தமிழகத்தில் சசானியக் காசுகள்

பண்டைய பெர்சியர்களான சசானியா மன்னர்கள் (பொ.பி. 226 - 641) தமிழகத்தில் வாணிபம் செய்ததற்கான நாணயக்குவியல்கள் வள்ளிமலையில் கிடைத்துள்ளது. மொத்தம் கிடைத்துள்ள 27 குவியல்களும் வெள்ளி நாணயங்களை கொண்டவை.[1]

பண்பாடு தொகு

இவற்றில் காணப்படும் சின்னங்கள் அனைத்தும் சந்திரன், சூரியன், நெருப்பு வழிபாடுகளை மையமாக கொண்டுளது. இதன் மூலம் மேற்கூரிய மூன்று வழிபாடுகளையும் சசானியர் செய்தது தெரிகிறது. மேலும் இவற்றில் அதை ஆண்ட மன்னர்களின் உருவங்களும் பொறிக்கப்பட்டுளன.

மேற்கோள்கள் தொகு

  1. Indo-Sassanian Silver coins from Tamilnadu in Studies in South Indian coins, Shanthi R, vol 7, pp - 73-75

மூலம் தொகு

  • பண்டைய தமிழகம், சி.க. சிற்றம்பலம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை.