தூய சில்வேஸ்திரியார் வாசாப்பு
தூய சில்வேஸ்திரியார் வாசாப்பு என்பது ஏப்பிரல் 2012 இல் மன்னாரில் அரங்கேற்றப்பட்ட ஒரு நாட்டுக்கூத்து ஆகும். சந்தான் பாவிலு அவர்கள் எழுதிய இந்த நாட்டுக்கூத்தை முருங்கன் தூய இயாகப்பர் ஆலய சபையினர் அரங்கேற்றினர்.[1] "இந்நாடகம் ஒரு இரவு முழுவதும் நடைபெறுகின்ற நிகழ்வாகும். நாடக நெறியாளர்கள், ஒழுங்கமைப்பாளர்கள், நடிகர்கள், வாத்தியக் கருவிகளை இசைப்போர், பிற்பாட்டுக்காரர் என 50 கலைஞர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்."[2]