திணைமொழி ஐம்பது பழைய உரை

பண்டைத் தமிழர் எழுதிய நூல்கள் பெரும்பாலும் பாடல்களாகவே அமைந்திருந்தன. பண்டைய இயற்சொற்கள் பல அவற்றில் விரவி வந்தமையால் அவற்றைப் பொதுமக்கள் உணர்ந்துகொள்ளும் பொருட்டு நல்லறிஞர்கள் பலர் பாடல்களுக்கு உரை எழுதினர். அவற்றில் பழமையான உரைகள் 1200 – 1500 ஆம் ஆண்டுக்கால இடைவெளியில் தோன்றியவை.[1]

திணைமொழி ஐம்பது நூலுக்குப் பழைய உரை ஒன்று உண்டு. உரை ஆசிரியர் பெயர் தெரியவில்லை.[2]

இந்த உரை ஏனைய பழைய உரைகளைப் போலத் தெளிவான பொழிப்புரையாக உள்ளது. சிறப்புக் குறிப்புகள் எதுவும் இதில் இல்லை.

இந்த உரைநூலின் காலம் 13ஆம் நூற்றாண்டு.

கருவிநூல் தொகு

அடிக்குறிப்பு தொகு

  1. டாக்டர். மு. வரதராசனார், தமிழ் இலக்கிய வரலாறு.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திணைமொழி_ஐம்பது_பழைய_உரை&oldid=2725685" இலிருந்து மீள்விக்கப்பட்டது