சேத்ரம் ஜாதவ்

சேத்ரம் ஜாதவ் (Chetram Jatav) இவர் ஓர் சுதந்திர போராட்ட வீரராவார். இவர் 1857 இல் நடந்த சிப்பாய்க் கிளர்ச்சியில் பங்கேற்றார். 1857 மே 26 அன்று வடமேற்கு மாகாணங்களில் (இப்போது உத்தரபிரதேசம் ) ஏட்டா மாவட்டத்தின் சோரோ பகுதியில் இவர் கலகத்தில் ஈடுபட்டார். கிழக்கிந்திய நிறுவனத்தின் இரானுவம் இறுதியாக இவர் கைது செய்து ஒரு மரத்தில் கட்டி வைத்து சுட்டுக் கொன்றனர்.[1]

சேத்ரம் ஜாதவ்
பணிபாட்டியால மகாராஜாவின் இராணுவ வீரன்.
அறியப்படுவதுஇவர் 1857 இல் நடந்த சிப்பாய்க் கிளர்ச்சியில் பங்கேற்றார்

வாழ்க்கை தொகு

மக்களிடையே உள்ள வாய்மொழிக் கதைகளின்படி, ஒரு நாள் பாட்டியாலா மகாராஜா ஒருவன் சிங்கத்தை தனது முதுகில் சுமந்து செல்வதைக் கண்டார். அந்த மனிதன் ஆயுதம் இல்லாமல் சிங்கத்தைக் கொன்றது அரசனுக்குத் தெரியவந்தது. மன்னன் அவனை தனது படையில் சேர்த்துக் கொண்டார். அவர்தான் சேத்ரம் ஜாதவ். கிழக்கிந்திய கம்பெனி மக்களைத் துன்புறுத்துவதைக் கண்டு சேத்ரம் அவர்களை எதிர்த்துப் போராடினார். அதன் பிறகு ஆங்கிலேயர்கள் அவரைக் கைது செய்து ஒரு மரத்தில் கட்டி சுடுக் கொன்றனர். அலகாபாத்தில் உள்ள இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்தின் வரலாற்றாசிரியரான பத்ரி நாராயண் திவாரி ஜாதவின் மரணச் சூல்நிலையை வெளிபட்த்தினார்.[1] பிற ஆதாரங்களும் திவாரியின் ஆராய்ச்சியை வழியுறுத்துகின்றன.[2][3][4] இந்த ஆராய்ச்சியாளர்கள் 1990 ஆம் ஆண்டு டி.சி.தினகரால் எழுதப்பட்ட சுதந்த்ரதா சங்க்ராம் மீ அச்சுதோன் கா யோக்தான் என்ற படைப்பிலிருந்து தங்கள் தகவலைப் பெற்றனர்.[5]

1857 ஆம் ஆண்டு கிளர்ச்சியின் விளைவாக இறந்த ஜாதவ் மற்றும் சிலரை பகுஜன் சமாஜ் கட்சியானது தலித் வீரத்தின் சின்னங்களாக ஏற்றுக்கொண்டது. [6] திவாரியின் கருத்துப்படி, திவாரியின் கூற்றுப்படி, தலித் அறிவுஜீவிகள், உள்ளூர் தலைவர்கள், வரலாறுகள், தொன்மங்கள் மற்றும் புனைவுகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஓரங்கட்டப்பட்ட தலித்துகளை அணிதிரட்ட முயன்ற பகுஜன்சமாஜ் கட்டிக்காக 1857 ஆம் ஆண்டு கிளர்ச்சியில் ஈடுபட்ட உத்தரபிரதேச பிராந்தியங்களின் வாய்வழி வரலாறுகளில் பல ஆதாரங்கள் காணப்பட்டன. இந்த மாவீரர்களின் கதைகளை மீண்டும் கூறுவது, நினைவுச் சின்னங்களைக் கட்டுவது, அவர்களின் நினைவுகளை மக்கள் மனதில் பதிய வைப்பதற்காக அவர்களின் கதைகளின் அடிப்படையில் மீண்டும் மீண்டும் கொண்டாட்டங்களை நடத்துவது போன்றவை கட்சியின் அரசியல் உத்தி. தேசத்தைக் கட்டியெழுப்புவதில் தலித்துகள் முக்கியப் பங்காற்றினர் என்பதைக் காட்டுவதாக இந்தக் கதைகள் விளங்குகின்றன.[7]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Tiwari, Badri Narayan (2006). Women Heroes and Dalit Assertion in North India: Culture, Identity and Politics. SAGE. பக். 99. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780761935377. https://books.google.com/books?id=iAQrpDW4-_YC&pg=PA99. 
  2. "Dalits took part in 1857 revolt: Study". Rediff. PTI. 10 November 2005. http://www.rediff.com/news/2005/nov/10revolt.htm. 
  3. Bates, Crispin, தொகுப்பாசிரியர் (2013). "Identity and Narratives". Mutiny at the Margins: New Perspectives on the Indian Uprising of 1857. SAGE Publications India. பக். 22. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-8-13211-864-0. https://books.google.com/books?id=EfWnAwAAQBAJ&pg=PA6. 
  4. Hunt, Sarah Beth (2014). Hindi Dalit Literature and the Politics of Representation. Routledge. பக். 130. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-31755-952-8. https://books.google.com/books?id=HHc9BAAAQBAJ&pg=PA130. 
  5. Tiwari, Badri Narayan (2007). "Identity and Narratives: Dalits and memories of 1857" (PDF). University of Edinburgh: Mutiny at the Margins Conference. pp. 13, 27, 33. Archived from the original (PDF) on 6 October 2021. பார்க்கப்பட்ட நாள் 22 September 2016.
  6. Tiwari, Badri Narayan (2014). Kanshiram: Leader of the Dalits. Penguin UK. பக். 113. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-9-35118-670-0. https://books.google.com/books?id=0bo0AwAAQBAJ&pg=PT113. 
  7. Tiwari, Badri Narayan (2007). Identity and Narratives: Dalits and memories of 1857. University of Edinburgh: Mutiny at the Margins Conference. பக். 13, 27, 33. http://www.csas.ed.ac.uk/mutiny/confpapers/Tiwari-Paper.pdf. பார்த்த நாள்: 2020-09-18. 

மேலும் படிக்க தொகு

  • Dinkar, D. C. (1990). Swatantrata Sangram mein Achhuton ka Yogdan. Lucknow: Bodhisatva Prakashan. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேத்ரம்_ஜாதவ்&oldid=3832363" இலிருந்து மீள்விக்கப்பட்டது