ஜே. என். என். மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி

தமிழ்நாட்டின், திருவள்ளூரில் அமைந்துள்ள மேல்நிலைப் பள்ளி

ஜே. என். என். மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி (J.N.N Matriculation & Higher Secondary School) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், திருவள்ளூரில் அமைந்துள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியாகும். இப்பள்ளிக்கு தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகளின் இயக்குநரகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த பள்ளி 2008 இல் நிறுவப்பட்டது. இது அலமேலு அம்மாள் கல்வி அறக்கட்டளையால் துவக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.

ஜே. என். என். மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி
வகைதனியார்
உருவாக்கம்2009
தலைவர்எஸ். ஜெயசந்திரன்
முதல்வர்எஸ். ஏமலதா
கல்வி பணியாளர்
55
நிருவாகப் பணியாளர்
16
மாணவர்கள்820
அமைவிடம், ,
13°15′45″N 80°6′23″E / 13.26250°N 80.10639°E / 13.26250; 80.10639
வளாகம்நகர்ப்புறம்

இந்த அறக்கட்டளையானது ஜே. என். என் பொறியியல் கல்லூரி, ஜே. என். என் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, ஜே. என். என் வித்யல்லயா, ஜே. என். என் கல்வியியல் கல்லூரி ஆகியவற்றை நிர்வகிக்கிறது .