சிறிசு சந்திர நந்தி

மகாராஜா சிறிசு குமார் நந்தி (Maharaja Srish Kumar Nandy) (1897-1952) இவர் கோசிம்பசார் பகுதியின் கடைசி ஜமீந்தாரும், பிரபல எழுத்தாளரும், அரசியல்வாதியும் மற்றும் வங்காளத்தின் நில உரிமையாளருமாவார். இவர் சர் மகாராஜா மணிந்திர சந்திர நந்தியின் மூத்த மகனாவார் [1]

சிறிசு சந்திர நந்தி
பிறப்புசிறிசு சந்திர நந்தி
1897
இறப்பு1952
தேசியம்இந்தியன்
பட்டம்மகாராஜா சிறிசு சந்திர நந்தி

அரசியல் பணி தொகு

இவர் 1936 வங்காளத் தேர்தல்களில் சுயேட்சை வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் பின்னர் வங்காள அரசாங்கத்தில் நீர்ப்பாசனம், தகவல் தொடர்பு மற்றும் பணிகளுக்குப் பொறுப்பான அமைச்சராக 1936-1941 ஆண்டுகளில் அபுல் காசெம் பசுலுல் ஹக் அமைச்சரவையில் பணியாற்றினார். [2] [3] இவர் 1924 முதல் வங்காள சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். [4] இவர் ஆரம்பத்தில் இந்து மகாசபையுடன் தொடர்பு கொண்டிருந்தார் [5] [6] ஆனால் பின்னர் காங்கிரசில் சேர்ந்தார். [7] [8]

படைப்புகள் தொகு

பெங்கால் ரிவர்ஸ் மற்றும் அவர் எகனாமிக்ஸ் வெல்பேர், பிளட் அன்ட் இட்ஸ் ரெமடி , மோனோபதி (மனதைப் பற்றிய ஒரு நோயியல் ஆய்வு) - ஒரு நகைச்சுவை நாடகம், தஸ்யு துஹிதா (இராபரின் மகள்) - ஐந்து பேர் நடிக்கும் ஒரு நாடகம் போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார். .

பணிகள் தொகு

இவரது தந்தையின் நினைவாக அவர் நிறுவிய மகாராஜா மணிந்திர சந்திர கல்லூரி நினைவுச்சின்னமாக நிற்கிறது. [9] பின்னர், இவர் மகாராஜா சிறிசு சந்திர கல்லூரி என்று அழைக்கப்படும் மற்றொரு நிறுவனத்தை நிறுவி நிதியளித்தார். [10] இவர் உயர் கல்விக்கானப் பள்ளியை நிறுவினார். (எத்தோரா, சலன்பூர் பகுதி, பாசிம் பர்தாமனில் உள்ள எத்தோரா சிறிசு சந்திர நிறுவனம்.)

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறிசு_சந்திர_நந்தி&oldid=3708925" இலிருந்து மீள்விக்கப்பட்டது