ஜோதிஸ்வரூபிணி
ஜோதிஸ்வரூபிணி கருநாடக இசையின் 68 ஆவது மேளகர்த்தா இராகமாகும்.[1] முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 68 ஆவது இராகத்திற்கு ஜோதி அல்லது ஜோதிராகம் என்ற பெயர்.[1][2][3]
இலக்கணம்
தொகுஆரோகணம்: | ஸ ரி3 க3 ம2 ப த1 நி2 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி2 த1 ப ம2 க3 ரி3 ஸ |
- ஆதித்ய என்றழைக்கப்படும் 12ஆவது சக்கரத்தில் 2ஆவது மேளம்.
- இந்த இராகத்தில் ஷட்ஜம், ஷட்சுருதி ரிஷபம் (ரி3), அந்தர காந்தாரம்(க3), பிரதி மத்திமம்(ம2), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
சிறப்பு அம்சங்கள்
தொகு- இதன் மத்திமத்தை சுத்த மத்திமாக மாற்றினால் இராகம் ராகவர்த்தனி (32) ஆகும்.
- கிரக பேதத்தின் வழியாக எந்த மேளகர்த்தா இராகமும் தோற்றுவிக்காது. (மூர்ச்சனாகாரக மேளம் அல்ல).
உருப்படிகள்
தொகு- கிருதி : ஜோதிஸ்வரூபிணி, பெரியசாமி தூரன்
- கிருதி : கானசுதா, கோடீஸ்வர ஐயர்
- கிருதி : ஸ்ரீ காயத்ரி பக்த துரித, மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா