ச. தமிழ்ச்செல்வன்

ச. தமிழ்ச்செல்வன் (S. Tamilselvan, பிறப்பு: 27 மே 1954) தமிழ் எழுத்தாளரும், திறனாய்வாளரும் ஆவார். இவர் 2008 ஆம் ஆண்டு, "பூ" திரைப்படத்திற்காக தமிழக அரசின் சிறந்த கதாசிரியர் விருது பெற்றவர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கங்கத்தின் மதிப்புறு தலைவராகவும் செயலாற்றி வருகிறார்.[1]

ச.தமிழ்ச்செல்வன்
பிறப்புச. தமிழ்ச்செல்வன்
(1954-05-27)27 மே 1954
நாகலாபுரம், தூத்துக்குடி மாவட்டம்
தொழில்எழுத்தாளர், திறனாய்வாளர்
மொழிதமிழ்
இலக்கிய இயக்கம்தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்"வெயிலோடு போய்"
குறிப்பிடத்தக்க விருதுகள்தமிழக அரசின் சிறந்த கதாசிரியர் விருது, 2008
துணைவர்இரா.வெள்ளதாய்
பிள்ளைகள்சித்தார்த்
இணையதளம்
www.tamilwriters.in.

வாழ்க்கை குறிப்பு தொகு

1954ல் தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தில் பிறந்து, விருதுநகர் மாவட்டம் நென்மேனி மேட்டுப்பட்டியில் வளர்ந்து பள்ளிப்படிப்பை நிறைவு செய்து, கோவில்பட்டியில் கல்லூரி படிப்பை முடித்தார். பின்னர் அஞ்சல் துறையிலும், இராணுவத்திலும், மீண்டும் அஞ்சல்துறையிலும் என மாறி மாறி பணியாற்றியவர். படிப்பறிவை சமூகத்தில் பரவலாக்கும் நோக்கில் துவக்கப்பட்ட அறிவொளி இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு, அதற்காக ஊதியமற்ற விடுமுறை எடுத்துக்கொண்டு முழுநேரமும் விழிப்பணர்வு சேவையாற்றினார். சேவைப் பணியிலும், இலக்கிய படைப்பிலும், தமுஎகச அமைப்பு பொறுப்புகளிலும் திறம்பட இயங்குவதற்காக அஞ்சலகப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார். தற்போது தனது இணணயர் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் இரா.வெள்ளதாயுடன் சிவகாசியில் வசித்து வருகிறார்.

ச. தமிழ்ச்செல்வனின் தாய்வழி தாத்தா மதுரகவி பாஸ்கர தாஸ் "பாலகான சபா" என்ற நாடககுழு அமைத்து தமிழகம், இலங்கை என பல பகுதிகளிலும் நாடகங்கள் நடத்தியவர். தமிழ்ச்செல்வனின் தந்தை எம். எஸ். சண்முகம் திராவிட இதழ்களில் சிறுகதைகள் எழுதிய எழுத்தாளர். இரண்டு நாவல்களும் வெளிவந்துள்ளன. எழுத்தாளர் கோணங்கி மற்றும் நாடகவியலாளர் ச.முருகபூபதி இருவரும் இவரது சகோதரர்கள்.

மாணவப் பருவத்திலேயே பள்ளி நாடகங்களுக்கு கதை வசனம் எழுத துவங்கியதிலிருந்து எழுத்தின் மீது ஆர்வம் கொண்டவர் தமிழ்ச்செல்வன். தந்தை, மற்றும் சிறிய தந்தையரின் இலக்கிய ஆர்வத்தால் வீட்டில் குவிந்து கிடந்த புத்தகங்களை வாசித்து பெற்ற அனுபவம்.. அவரது வாசிப்பு தாகத்தை அதிகரித்தது. பள்ளி பருவத்திலேயே சக நண்பர்களை இணைத்துக்கொண்டு நூலகம் நடத்துமளவு வளர்ந்தது. இவரது முதல் கவிதை "ஒருநாள் டைரி" கோவில்பட்டியிலிருந்து வெளியான "நீலக்குயில்"என்ற சிறுபத்திரிக்கையில் 1972 இல் வெளியானது. தொடர்ந்து கவிதைகள் எழுதி வந்தவரின் கவனம் பின்னர் சிறுகதை பக்கம் திரும்பியது.

