தேங்காய்ப்பட்டணம் கடற்கரை

தேங்காய்ப்பட்டணம் கடற்கரை தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுள் ஒன்றாகும். அரபிக்கடலில் அமைந்துள்ள இக் கடற்கரை முழுவதும் தென்னை மரங்களால் சூழ்ந்துள்ளது இதன் சிறப்பம்சமாகும். இந்த கடற்கரையில் தான் தாமிரபரணி ஆறு கடலில் கலக்கின்றது. இதை தேங்காய்ப்பட்டணம் காயல் என்றும் அழைப்பர்.