சிவக்கொழுந்து சிவாசாரியார்

சிவக்கொழுந்து சிவாசாரியார் என்பவரைச் சிவாக்கிர யோகிகள் எனவும் வழங்குவர். இவரது காலம் 16-ஆம் நூற்றாண்டு. சிவக்கொழுந்து தேசிகர் 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சைவ சித்தாந்த பரம்பரைகள் இரண்டில் ஒன்றான சிவாக்கிர யோகிகள் பரம்பரை இவர் பெயரை முன்னிலைப்படுத்துகிறது.

இவர் வேளாள மரபில் தோன்றியவர். அருக்கவனம் என்னும் சூரியனார் கோவில் ஊரின் தெற்கு வீதியில் இவர் தமக்கென ஒரு திருமடம் அமைத்துக்கொண்டு ஞானம் பரப்பிவந்தார். திருவீழிமிழலை என்னும் ஊரில் அக்கால அரசன் கட்டித் தந்த மடத்திலும் இவர் வாழ்ந்தமையால் இவரை 'மிழலைச் சிவாக்கியார்' எனவும் வழங்கினர்.

இவர் எழுதிய நூல்கள் தொகு

கருவிநூல் தொகு

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005

அடிக்குறிப்புகள் தொகு

  1. இதன் இரண்டாம் பதிப்பு சென்னை அரசின் தொன்னூல் நிலையத்தின் இரண்டாம் பதிப்பாக வெளிவந்துள்ளது.
  2. மூலம் - பதிப்பு 1908
  3. தமிழ் மொழிபெயர்ப்போடு கூடிய பதிப்பு - பிரமானந்தசாமி பதிப்பு, 1928