பாசிக்குடா

இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்

பாசிக்குடா (Pasikudah) என்பது மட்டக்களப்பிலிருந்து 35 கி.மி. தொலைவில் வட மேற்கில் அமைந்துள்ள ஓர் கரையோர பிரதேசமாகும். வாழைச்சேனை பிரதேசத்திற்கு உட்பட்ட இவ்விடம் இலங்கையின் மிகவும் அழகான கடற்கரைகளுள் ஒன்று ஆகும். புகழ்பெற்ற உல்லாச பயணிகளைக் கவரும் இடமாக இருந்த இது ஈழப் போர் இடம் பெற்றதனால் இதன் உல்லாச பயணிகளை இழந்தது. 2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம் மேலும் நிலைமையை மோசமாக்கியது. ஈழப் போர் முடிவுற்றதும் இப்பகுதி உல்லாச பயணிகளை உள்வாங்கும் இடமாக மாறி வருகின்றது.

பாசிக்குடா
பாசிக்குடா கடற்கரை
பாசிக்குடா கடற்கரை
நாடுஇலங்கை
மாகாணங்கள்கிழக்கு மாகாணம்
மாவட்டங்கள்மட்டக்களப்பு
பிரதேச செயலாளர் பிரிவுகோறளைப்பற்று வாழைச்சேனை
தென்னந்தோப்பு - பாசிக்குடா

அலைகளின் அகோரமில்லாத, ஆழமில்லாத விசாலமான கடற்பரப்பு, முருகைக்கற்பாறைகள், கடற் தாவரங்கள், கடல் வாழ் உயிரினங்கள் ஆகியவற்றின் இயற்கை வனப்பும், உல்லாச விடுதிகளும், கிடுகுகளால் அழகுற,நேர்த்தியாக வேயப்பட்ட “கபாணா” என்றழைக்கப்படும் உல்லாச விடுதிகளும், படகுச் சவாரிக்கு ஏற்ற கடலும், பாசிக்குடாவின் சிறப்புக்களாகும்.[1][2]

மேற்கோள்கள் தொகு

  1. "பல்லின சமூகங்களை இணைக்கும் எழில் மிக்க உறவுப் பாலம் – பாசிக்குடா". Archived from the original on 2012-10-19. பார்க்கப்பட்ட நாள் 2012-12-31.
  2. பாசிக்குடா பரணிடப்பட்டது 2014-08-20 at the வந்தவழி இயந்திரம், தமிழ்மிரர், சூலை 31, 2012
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசிக்குடா&oldid=3562588" இலிருந்து மீள்விக்கப்பட்டது