சோ. செல்வநாயகம்

இலங்கை தமிழ் கல்வியாளர்

பேராசிரியர் சோமசுந்தரம் செல்வநாயகம் (28 மே 1932 – 23 மே 1979) என்பவர் இலங்கைத் தமிழ் புவியியலாளர், கல்வியாளர் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புவியியல் துறையின் தலைவர் ஆவார்.

பேராசிரியர்
சோ. செல்வநாயகம்
FRGS
பிறப்பு(1932-05-28)28 மே 1932
இறப்பு23 மே 1979(1979-05-23) (அகவை 46)
படித்த கல்வி நிறுவனங்கள்இலங்கைப் பல்கலைக்கழகம்
இலண்டன் பொருளியல் பள்ளி
பணிகல்வியாளர்

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

செல்வநாயகம் 1932. மே. 28 அன்று பிறந்தார். [1] யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் கொழும்பு சாகிரா கல்லூரியிலும் கல்வி பயின்றார். [1] [2] இவர் 1953 இல் பேராதனை இலங்கைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார், 1957 இல் புவியியலில் இளங்கலை ஹானர்ஸ் பட்டம் பெற்றார். [2]

தொழில் தொகு

படிப்பை முடித்த செல்வநாயகம் அரச கரும மொழிகள் திணைக்களத்தில் (ஆட்சி மொழிகள் துறை) சிறிது காலம் பணியாற்றினார். [1] பின்னர் அவர் 1951 இல் பேராதனை இலங்கைப் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராகச் சேர்ந்தார். [2] இவர் 1961 அக்டோபரில் இலண்டன் பொருளியல் பள்ளியில் (எல்.எஸ்.இ) முதுகலை படிப்பிற்காக சேர்ந்து எம்ஏ பட்டம் பெற்றார். [1] [2] இவர் தனது ஆராய்ச்சியைத் தொடர 1970 இல் எல்.எஸ்.இக்குத் திரும்பினார், 1971 ஆகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். [1] [2]

செல்வநாயகம் அகமது பெல்லோ பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையில் மூத்த விரிவுரையாளராக 1974 இல் சேர்ந்தார். [1] இவர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் (யாழ்ப்பாண வளாகம்) புவியியல் துறையின் தலைவராக நியமிக்கப்பட்ட பின்னர் 1977 ஆகத்தில் அகமது பெல்லோவை விட்டு வெளியேறினார். [1]

செல்வநாயகம் ராயல் ஜியோகிராஃபிக்கல் சொசைட்டியின் உறுப்பினராக இருந்தார் . [1] அவர் மே 1979 23 அன்று இறந்தார் [1]

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோ._செல்வநாயகம்&oldid=3329457" இலிருந்து மீள்விக்கப்பட்டது