நேபாளத் திரைப்படத்துறை

நேபாளத்தின் திரைப்படத் துறை

நேபாளத் திரைப்படத்துறை (Cinema of Nepal) என்பது 1951 ஆம் ஆண்டு முதல் நேபாள நாட்டில் நேபாளி, மைதிலி மற்றும் போச்புரி மொழிகளில் வெளியாகும் திரைப்படங்களையும், அதைச் சார்ந்த தொழிலாளர்களையும் உள்ளடக்கிய திரைப்படத்துறை ஆகும்.

நேபாளத் திரைப்படத்துறை
Cinema of Nepal
திரைகளின் எண்ணிக்கை130[1]
 • தனிநபருக்கு0.2 per 100,000 (2001)[1]
தயாரித்த முழுநீளத் திரைப்படங்கள் (2016)
மொத்தம்100[1]

நேபாள த் திரைப்படத்துறைக்கு மிக நீண்ட வரலாறு இல்லை, ஆனால் நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தில் தொழில்துறைக்கு அதன் சொந்த இடம் உண்டு. கூர்க்கவுட் பெரும்பாலும் "நேபாளி சல்சித்திரா" என்று அழைக்கப்படுகிறது (இது ஆங்கிலத்தில் "நேபாள திரைப்படங்கள்" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது). காளிவுட் என்ற சொல் நேபாளி மொழியில் தயாரிக்கப்பட்ட படங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது, அதே சமயம் காட்மாண்டு மற்றும் ஜனக்பூரிலிருந்து மைதிலி மொழியில் தயாரிக்கப்பட்ட நேபாளத் திரைப்படங்களை மிதிலவுட் என்று அழைக்கப்படுகின்றன. இவ் இரண்டு பெரிய மொழித் திரைப்படத்துறையை நேபாளத்தில் பொதுவாக கூர்க்கவுட் என்று அழைக்கப்படுகின்றன.[2]

வரலாறு தொகு

முதல் நேபாள மொழித் திரைப்படமான 'சத்ய ஹரிச்சந்திரா' என்ற திரைப்படம் இந்தியாவின் கொல்கத்தாவிலிருந்து தயாரிக்கப்பட்டு செப்டம்பர் 14, 1951 ஆம் ஆண்டு திரையிடப்பட்டது. நேபாள நாட்டில் முதல் முதலில் மாட்சிமை நேபாள அரசாங்கத்தின் தகவல் துறையால் தயாரிக்கப்பட்ட 'ஆமா' என்ற திரைப்படம் அக்டோபர் 7, 1964 அன்று வெளியிடப்பட்டது. இந்த திரைப்படத்தை ஹிரா சிங் காத்ரி என்பவர் இயக்கியுள்ளார், துர்கா ஸ்ரேஸ்தா மற்றும் சைத்யா தேவி ஆகியோரால் எழுதப்பட்டது. இப் படத்தில் நடித்த நடிகர்கள் சிவசங்கர் மனந்தர், புவன் சந்த், சைத்யா தேவி மற்றும் பசுந்தரா பூசல் ஆகியோர் நேபாளி திரைப்படத்துறையில் முதல் நடிகர்களாக கருதப்படுகிறார்கள்.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "Nepal Screens". therisingnepal.org. Archived from the original on 2020-02-19. பார்க்கப்பட்ட நாள் 2020-11-26.
  2. "Nepal's film industry looks beyond Bollywood". www.aljazeera.com. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.

வெளிப்புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நேபாளத்_திரைப்படத்துறை&oldid=3777360" இலிருந்து மீள்விக்கப்பட்டது