையணி பாண்டிச்சேரியை [[லல்லி]] தலைமயில் வந்து அடைந்தது. வந்தடைந்த படையணி [[புனித டேவிட் கோட்டை]] உட்பட்ட பிரதேசங்களைக் கைப்பற்றத் திட்டமிட்டது<ref>Harvey p.236</ref>. லல்லியின் வருகை பிரித்தானியரை விழிப்படைய வைத்தது. அந்நேரத்தில் பிரிதானியப் படையின் பெரும்பகுதி [[வங்காளதேசம்|வங்காளத்தில்]] நிலைகொண்டிருந்தமை முக்கிய காரணமாகும் .<ref>Anderson p.417</ref>. லல்லி சென்னையை 1758இல் தாக்குவதாக உத்தேசித்திருந்தாலும் நிதி நெருக்கடி காரணமாக முதலில் தஞ்சாவூரைத் தாக்கி நிதிப் பிரைச்சனையைக் குறைத்துக் கொண்டு சென்னையைத் தாக்கத் திட்டமிட்டான். ஆயினும் தஞ்சாவூர் தாக்குதலும் வெற்றிகரமான முறையில் முடியவில்லை. இறுதியாக சென்னையை பிரஞ்சுப் படைகள் அடையும் போது டிசம்பர் மாதமாகி விட்டதுடன் இந்த நேர விரயத்திற்கு பருவநிலை மழையும் காரணமானது. இந்த நேர விரையத்தை பிரித்தானியப் படைகள் நன்கு பயன்படுத்தி தமது பாதுகாப்பைப் பெருக்கியதுடன் படைப்பலத்தையும் சுமார் 4000 வரை கூட்டிக்கொண்டனர். <ref>McLynn p.174-80</ref>.
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_முற்றுகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது