சௌதி கொடி வழி

சௌதி கொடி வழி (House of Saud) என்பது தற்போதைய சௌதி அரேபியாவின் அரசர்கள் வரும் கொடி வழியாகும். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள், முதல் சௌதி அரசு (1818-1891) என அறியப்படும் திரியா அமீரகத்தை நிறுவிய முகமது பின் சௌத் மற்றும் அவரது சகோதரர்கள் வழி வந்தவர்கள். எனினும், ஆளும் குடும்பப் பிரிவைச் சேர்ந்தவர்கள் தற்போதைய சௌதி அரேபியாவை நிறுவிய இபின் சௌத்தின் (Ibn Saud) வழித்தோன்றல்களாகவே உள்ளனர்.[1]

தற்போது சௌதி அரேபியா அரச குடும்பத்தில் மிகவும் செல்வாக்கு மிக்கவர் தற்போதைய சௌதி அரேபியாவின் அரசர் சல்மான் ஆவார். சௌதி அரேபியாவின் அரசபதவி முகமது பின் சௌதின் மகன்களில் ஒருவருக்குத்தான் கிடைக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. சௌதி அரேபியாவின் அடுத்த அரசர் பட்டத்து இளவரசர் முகமது பின் நயிப் ஆவார். இவரும் சௌதி கொடி வழி வந்தவரே என்பது குறிப்பிடத்தக்கது. அரசரால் அமர்த்தப்பட்ட சௌதி அரசின் ஆய அமைச்சர்களில் பெரும்பாலோர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தற்போது அரசபதவி மரபுவழியாக வருவது என்றாலும் எதிர்காலத்தில் அரசர்களை சௌதி இளவரசர்கள் அடங்கிய குழு தேர்ந்தெடுக்கும் என்று 2006இல் பிறப்பிக்கப்பட்ட அரச கட்டளை தெரிவிக்கிறது.[2]

இக்கொடி வழி வந்தவர்கள் 15,000 இக்கும் மேல் இருப்பார்கள் ஆனால் பெரும்பாலான அதிகாரங்களும் செல்வமும் 2,000 குடும்ப உறுப்பினர்களிடம் மட்டுமே உள்ளது.[3][4]

சௌதி கொடி வழி வந்த அரசுகள் மூன்று. 1714-1818 முதலான திரியா அமீரகம் என்பது முதல் சௌதி அரசாகும். இதில் தீவிர இசுலாமிய பிரிவான வகாபியிசம் வளர்ந்தது. 1824-1891 வரை இருந்த நசத் அமீரகம் இரண்டாவது சௌதி அரசாகும், இக்காலத்தில் நிறைய அரச குடும்ப சண்டைகள் நிகழ்ந்தன. மூன்றாவது (1902- முதல் தற்போது) 1932இல் சௌதி அரேபியாவாக மாற்றம் பெற்றது. இது மத்திய கிழக்கில் குறிப்பிடத்தக்க செல்வாக்கை செலுத்துகிறது. உதுமானியப் பேரரசுடன் சௌதி கொடி வழி வந்தவர்களுக்கு பிணக்கு உள்ளது. மெக்காவின் காவலர், ரசீத் கொடி வழியில் வந்த சபல் சாம்மர் அமீரகத்தை ஆண்ட ரசீத் குடும்பத்தினருடனும் நசத் இனத்தின் பல குழுக்களுடனும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள எண்ணற்ற இசுலாமிய குழுக்களுடனும் இவர்களுக்கு பிணக்கு உள்ளது.

பட்டம் தொகு

சவுதி கொடி வழி என்பது அரபியில் அல் சவுது என்பதாகும். சவுதி கொடி வழியின் மூதாதையர் சவுது பின் முகமது பின் முகரின் ஆவார். இந்த மரபை தோற்றுவித்தவர் முகமது பின் சவுது (சவுதின் மகன் முகமது). தற்போது (21 நூற்றாண்டின் ஆரம்பம்) அல் சவுது என்னும் குடும்பப் பெயர் சவுது பின் முகமது வழிவந்தவர்களும் அவரின் மூன்று சகோதரர்களின் வழிவந்தவதர்களும் பயன்படுத்துகின்றனர். அல் சவுது குடும்பத்தின் மற்ற கிளைகளான சவுது அல்-கபீர், அல் மிசாரி, அர் ஃபர்கான், அல் துன்யான் ஆகியவை இளவல் கிளைகள் எனப்படுகின்றன. இளவல் கிளை உறுப்பினர்கள் அரசில் செல்வாக்கான பதவியை பெறமுடியும் ஆனால் அவர்களால் மன்னர் ஆக முடியாது. சில இளவல் கிளை உறுப்பினர்கள் அல் சவுது உறுப்பினர்களை மணமுடித்து உள்ளனர்.

