கண்ணுடைய வள்ளல் திருஞான சம்பந்தர் தேவாரத்தில் பொருள் விளங்காத சித்திரக் கவி, ஏகபாதம், திருவெழுகூற்றிருக்கை [1] ஆகியவற்றுக்கு உரை எழுதியுள்ளார். இந்த உரைகள் இன்று பதிப்பில் இல்லை. எனினும் இந்த உரைகளைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. [2] சுயம்பிரகாச யோகியார் என்பவர் 18 ஆம் நூற்றாண்டில் திருஞான சம்பந்தரின் சித்திரக்கவிக்கு உரை எழுதியுள்ளார். இந்த உரை கண்ணுடைய வள்ளல் எழுதிய உரையைப் பின்பற்றி எழுதப்பட்டதாக இருக்கலாம் என்பது மு. அருணாசலம் கருத்து.

அடிக்குறிப்பு தொகு

  1. ஏகபாதம், திருவெழுகூற்றிருக்கை ஆகிய இரண்டு பகுதிகளின் உரை பற்றிக் காழித் தாண்டவராயர் குறிப்பிட்டுள்ளார்.
  2. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1969, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 128. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவார_உரை&oldid=1881361" இலிருந்து மீள்விக்கப்பட்டது