நாவலர் ந மு வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி
நாவலர் ந. மு. வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி (Navalar Na. Mu. Venkatasamy Nattar Thiruvarul College) 1992ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் நிறுவப்பட்ட தனியார் கலைக் கல்லூரி ஆகும்.[1] இது திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டது. இக்கல்லூரி தமிழ் புலவர் ந. மு. வேங்கடசாமி நாட்டார் நினைவாக நிறுவப்பட்டது.
வகை | அரசு உதவிபெறும், இருபாலர், கலைக் கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1992 |
கல்வி பணியாளர் | 7 |
அமைவிடம் | தஞ்சாவூர்- 613 003 , , |
வளாகம் | கபிலர் நகர், தஞ்சாவூர், தமிழ்நாடு |
சேர்ப்பு | பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி |

அறிமுகம்
தொகுபுது தில்லியில் உள்ள பல்கலைக்கழக மானியக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி இதுவாகும்.
இடம்
தொகுஇக்கல்லூரி தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் வெண்ணாற்றங்கரையில் கபிலர் நகரில் அமைந்துள்ளது
படிப்புகள்
தொகுகணினி பயன்பாடு மற்றும் கணினி அறிவியல் உள்ளிட்ட 10 பிரிவுகளில் பாடங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.[2]