தாரக் மேத்தா

இந்திய நகைச்சுவை எழுத்தாளர்

தாரக் ஜானுபாய் மேத்தா (Taarak Janubhai Mehta) ஒரு இந்திய நகைச்சுவை எழுத்தாளரும் நாடகாசிரியரும் ஆவார். இவர் குஜராத்தி மொழியில் புகழ் பெற்ற துனியா னே உந்த சஸ்மா என்ற நாடகத்தின் ஆசிரியர் ஆவார். இவர் பல நகைச்சுவை நாடகங்களை குஜராத்தி மொழியில் மொழிபெயர்த்துள்ளார். இதன் காரணமாக குஜராத் நாடக அரங்கில் புகழ் பெற்றவர் ஆவார். [2]

தாரக் மேத்தா
Taarak Mehta, 2015.
Taarak Mehta, 2015.
பிறப்பு(1929-12-26)26 திசம்பர் 1929
அகமதாபாத், குஜராத், இந்தியா
இறப்பு1 மார்ச்சு 2017(2017-03-01) (அகவை 87)[1]
அகமதாபாத்
தொழில்நகைச்சுவை நாடக எழுத்தாளர்
துணைவர்இலா (இறப்பு 2006), Indu

இவரது புகழ்பெற்ற நாடகத் தொடர் சித்ரலேகாவில் மார்ச்சு 1971 முதல் வெளிவரத் தொடங்கியது. இத்தொடர் முன்பேதுமில்லாத அளவில், சமகாலப் பிரச்சனைகளை மாற்றுக் கோணத்தில் அலசியது எனலாம். அவர் 80 புத்தகங்களை வெளியிட்டுள்ளார். இவரின் மூன்று புத்தகங்கள் குஜராத்தி செய்தித்தாளான திவ்ய பாஸ்கர் இதழில், வெளிவந்த தொடர்களாகும். மீதமுள்ளவை தாரக் மேத்தா கா ஊல்டா சாஸ்மாவில் இருந்து தொகுக்கப்பட்டவையாகும்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "Writer Taarak Mehta, the inspiration behind 'Taarak Mehta Ka Ooltah Chashmah', no more". The Times of India. 2017-03-01. பார்க்கப்பட்ட நாள் 2017-03-01.
  2. Contemporary Indian theatre: interviews with playwrights and directors. Sangeet Natak Akademi. 1989. பக். 159. 
  3. "Tarak Mehta is 'booked'!". DNA (newspaper). Mar 9, 2009. http://www.dnaindia.com/lifestyle/report_tarak-mehta-is-booked-_1237837. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாரக்_மேத்தா&oldid=2968431" இலிருந்து மீள்விக்கப்பட்டது