அனைத்து குடும்ப உறுப்பினர்ளும் எமிர் (இளவரசன்) என்ற பட்டத்துடன் அழைக்கப்படுவர் ஆனால் மன்னரின் வாரிசுகளும் (இரு பாலரும்) ஆண் வழி பேரக்குழந்தைகளும் (இரு பாலரும்) மாட்சிமை பொருந்திய அரச குல என்ற பட்டத்துடன் அழைக்கப்படுவார்கள் ஆனால் இளவல் கிளை உறுப்பினர்கள் மாட்சிமை பொருந்திய என்ற பட்டத்துடன் அழைக்கப்படுவார்கள் இதுவும் அவர்களுக்குள் உள்ள வேறுபாடு. மன்னர் மட்டும் இரு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலன் என்ற பட்டத்தை அதிகமாக பெறுவார்.

வரலாறு தொகு

தொடக்கம் தொகு

1446-47 காலகட்டத்தில் திரியா நகரில் தன் முருடா இன மக்களுடன் சௌதி கொடி வழியின் மூதாதையர் மணி இபின் ரபையா அல் முரய்டி குடியேறியதே வரலாற்றில் முதலில் பதிவானதாகும். சிலர் முருடா இன மக்கள் ரபையாவின் பழங்குடி கூட்டமைப்பிலிருந்து வந்தவர்கள் என்றும் சிலர் வடக்கு அரேபிய பாலைவனத்தின் பெரிய கூட்டமைப்பான அனிச்சாவிலிருந்து வந்தவர்கள் எனவும் கருதுகின்றனர். தற்கால ரியாத் நகரம் அமைந்திருக்கும் பகுதியில் பல சிற்றூர்களையும் பண்ணைகளையும் ஆண்ட மணியின் உறவினர் இபின் டிரால் அழைக்கப்படுகிறார். மணியின் இன மக்கள் கிழக்கு அரேபியாவில் அல்-குவாடிவ் என்னுமிடத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்படுகிறார்கள். இபின் டிர் மணிக்கு அல்-முலய்பீட், கசய்பா என்ற இரு பண்ணைகளை அளிக்கிறார். அதற்கு அல்-டிரியா என்று இபின் டிர் நினைவாக பெயரிட்டு மணியும் அவர் குடும்பத்தினரும் அல்-டிரியாவில் குடியேறுகின்றர். அல்-டிரியாவின் ஆட்சியாளர்கள் ஆகும் முருடா இனத்தவர் நசத் குடியேற்றத்தின் முக்கிய நகரமாக விளங்கிய வாடி அனி்பா கரையில் செழித்து வளர்கின்றனர். இன மக்கள் தொகை பெருகியதும் அவர்களுக்குள் அதிகார போட்டி அதிகமாகி ஒரு கூட்டம் துருமா நோக்கி சென்றது இன்னொன்று தெற்கு ஈராக்கின் அச்-சுபயர் நோக்கி சென்றது. அல்-முரின் அல்-டிரியாவில் எஞ்சியுள்ள முருடா கூட்டத்தை ஆண்டது.இவர்கள் 1725இல் இறந்த சேக் சௌது இபின் முகமது இபின் முரின் பெயரிலிந்து பெற்றார்கள்.

முதல் சௌதி அரசு தொகு

முதல் சௌதி அரசு 1744இல் தோன்றியது. இந்தகாலகட்டத்தில் மத பிடியும் அண்டை பகுதிகளை பிடிப்பதும் அதிகமாக இருந்தது. இதன் அதி அதிக கட்டமாக பெரும்பாலான தற்கால சௌதி அரேபியாவின் பெரும் பகுதிகள் இவர்களால் பிடிக்கப்பட்டது அல்-சவுதின் கூட்டாளிகளும் ஆதரவாளர்களாலும் யேமன், ஓமன், ஈராக், சிரியா போன்ற பகுதிகளை அடைந்தனர். இக்காலகட்டத்தில் இசுலாமிய மார்க்க அறிஞர்கள் குறிப்பாக முகமது இபின் அப்துல் வாகாப்பும் அவரின் வழிவந்தவர்களும் சௌதி அரசில் அதிக செல்வாக்கு செலுத்தினர் என நம்பப்படுகிறது. சௌதிக்களும் அவர்கள் கூட்டாளிகளும் இக்காலகட்டத்தில் ஓரிறைவாதிகள் (முவாகிகிடுன், அல் தவ்கீது) என குறிப்பிடப்படுகின்றனர். பின்னாளில் அவர்கள் இந்த சன்னி உட்குழுவை தோற்றுவித்தவர் பெயரில் வகாபிகள் என அழைக்கப்படுகின்றனர். வகாபிகள் கடும் போக்குவாதிகள் என அறியப்படுகின்றனர்.

