சுபாஷ் சந்திரன்

மலையாள எழுத்தாளர்

சுபாஷ் சந்திரன் ( Subhash Chandran) (பிறப்பு 1972) ஒரு மலையாள நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர் ஆவார். இவர் 2010 ஆம் ஆண்டு மனுஷ்யனு ஓரு ஆமுகம் என்ற நாவலை எழுதியதன் மூலமாக மிகவும் பிரபலமானவர். சமகால மலையாள இலக்கியத்தில் அதிகம் படித்த இளம் எழுத்தாளர்களில் இவரும் ஒருவராக உள்ளார். இவரது கதைகள் "வடகிராமம்", "சன்மார்கம்", "பருதீசா நஷ்டம்" மற்றும் "குப்தம்" ஆகியவை திரைப்படங்களாக மாற்றப்பட்டுள்ளன. முதல் கதைத் தொகுப்பு (2001) மற்றும் அறிமுக நாவல் (2011) ஆகிய இரண்டிற்கும் கேரள சாகித்ய அகாதமி விருது பெற்ற ஒரே எழுத்தாளர் இவராவார். சாகித்ய அகாதமி விருது, ஒடக்குழல் விருது மற்றும் வயலார் விருது ஆகியவற்றையும் பெற்றுள்ளார் .

சுபாஷ் சந்திரன்

சுயசரிதை தொகு

வாழ்க்கை மற்றும் தொழில் தொகு

சுபாஷ் சந்திரன் 1972 இல் கேரளாவின் ஆல்வே அருகே கடுங்கல்லூரில் பிறந்தார். மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் மலையாளத்தில் முதுகலைப் படிப்பில் முதல் இடத்தைப் பெற்றார். பின்னர், அவர் எழுத்துத் துறையில் இறங்கினார். 1994 ஆம் ஆண்டில், அவரது கதையான "கட்டிகரங்கல் நிலாய்குண்ணா சமயம்" மாத்ருபூமி இதழில் விஷூபதிப்பு நிறுவிய விருதை வென்றது. சிறந்த இளம் எழுத்தாளர்களுக்கான கேந்திரா சாகித்ய அகாதமி விருது, கேரள சாகித்ய அகாதமி விருது, வயலார் விருது, ஒடக்குழல் விருது மற்றும் தமிழ்நாடு மலையாளி சங்கங்களின் கூட்டமைப்பு (சி.டி.எம்.ஏ) உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார். [1] டைம்ஸ் ஆப் இந்தியா தொகுத்த சிறந்த இளம் இந்திய எழுத்தாளர்களின் பட்டியலில் இடம் பெற்ற ஒரே மலையாள எழுத்தாளர் இவர்தான். அவரது நினைவுக் குறிப்பான "தாஸ் கேபிடல்" பாடகர் கே.ஜே.யேசுதாஸ் ,ஒரு மலையாள இசை பிரியராக அவருக்கு ஏற்படுத்திய தாக்கங்களை விவரிக்கிறது. 2001 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் முறையே தனது முதல் கதைத் தொகுப்பு மற்றும் அறிமுக நாவல் ஆகிய இரண்டிற்கும் மதிப்புமிக்க கேரள சாகித்ய அகாதமி விருதைப் பெற்ற முதல் மற்றும் ஒரே எழுத்தாளராக உள்ளார். அவரது நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு ஏ பிரிபேஸ் டு மேன் 2016 இல் ஹார்பர் கோலின்ஸால் வெளியிடப்பட்டது. மலையாள இலக்கியத்தில் கடந்த இரண்டு தசாப்தங்களாக சிறப்பான பங்களிப்பு செய்ததற்காக சுபாஷ் சந்திரனுக்கு ஏசியானெட் தொலைக்காட்சியின் கீர்த்திமுத்ரா விருது கிடைத்தது.

மனுஷ்யனு ஓரு அமுகம் தொகு

சுபாஷ் சந்திரன் 2010 ஆம் ஆண்டு மனுஷ்யனு ஓரு அமுகம் நாவலை எழுதியதில் மிகவும் பிரபலமானவர். இந்த நாவல் தச்சனக்கரா என்ற கற்பனையான கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மற்றும் ஜிதேந்திரன் என்ற மைய பாத்திரத்தை கொண்டுள்ளது. இந்த நாவல் முதலில் 2009 இல் மாத்ருபூமி வார இதழில் தொடராக வெளிவந்தது. நாவலின் விளம்பரத்தில் பெண்கள் மோசமான நிலையில் சித்தரிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டி மாநில மகளிர் ஆணையம் வார இதழில் ஒரு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. [2] இந்த நாவலை டி.சி புத்தகங்கள் நிறுவனம் ஒரு புத்தகமாக 2010 இல் வெளியிட்டது. இது ஒரு சிறந்த விமர்சன வெற்றியாக இருந்தது. இன்றுவரை மலையாளத்தில் அதிகம் விற்பனையாகும் புத்தகங்களில் இதுவும் ஒன்றாக உள்ளது. இந்த நாவல் வயலார் விருது (2015), கேந்திர சாகித்ய அகாதமி விருது (2015) கேரள சாகித்ய அகாதமி விருது (2011) ஒடக்குழல் விருது (2011), வட அமெரிக்காவிலுள்ள கேரள சங்கங்களின் கூட்டமைப்பு விருது (2012), பாஷா நிறுவனத்தின் பஷீர் புராஸ்காரம் (2012) மற்றும் கோவிலன் புராஸ்காரம் (2012) போன்ற விருதுகளைப் பெர்றுள்ளது. .மனுஷ்யானு ஓரு அமுகம் ஆங்கிலத்தில் (டி.சி புக்ஸ்) (ஹார்பர் காலின்ஸ்) 'ஏ பிரிபேஸ் டு மேன்' என்கிற பெயரில் கிடைக்கிறது.

இவரது புதிய நாவலான 'சமுத்திரசிலா' விரைவில் மாத்ருபூமி வார இதழில் வெளியிடப்பட உள்ளது.

திரைப்படத் தழுவல்கள் தொகு

சுபாஷ் சந்திரனின் நான்கு கதைகள் திரைப்படங்களாக மாற்றப்பட்டுள்ளன. "வடகிராமம்" கதையை அடிப்படையாகக் கொண்டு, புனே திரைப்பட நிறுவனம் ஒரு குறும்படத்தை தயாரித்தது. இது ரியோ டி ஜெனிரோ திரைப்பட விழாவில் சிறப்பு நடுவர் குறிப்பை வென்றது. மலையாள திரைப்படமான லேப்டாப் "பருதீசா நஷ்டம்" என்ற சிறுகதையின் தழுவலாகும். அவரது கதை "சன்மர்கம்" மலையாளத்தில் ஒரு கத்தி என படமாக்கப்பட்டது. அதே நேரத்தில் "குப்தம்" கதையை ஜார்ஜ் கித்துவால் அகாஸ்மிகமாக படமாக்கப்பட்டது, இதில் ஸ்வேதா மேனன் ஒரு அற்புதமான பாத்திரத்தில் நடித்தார்.

குறிப்புகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுபாஷ்_சந்திரன்&oldid=3784034" இலிருந்து மீள்விக்கப்பட்டது