இராணுவ பணியிலிருந்து திரும்பிய பிறகு சிற்றிதழ்களில் வரும் முற்போக்கு கதைகளில் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். இவரது முதல் சிறுகதை "திரைச்சுவர்கள்" 1978ல் தோழர் ஜீவானந்தம் ஆசிரியராக இருந்த "தாமரை" இதழில் வெளிவந்தது. தொடர்ந்து செம்மலர் உள்ளிட்ட இலக்கிய இதழ்களில் எழுதிவந்தார்.

விருதுகள் தொகு

அவரது "வெயிலோடு போய்.." என்ற சிறுகதை, "பூ" என்ற திரைப்படமாக மலர்ந்தது. தமிழக அரசின் 2008 ஆம் வருடத்தில் சிறந்த கதாசிரியர் விருதினை அவருக்கு பெற்றுத் தந்தது. அதே படத்திற்காக ஆனந்த விகடனின் சினிமா விருதும், மக்கள் தொலைக்காட்சி விருதும் கிடைத்தது. கோவை வாசகர் வட்டம் ஜெயகாந்தன் விருது தந்து சிறப்பு செய்தது.

வெளிவந்துள்ள நூல்கள் தொகு

  • வெயிலோடு போய் -1984-சிறுகதைகள்
  • வாளின் தனிமை-1992- சிறுகதைகள்
  • மிதமான காற்றும் இசைவான கடலலையும்-முழுச்சிறுகதைத்தொகுப்பு-2006
  • இருளும் ஒளியும்-அறிவொளி இயக்க அனுபவங்கள்
  • ஜிந்தாபாத் ஜிந்தாபாத்-தொழிற்சங்க வாழ்க்கை அனுபவங்கள்
  • ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது
  • இருட்டு எனக்குப் பிடிக்கும்-குழந்தைகளுக்கான கட்டுரைகள்
  • அரசியல் எனக்குப் பிடிக்கும்- 3 லட்சம் பிரதிகளைத்தாண்டி விற்பனை
  • நான் பேச விரும்புகிறேன் -சில கலை ஆளுமைகளின் வாழ்வை முன்வைத்த கட்டுரைகள்
  • வீரசுதந்திரம் வேண்டி - (ஜா.மாதவராஜுடன் இணைந்து)
  • பெண்மை என்றொரு கற்பிதம்
  • பேசாத பேச்செல்லாம்
  • இருவர் கண்ட ஒரே கனவு
  • சந்தித்தேன்
  • வலையில் விழுந்த வார்த்தைகள்
  • அவ்வப்போது எழுதிய நாட்குறிப்புகள்
  • ஒரு சாப்பாட்டுராமனின் நினைவலைகள்
  • எசப்பாட்டு-ஆண்களோடு பேசுவோம்
  • தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்

சிறு நூல்கள் தொகு

  • 1947
  • 1806
  • நமக்கான குடும்பம்
  • வ.உ.சியின் தொழிற்சங்க இயக்கமும் சுதேசிக்கப்பலும்
  • அலைகொண்ட போது.. -சுனாமி மீட்புப்பணிகளில் வாலிபர் சங்கம்
  • தமிழக தொழில் வளச்சியில் கம்யூனிஸ்ட்டுகள்
  • பிள்ளை பெற்ற பெரியசாமி-படக்கதை
  • எது கலாச்சாரம்?
  • அறிவொளி புதிய கற்றோருக்கான சிறுநூல்கள் 30- க்கு மேல்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ச._தமிழ்ச்செல்வன்&oldid=3764500" இலிருந்து மீள்விக்கப்பட்டது