ஜோசப் லிஸ்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 24:
==நோய் நுண்மத் தடுப்புப்பணிகள்==
கிளாஸ்கோ தேசிய மருத்துவமனையில் புதிய அறுவை சிகிச்சை பிரிவுக்கு லிஸ்டர் பொறுப்பாளராக இருந்தார். அங்கு அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏராளமான் நோயாளிகள் மாண்டு போவது கண்டு இவர் வருந்தினார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு [[தசையழுகல்]] (Gangrene) போன்ற கொடிய நோய்கள் பெரும்பாலும் பீடிப்பதை இவர் கண்டார். லிஸ்டர் தமது பகுதியை மிகவும் தூய்மையாக வைத்துக் கொள்ள முயன்றார். எனினும் அதிக [[இறப்பு]] வீதத்தை இது தடுக்கவில்லை. மருத்துவமனையைச் சுற்றிலும் எழும் புழுக்க நச்சு ஆவிகள் தாம் (microbes) இந்த [[தொற்று நோய்]] களுக்குக் காரணம் என்று பல மருத்துவர்கள் கூறினார்கள். ஆனால் இந்த விளக்கம் லிஸ்டருக்கு மன நிறைவு அளிக்கவில்லை.<br />
1865 ஆம் ஆண்டில் [[லூயி பாஸ்டர்]] எழுதிய ஆய்வுக் கட்டுரையொன்றை லிஸ்டர் படித்தார். அக்கட்டுரையிலிருந்து [[நோய் நுண்மம்]] பற்றிய கோட்பாட்டை அறிந்துகொண்டார். அதிலிருந்து லிஸ்டருக்கு ஒரு முக்கியமான எண்ணம் உதித்தது. நோய் நுண்மங்களினால் [[தொற்று நோய்|தொற்று நோய்கள்]] உண்டாகின்றன எனில், திறந்த புண்களினால் நோய் நுண்மங்கள் நுழைவதற்கு முன்பாக அவற்றை அழித்துவிடுவதுதான் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் ஏற்படும் மரணங்களைத் தடுப்பதற்கு சிறந்த வழி என லிஸ்டர் கருதினார்.<br />
நோய் நுண்மக் கொல்லி மருந்தாக [[கார்பாலிக் அமிலம்|கார்பாலிக் அமிலத்தைப்]] பயன்படுத்தி நோய்நுண்மத் தடுப்பு முறைகளின் புதிய தொகுதியொன்றை லிஸ்டர் வகுத்தார். இதன்படி ஒவ்வொரு அறுவை சிகிச்சைக்கு முன்பும் அவர் தமது கைகளைத் தூய்மையாகக் கழுவிக்கொண்டார். அது மட்டுமின்றி, அறுவைச் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் கருவிகளும், கட்டுத்துணிகளும் கூட முற்றிலும் தூய்மையாக இருக்கும்படி பார்த்துக் கொண்டார். [[அறுவை சிகிச்]]சை அறையில் சிறிது நேரம் கார்பாலிக் அமிலத்தைத் தெளித்து வைக்கவும் செய்தார். இந்த முறைகளினால், அறுவை சிகிச்சைக்குப்பிறகு மரணங்கள் வெகுவாகக் குறைந்தன. ஆண்களுக்கான விபத்துப் பிரிவின் 1861-1865 -ல் அறுவை சிகிச்சைக்குப் பிறகு 45% க்கு இருந்த இறப்போர் அளவு, 1869 -ல் 15% அளவுக்குக் குறைந்தது.
 
"https://ta.wikipedia.org/wiki/ஜோசப்_லிஸ்டர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது