தென்பரதவர்

தென்பரதவர் என்போர் தமிழ்நாட்டின் தென்பகுதியில் கொற்கைப் பகுதியில் முத்துக் குளிக்கும் தொழில் செய்துவந்த மக்கள்.பொற்கை பாண்டியன் பரதவன் என குண நாற்பது என்னும் பெயர் கொண்ட நுல் ஒன்றைத் தொல்காப்பிய உரையில் இளம்பூரணர் குறிப்பிட்டுள்ளார்.அதன்படி ஆடுமழைத் தடக்கை அறுத்துமுறை செய்த பொற்கை நறுந்தார்ப் புனைதேர் பாண்டியன் கொற்கைஅம் பெருந்துறை குனிதிரை தொகுத்த விளங்குமுத்து உறைக்கும் வெண்பல் பன்மாண் சாயல் பரதவர் மகட்கே உரியது என பொற்கை பாண்டியன் புகழ் பாடுகிறது

[[பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் தென்பரதவ போர் சிங்கம் என அழைக்கப்பட்டான் [1]

சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி தென்பரதவரின் வலிமையை கைகொண்டு வடுகரை வீழ்த்தினான் [2]

இவற்றையும் காண்க தொகு

அடிக்குறிப்பு தொகு

  1. தென்பரதவர் போர் ஏறே - மதுரைக்காஞ்சி 144
  2. தென்பரதவர் மிடல் சாய, வடவடுகர் வாள் ஓட்டிய ... சோழன் - புறநானூறு 378
"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்பரதவர்&oldid=3287354" இலிருந்து மீள்விக்கப்பட்டது