சிவப்பிரகாச உரை

சிவப்பிரகாச உரை என்பது சிவப்பிரகாசம் என்னும் நூலுக்குத் தி௫க்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன சீடர் மதுரை-சிவப்பிரகாசர் என்பவரால் எழுதப்பட்ட உரைநூல்.

  • உரை எழுதப்பட்ட ஆண்டு கி. பி. 1488 (சக ஆண்டு 1410)
  • இது ஒரு விரிவுரை [1] போல அமைந்துள்ளது.
  • உரைக் கருத்துகளுக்குப் பண்டைய நூல்களிலிருந்து மேற்கோள்களை இவ்வுரை தந்துள்ளது.
  • அசிந்திதம் முதலான சிவாகமங்கள், சூத சங்கிதை, சதரத்தின சங்கிரகம் முதலான வடமொழி நூல்களிலிலிருந்து மேற்கோள்கள் காட்டப்பட்டுள்ளன.
  • சில தமிழ் நூல்களை இவர் வேறு பெயர்களால் குறிப்பிடுகிறார்.
    • திருக்கோவையாரைக் ‘கோவைத் திருவாசகம்’ என்கிறார்.
    • நக்கீரர் அந்தாதியைக் ‘காளத்தி அந்தாதி’ என்கிறார்.
  • சைவர்களிடையே அதிகம் பயிலப்படாத சிவானந்த மாலை, தத்துவ விளக்கம், பிராசாத அகவல், உரூப சொரூப அகவல் முதலான நூல்களிலிருந்து இவர் மேற்கோள் தருகிறார்.
  • திருக்குறளை இவர் திருவருட்பயன் என்றே குறிப்பிடுகிறார்.
  • சிற்றம்பல நாடிகள் சாத்திரக் கொத்தில் காடப்படாத சிற்றம்பல நாடி ஞானப்பஃறொடை என்னும் நூலிலிருந்து மேற்கோள் தருகிறார்.
  • இவரது மாணாக்கர் ‘மெய்ப்பாத புராணிகர்’ கி. பி. 1709-ல் திருப்பைஞ்ஞீலிப் புராணம் என்னும் நூலை 821 செய்யுள்களால் இயற்றியுள்ளார்.

கருவிநூல் தொகு

அடிக்குறிப்பு தொகு

  1. விருத்தி, பாடியம், பாஷ்யம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவப்பிரகாச_உரை&oldid=1767914" இலிருந்து மீள்விக்கப்பட்டது