ஜேம்ஸ் டோட்

லெப்டினன்ட்-கர்னல் ஜேம்ஸ் டோட் (James Tod; 20 மார்ச் 1782 – 18 நவம்பர் 1835) பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் அதிகாரியும்[1] கீழைநாடுகளின் அறிஞர் ஆவார். இவர் தனது பணியில் கிடைத்த பங்கு மற்றும் தனது தொழில் ஆர்வங்களை ஒருங்கிணைத்து இந்தியாவின் வரலாறு மற்றும் புவியியல் பற்றிய தொடர் படைப்புகளை உருவாக்கினார். குறிப்பாக இராஜஸ்தானின் தற்போதைய மாநிலத்துடன் தொடர்புடைய இராஜபுதனம் என்று அழைக்கப்படும் பகுதி. டோட் இதை ராஜஸ்'கான் என்று குறிப்பிடுகிறார். [2][3] [4]

லெப்டினன்ட்-கர்னல்
ஜேம்ஸ் டோட்
அன்னல்ஸ் அண்ட் ஆண்டிக்விட்டிஸ் ஆஃப் ராஜஸ்தான் என்ற நூலின் 1920 பதிப்பின் முன்பகுதி
அன்னல்ஸ் அண்ட் ஆண்டிக்விட்டிஸ் ஆஃப் ராஜஸ்தான் என்ற நூலின் 1920 பதிப்பின் அந்தலைத்தாள்
பிறப்பு(1782-03-20)20 மார்ச்சு 1782
இசுலிங்டன், இலண்டன், ஐக்கிய ராச்சியம்
இறப்பு18 நவம்பர் 1835(1835-11-18) (அகவை 53)
இலண்டன்
பணிஅரசியல் முகவர், வரலாற்றாசிரியர், வரைபடவியலாளர், நாணயவியல் நிபுணர்
பணியகம்பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்அன்னல்ஸ் அண்ட் ஆண்டிக்விட்டிஸ் ஆஃப் ராஜஸ்தான்
பெற்றோர்
  • ஜேம்ஸ் டோட்
  • மேரி கெட்லி
வாழ்க்கைத்
துணை
ஜூலியா கிளட்டர்பக்

பணிகள் தொகு

டோட், இலண்டனில் பிறந்து[5][a] இசுக்கொட்லாந்தில் படித்தவர். இவர் கிழக்கிந்திய நிறுவனத்தில் இராணுவ அதிகாரியாக சேர்ந்தார். மேலும், வங்காள இராணுவத்தில் அதிகாரியாக 1799 இல் இந்தியாவிற்கு பயணம் செய்தார். இறுதியில் ஒரு சிந்தியாக்களின் அரசவையில் ஒரு தூதுவரின் துணைத் தலைவரானார். மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பிறகு, டோட் உளவுப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இராஜ்புதனத்தின் சில பகுதிகளுக்கு அரசியல் முகவராக நியமிக்கப்பட்டார். கிழக்கிந்திய நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பிராந்தியத்தை ஒருங்கிணைக்க உதவுவதே இவரது பணியாக இருந்தது. இந்த காலகட்டத்தில் டோட் பின்னர் தான் வெளியிடும் பெரும்பாலான ஆராய்ச்சிகளை நடத்தினார். ஆரம்பத்தில் தனது பணியில் வெற்றிகரமாக இருந்தார். ஆனால் இவரது முறைகள் கிழக்கிந்திய நிறுவனத்தின் மற்ற உறுப்பினர்களால் கேள்விக்குள்ளாக்கப்பட்டன. காலப்போக்கில், இவரது பணி கட்டுப்படுத்தப்பட்டது. மேலும், இவரது மேற்பார்வை பகுதிகள் கணிசமாக குறைக்கப்பட்டன. 1823 இல், உடல்நலம் குன்றியதாலும், நற்பெயர் குறைந்ததாலும், டோட் தனது அரசியல் முகவர் பதவியை விட்டு விலகி இங்கிலாந்து திரும்பினார்.[6]

பிற்கால வாழ்வு தொகு

தாயகம் திரும்பிய டோட், இந்திய வரலாறு மற்றும் புவியியல் பற்றிய பல கல்விப் படைப்புகளை வெளியிட்டார்.[7] குறிப்பாக தனது பயணங்களின் போது சேகரிக்கப்பட்ட பொருட்களின் அடிப்படையில் அன்னல்ஸ் அண்ட் ஆண்டிக்விட்டிஸ் ஆஃப் ராஜஸ்தான் என்ற தலைப்பில் எழுதினார். இவர் 1826 இல் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றார். அதே ஆண்டில் ஜூலியா கிளட்டர்பக் என்பவரை மணந்தார். இவர் 1835 இல் 53 வயதில் இறந்தார்.

சான்றுகள் தொகு

  1. Freitag (2009), pp. 34–36.
  2. Tod (1839), p. xxxiii.
  3. Freitag (2009), n. 17 p. 36.
  4. Gupta & Bakshi (2008), p. 142.
  5. 5.0 5.1 Freitag (2009), p. 33.
  6. Freitag (2009), p. 40.
  7. Royal Asiatic Society (1835), Appendix, pp. xlvii–liv, lxi.

குறிப்புகள்

  1. Although 20 March 1782 is generally used as his date of birth, documentation for his christening states it as 19 March.[5]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்ஸ்_டோட்&oldid=3785982" இலிருந்து மீள்விக்கப்பட்டது