சென்னை பொருளியல் கல்வி நிறுவனம்
மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் என அழைக்கப்படும் சென்னைப் பொருளியல் கல்வி நிறுவனம் (Madras School of Economics) ச.ரங்கராஜன் (ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர்) 1995ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது[1]. தற்போது இந்நிறுவனம் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்துடன் இணைவுப்பெற்றுள்ளது. இங்கு முதுகலைப் பொருளியலில் ஐந்து பிரிவுகளின் கீழ் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. இந்நிறுவனம் பொருளியல் பாடத்தினைக் கற்பிப்பதில் இந்திய அளவில் மூன்றாம் இடத்தையும், தமிழக அளவில் முதல் இடத்தையும் பெற்றுள்ளது. தற்போது ஒருங்கிணைந்த ஐந்தாண்டு முதுகலைப் பொருளியல் பிரிவும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
குறிக்கோளுரை | Mentoring Excellence |
---|---|
உருவாக்கம் | 1995 |
பட்ட மாணவர்கள் | 50 |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 210 |
அமைவிடம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா 13°01′02″N 80°14′17″E / 13.017112°N 80.237934°Eஆள்கூறுகள்: 13°01′02″N 80°14′17″E / 13.017112°N 80.237934°E |
இணையதளம் | http://www.mse.ac.in/ |
மேற்கோள்கள்தொகு
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2014-07-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-11-04 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)