ஜெயசம்வர்தனி

ஜெயசம்வர்தனி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 17வது மேளகர்த்தா இராகமும், "அக்னி" என்றழைக்கப் படும் 3 ஆவது சக்கரத்தின் 5 ஆவது மேளமாகிய சூர்யகாந்தம் இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம் தொகு

 
ஜெயசம்வர்தனி ஆரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
 
ஜெயசம்வர்தனி அவரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்

இந்த இராகத்தில் சட்சம் (ச), சுத்த ரிசபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சதுச்ருதி தைவதம் (த2), காகளி நிசாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:

ஆரோகணம்: ச க31 ப த2 நி3 ச்
அவரோகணம்: ச் நி3 ப ம13 ரி1

இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது "வர்ஜ" இராகம் எனப்படுகிறது. இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் 6 சுரங்களும் உள்ளன. இதனால் இது "சாடவ-சாடவ" இராகம் எனப்படுகின்றது.

இவற்றையும் பார்க்கவும் தொகு

உசாத்துணைகள் தொகு

  • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
  • B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெயசம்வர்தனி&oldid=1017398" இலிருந்து மீள்விக்கப்பட்டது