செய்யுள் விகாரம்

விகாரம் என்பது இயல்பு மாற்றம்.

செய்யுளில் எதுகை,மோனைகளுக்காகச் சில சொற்கன் தன் இயல்பு மாற்றத்தோடு கையாளப்படும். ஓசை ஒத்திசைவுக்காக இவை இவ்வாறு வருகின்றன. [1] [2]

  • வலித்தல் விகாரம்
குறுந்தாட் பூதம் (குறுந்தாள் என்பதில் உள்ள [ள்] வல்லின [ட்] ஆயிற்று)
  • மெலித்தல் விகாரம்
தண்டையின் இனக்கிளி கடிவோள் (தட்டை என்பதில் உள்ள [ட்] தண்டை என வரும்போது [ண்] ஆகி மெலிந்தது)
  • நீட்டல் விகாரம்
போத்தறார் புல்லறிவினார் (பொத்தறார் என்னும் சொல் போத்தறார் என நீண்டது) பொத்து > போத்து
  • குறுக்கல் விகாரம்
நன்றென்றேன் தியேன் (தீயேன் என்பது தியேன் எனக் குறுகி வந்தது)
  • விரித்தல் விகாரம்
நெல் விளையும்மே (விளையுமே என்பது விளையும்மே என விரிந்தது)
  • தொகுத்தல் விகாரம்
நீ நாடுகென (நீ நாடுக என்பதன் இறுதியில் உள்ள [அ] தொக்குநின்றது அதாவது மறைந்து நின்றது)

அடிக்குறிப்பு தொகு

  1. வலித்தன் மெலித்த னீட்டல் குறுக்கல்
    விரித்த றொகுத்தலும் வருஞ்செய்யுள் வேண்டுழி (நன்னூல் 155)
  2. எடுத்துக்காட்டுகள் நன்னூல் காண்டிகை உரையிலிருந்து தரப்பட்டுள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செய்யுள்_விகாரம்&oldid=1562483" இலிருந்து மீள்விக்கப்பட்டது