அரசின் தலைமைப்பதவி எந்த இடரும் இன்றி தந்தையிடம் இருந்து மகனுக்கு சென்றது. முதல் இமாமான முகமது இபின் சௌதின் மூத்த மகன் அப்துல் ஆசிச் 1765இல் தலைமைப்பதவியை பெற்றார். 1802இல் தெற்கு ஈராக்கில் முகமது நபியின் பேரன் உசைன் இபின் அலி புதைக்கப்பட்டுள்ள சியாக்களின் புனித நகரான கர்பாலைவை பத்தாயிரம் வாகாபி படைவீரர்களுடன் அப்துல் ஆசிச் தாக்கினார். அப்துல் ஆசிச் தலைமையில் வாகாபி வீரர்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட இரண்டாயிரத்துக்கும் அதிக்மானவர்களை் கொன்று குவித்தனர். உசைன் அலி புதைக்கப்பட்ட இடத்திலிருந்த தங்க குவிமாடம் தகர்க்கப்பட்டது, நகரம் சூறையாடப்பட்டது நூற்றுக்கணக்கான ஒட்டகங்களில் ஆயுதங்களும் நகைகளும் நாணயங்களும் விலை உயர்ந்த பொருட்களும் கொண்டசெல்லப்பட்டன.

கர்பாலாவில் நடத்திய தாக்குதலால் சௌதிகள் இப்பகுதி அமைதிக்கு ஆபத்தானவர்கள் என்று உதுமானியர்களும் எகிப்தியர்களும் முடிவுக்கு வந்தனர். 1803இல் அப்துல் ஆசிச் படுகொலை செய்யப்பட்டார். கர்பாலா தாக்குதலுக்கு வஞ்சம் தீர்க்கும் நோக்கில் இக்கொலையை சியாக்கள் செய்திருக்கலாம் என நம்பப்படுகிறது. அப்துல் ஆசிச் இடத்துக்கு அவர் மகன் சௌத் வருகிறார். சௌதின் ஆட்சியில் சௌதி அரசு பெரிதும் விரிவடைகிறது. 1814இல் சௌது இறந்ததும் அவர் இடத்திற்கு அவரின் மகன் அப்துல்லா இபின் சௌது வருகிறார். உதுமானிய பேரரசின் இழந்த பகுதிகளை மீட்கும் பொருட்டு உதுமானிய எகிப்திய கூட்டு படையெடுப்பு சௌதி மீது தொடுக்கப்படுகிறது. குறிப்பாக எகிப்திய படைகள் அப்துல்லாவின் படையை தோற்கடித்து சௌதியின் தலைநகர் டிரியாவை 1818இல் கைப்பற்றுகின்றனர். அப்துல்லா கைது செய்யப்பட்டு உதுமானியர்களின் கான்ஸ்டண்டினோபிலுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவரின் தலை வெட்டப்படுகிறது. இது சௌதி அரசுக்கு முடிவாக அமைகிறது. எகிப்தியர்கள் பல முக்கிய ஆட்களை சிறைபிடித்து எகிப்துக்கும் கான்ஸ்டண்டினோபிலுக்கும் அனுப்பிவிட்டு டிரியாவை தரைமட்டமாக்குகின்றனர்.

இரண்டாம் சௌதி அரசு தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "The House of Al Saud - A View of the Modern Saudi Dynasty". 18 September 2015.
  2. Meet the world’s other 25 royal families The Washington Post. 22 July 2013.
  3. "HRH Princess Basma bint Saud bin Abdulaziz Al Saud". BBC. 28 July 2011. http://www.bbc.co.uk/programmes/b012t5nd. பார்த்த நாள்: 7 April 2013. 
  4. Milmo Cahal (3 January 2012). "The Acton princess leading the fight for Saudi freedom". The Independent. http://www.independent.co.uk/news/people/news/the-acton-princess-leading-the-fight-for-saudi-freedom-6284225.html. பார்த்த நாள்: 3 January 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சௌதி_கொடி_வழி&oldid=2866523" இலிருந்து மீள்விக்கப்பட்டது