திருநெய்ப்பேறு வன்மீகநாதர் கோயில்

இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள சிவன் கோவில்

திருநெய்ப்பேறு வன்மீகநாதர் கோயில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். இக்கோயில் அடியார் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. [1]

அமைவிடம் தொகு

திருவாரூர்-திருத்துறைப்பூண்டி சாலையில் 8 கிமீ தொலைவில் உள்ளது.

இறைவன்,இறைவி தொகு

இங்குள்ள இறைவன் வன்மீகநாதர் ஆவார். இறைவி உமாபரமேசுவரி ஆவார். இவ்வூர் நமிநந்தியடிகள் அவதரித்த பெருமையுடையதாகும். [1]

பிற சன்னதிகள் தொகு

திருச்சுற்றில் விநாயகர், சுப்பிரமணியர், பைரவர், சனீசுவரர், சூரியன் சன்னதிகள் உள்ளன. முன் மண்டபத்தில் இறைவி சன்னிதி உள்ளது. [1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009