திருவிக்கிரமராயன்

திருவிக்கிரமராயன் என்பவர் கங்க வம்சத்தின் 10வது அரசராக அறியப்படுகிறார். இவரது ஆட்சிக்காலத்தை அறுதியிட்டுக் கூறும் சான்றுகள் இல்லை. இவர் புஷ்கராயனின் மகன் என்கிறது கொங்கு தேச ராஜாக்கள் கையேட்டுப் பிரதி. [1]

தலவனபுரம் தொகு

கொங்கு தேசத்தை ஆண்ட கங்க வம்ச அரசர்களில் இவன் (தலவன்புரம்) தலக்காட்டை தலைநகராகக் கொண்டு கொங்கு தேசத்தையும் கன்னட தேசத்தையும் நீதி நெறி தவறாது ஆட்சி செய்தார் எனவும், 64 வித்தைகளில் 14 வித்தைகளை கற்று தேர்ச்சி பெற்று, சாம, பேத, தான, தண்டம் என்ற நான்கு வித நடவடிக்கையால் பல தேச மன்னர்களை வென்றும், அவர்களிடமிருந்து கப்பம் பெற்று ஆட்சி செய்தார் எனவும், அறியமுடிகிறது.[2]

சான்றாவணம் தொகு

  1. கொங்கு தேச ராஜாக்கள்- கையேட்டுப் பிரதி -ஆவணக் காப்பகம்-சென்னை-5-
  2. கொங்கு நாட்டு வரலாறு- (பக்கம்-104)-ஆசிரியர்- கோ. ம. இராமச்சந்திரன் செட்டியார்-பேரூர்ப் புலவர் பேரவை-கோயமுத்தூர்-முதற்பதிப்பு-2004-

ஆதாரங்கள் தொகு

  • Kongudesarajakkal , Government manuscript Library, Chennai
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவிக்கிரமராயன்&oldid=2388521" இலிருந்து மீள்விக்கப்பட்டது