தினேஷ்சந்திர சர்கார்

இந்திய கல்வெட்டுவியலாளர், வரலாற்றாசிரியர், நாணயவியல் அறிஞர் மற்றும் நாட்டுப்புறவியலாளர் (1907-198

தி. சி. சிர்கார் எனவும் தி.சி.சர்கார் எனவும் அழைக்கப்படும் தினேஷ்சந்திர சிர்கார் (Dineshchandra Sircar) (1907 – 1985), ஓர் கல்வெட்டியல் நிபுணரும், வரலாற்றாசிரியரும், நாணயவியல் மற்றும் நாட்டுப்புறவியலாளரும் ஆவார். குறிப்பாக இந்தியா மற்றும் வங்காளதேசத்தில் கல்வெட்டுகளை புரிந்து கொள்ளும் பணிக்காக அறியப்பட்டவர். இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் (1949-1962) தலைமை கல்வெட்டு ஆசிரியராகவும் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பண்டைய இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் கார்மைக்கேல் பேராசிரியராகவும் (1962-1972) இந்திய வரலாற்று காங்கிரசின் பொதுத் தலைவராகவும் இருந்தார். 1972 இல், சர்காருக்கு வில்லியம் ஜோன்ஸ் நினைவு தகடு வழங்கப்பட்டது.

தினேஷ்சந்திர சர்கார்
பிறப்பு1907
கிருஷ்ணா நகர், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா[1]
இறப்பு1985 (அகவை 77–78)[1]
இந்தியா
பணிவரலாற்றாசிரியர், கல்வெட்டுவியலாளர்

ஆரம்ப வாழ்க்கையும் கல்வியும் தொகு

சர்கார் கிருஷ்ணாநகரில் ஆயுர்வேத மருத்துவர்களின் குடும்பத்தில் பிறந்தார். 1929-இல் சமசுகிருதத்தில் மேதகைமை பட்டமும், கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் கல்வெட்டியல் மற்றும் நாணயவியல் ஆகியவற்றில் நிபுணத்துவத்துடன் பண்டைய இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரத்தில் 1931-இல் தனது முதுகலை பட்டத் தேர்வில் முதல் வகுப்பைப் பெற்றார்.

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 Ranabir Chakravarti. "Sircar, Dineschandra". Banglapedia. பார்க்கப்பட்ட நாள் 25 September 2015.

மேலும் படிக்க தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தினேஷ்சந்திர_சர்கார்&oldid=3685087" இலிருந்து மீள்விக்கப்பட்டது