நான்மணிக்கடிகை பழைய உரை

பண்டைத் தமிழர் எழுதிய நூல்கள் பெரும்பாலும் பாடல்களாகவே அமைந்திருந்தன. பண்டைய இயற்சொற்கள் பல அவற்றில் விரவி வந்தமையால் அவற்றைப் பொதுமக்கள் உணர்ந்துகொள்ளும் பொருட்டு நல்லறிஞர்கள் பலர் பாடல்களுக்கு உரை எழுதினர். அவற்றில் பழமையான உரைகள் 1200 – 1500 ஆம் ஆண்டுக்கால இடைவெளியில் தோன்றியவை.[1]

நான்மணிக்கடிகை நூலுக்குப் பழைய உரை ஒன்று உண்டு.[2] இது சொல் விடாமல் எழுதப்பட்டுள்ள பொழிப்புரையாகத் தெளிவாகவும், சுருக்கமாகவும் அமைந்துள்ளது.
இந்த உரைநூலின் காலம் 13ஆம் நூற்றாண்டு.

உரை விளக்கத்தில் புதுமை
  • 7 இடங்களில் பாடலின் மூலத்துக்கு வேறு பாடம் காட்டுகிறது.
  • மனைக்கு விளக்கம் மடவாள் என்பதனை இவர் புறநானூற்று நிகழ்வோடு ஒப்பிட்டுக் காட்டுகிறார்.[3]
  • தீதில் ஒழுக்கம் – தான் பிறந்த குலத்துக்குத் தீது வராமல் ஒழுகும் ஒழுக்கம் [4]
  • ஏலாதான் பாருப்பான் – ஒருவரோடு என்றும் மாறுபடாமவன் பார்ப்பான் ஆவான் [5]
  • தன்னின் இடும்பை – தற்பெருமையால் வரும் இடும்பை [6]
  • நல்லாள் இல்லாத குடி – தாங்கவல்ல நல்ல ஆண்மகன் இல்லாத குடி (ஆள் – ஆண்மகன்) [7]

கருவிநூல் தொகு

அடிக்குறிப்பு தொகு

  1. டாக்டர். மு. வரதராசனார், தமிழ் இலக்கிய வரலாறு.
    • பழைய உரை, பதிப்பு, 1903
    • செந்தமிழ், ரா. ராகவையங்கார் பதிப்பு, 1924
    • வையாபுரிப்பிள்ளை பதிப்பு 1944
  2. பாடல் 103
  3. பாடல் 8
  4. பாடல் 54
  5. பாடல் 94
  6. பாடல் 43
"https://ta.wikipedia.org/w/index.php?title=நான்மணிக்கடிகை_பழைய_உரை&oldid=1881315" இலிருந்து மீள்விக்கப்பட்டது