நெல்லை வருக்கக் கோவை

நெல்லை வருக்கக் கோவை [1] என்பது வருக்கக் கோவை நூல்களில் ஒன்று. கோவை என்னும் சிற்றிலக்கியம் அகப்பொருள் நூல். இதன் ஆசிரியர் வீரை அம்பிகாபதி. இவரை இந்த நூலின் இறுதிப் பாடல் 'அம்பிகாபதி வீரையின் வேதியன்' என்று குறிப்பிடுகிறது. [2] 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இந்த நூலில் சிறப்புப் பாயிரம் உட்பட 100 கட்டளைக் கலித்துறைப் பாடல்கள் உள்ளன. அ, ஆ, இ, ஈ ... என்று எழுத்து வரிசையில் பாடல்கள் அடுக்கப்பட்டுள்ளன. ஓர் எழுத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பாடல்களும் இதில் உள்ளன.

பாடல் - எடுத்துக்காட்டு தொகு

பாலனைப் பழித்தல் என்னும் துறையினதாக இந்தப் பாடல் வருகிறது. பாடல் பொருள் நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளது/

நூலாம் மருங்கின் உமை பாகர் நெல்லையில் நோற்றுப் பெற்ற
பாலா, பகலும் வந்தார் இல்லையே, கையில் பற்றிய வேல்
கோலால் நெடும் புனத்து இட்ட முள் வேலியைக் கோலி மெல்லக்
காலால் வழி தடவிக் கங்குல்வாய் வரக் கற்றவரே

அடிக்குறிப்பு தொகு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 258. 
  2. இதன் ஆசிரியர் நெல்லைப் பெருமாள் ஐயர் என உ. வே. சாமிநாதையர் குறிப்பிட்டு விரிவாக எழுதியுள்ளார்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெல்லை_வருக்கக்_கோவை&oldid=1881105" இலிருந்து மீள்விக்கப்பட்டது