செஞ்சுகாம்போதி

செஞ்சுகாம்போதி இருபத்தெட்டாவது மேளகர்த்தா இராகமும், "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் நான்காவது இராகமுமாகிய அரிகாம்போதியின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம் தொகு

இந்த இராகத்தில் சட்சம் (ச), பஞ்சமம் (ப), சுத்த மத்திமம் (ம1), சதுச்ருதி தைவதம் (த2), கைசிக நிசாதம் (நி2), அந்தர காந்தாரம் (க3), சதுச்ருதி ரிசபம் (ரி2) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு[1]:

ஆரோகணம்: ச ப ம12 நி2 ச்
அவரோகணம்: ச் நி22 நி2ப ம13 ரி2

இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன. இதனால் இது "சாடவ சம்பூரண" இராகம் எனப்படுகின்றது. இதன் ஆரோகணத்தில் பஞ்சமமும் அவரோகணத்தில் நிசாதமும் ஒழுங்கு மாறி வருவதால் இது ஒரு வக்கிர இராகம் ஆகும்.

இவற்றையும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Music Handbook - Raga Index -C 18 பெப் 2011 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=செஞ்சுகாம்போதி&oldid=3765647" இலிருந்து மீள்விக்கப்பட்டது