சிறீ பார்வதி சமேத பரமேசுவரன் ஆலயம்

இது சேர் பொன் இராமநாதானால் 1921 இல் உருவாக்கப்பட்ட பரமேஸ்வராக் கல்லூரிச் (இன்றைய யாழ் பல்கலைக்கழகம்) சூழலில் உருவாக்கப்பட்டதாகும். 1926 இல் இதற்கான அத்திவாரம் இடப்பட்டு 1928 இல் திருக்கோயில் பெருமளவு முற்றுப் பெற்று தொடர்ந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இக்கோயிலிற்கு லிங்கமும், அம்மன், பிள்ளையார், முருகன், நவக்கிரகங்கள், நந்தி முதலியவற்றிற்கான கற்சிலைகள் இந்தியாவில் கொண்டுவரப்பட்டன. இதில் நவக்கிரம் தவிர ஏனையவை தொடக்கத்திலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

உசாத்துணை தொகு

  • ஈழத்துச் சிவாலயங்கள், வித்துவான் வசந்தா வைத்திய நாதன்