பகுப்பு பேச்சு:மெய்யியல்

  • மற்றவை எதிலும் மெய் இல்லையா??
  • மெய்யியற் = தத்துவ

--Natkeeran 03:22, 7 டிசம்பர் 2006 (UTC)


தத்துவமா- மெய்யியலா? தொகு

இப்பகுப்புக்கு மிகப்பொருத்தமான தலைப்பு மெய்யியல் என்பதாகும்.

இச்சொல்லே இன்று பெரிதும் புழக்கத்துக்கு பரிந்துரைக்கப்படுகிறது. இப்பகுப்பை மெய்யியல் என்று மாற்றலாமா? இது பற்றிய உங்கள் கருத்துக்கள் என்ன? --மு.மயூரன் 16:52, 20 அக்டோபர் 2005 (UTC)Reply

மெய்யியல் என்பது தத்துவம் என்ற வடமொழிச் சொல்லை விட மிகப்பொருத்தமானத் தமிழ்ச் சொல்லாகத் தோன்றுகிறது. ஆனால், இது எந்த அளவு புழக்கத்தில் உள்ளது என்று தெரியவில்லை. நான் முதன் முறையாக இப்போதுதான் கேள்விப்படுகிறேன். எது எப்படியோ தத்துவம் கட்டுரையில் இச்சொல்லையும் ஒரு மாற்றுச் சொல்லாகவாவது குறிப்பிட வேண்டும். -- Sundar \பேச்சு 05:34, 21 அக்டோபர் 2005 (UTC)Reply
மெய்யியல் மிகத்தாராளமாக புழக்கத்திலுள்ளது. அநேகமாக மார்க்சிய பெரியாரிய எழுத்தாளர்கள் அதனை பயன்படுத்துகிறார்கள். தத்துவத்துக்கு மாற்றாக முன்வைக்கப்படும் இந்தச்சொல்லுக்கு மாறிக்கொள்வதில் எந்த தயக்கமும் தேவையில்லை. --மு.மயூரன் 09:15, 21 அக்டோபர் 2005 (UTC)Reply


தத்துவம் ஒரு பொது சொல். தத்துவம் ஆங்கில சொல்லானா philosophy க்கு ஒத்த சொல்லாக தெரிகின்றது. ஆனால், மெய்யியல் சற்று விலகி நிற்கின்றது. விஞ்ஞானம், மெஞ்ஞானம் என்ற பிரித்து, மெஞ்ஞானத்தின் ஒரு ஒத்த சொல்லாகத்தான் மெய்யியலை பார்க்க முடிகின்றது. மெஞ்ஞானம் என்னும் பொழுது அதன் பொருள் தத்துவத்தில் இருந்து சற்று வேறுபட்டு நிற்கின்றது. அதாவது உள்ளம் சார்ந்ததாக மெய்யியல் அமைகின்றது, ஆனால் தத்துவம் உலகம் சார்ந்த பொருளை சுட்டி நிற்பதாக தெரிகின்றது. --Natkeeran 20:37, 21 அக்டோபர் 2005 (UTC)Reply

தத்துவம் என்னும் சொல் சமசுகிருத மொழியில் தத் (அது) என்னும் அடிப்படையில் "அதன்" இயல் ("த்வம்") என்னும் பொருள் படும். பொதுவாக "உண்மை என்பது என்ன" அதனை எப்படி அறிவது, அதன் இயல்புகள் யாவை என்பதாக உள்ளெழும் கேள்விகளின் அடிப்படையாக தொன்றுதொட்டு வரும் ஓர் அறிவு வரலாறுதான் இத்துறை. மெய்யியல் என்பது philosophy என்பதற்கு முற்றிலும் பொருத்தமான சொல். இது பெருவாரியாக வழக்கில் உள்ள சொல். அறிவியல் என்பது மெய்யியலில் ஒரு பகுதிதான். அறிவியல் முறைகளும், களங்களும் சற்று வேறாக இருக்கலாம், ஆனால் அறிவியலும் மெய்யியலின் ஒரு பகுதியே. உலகமும் அண்டமும் உள்ளமும் எல்லாமும் அடங்கும் மெய்யியலில். "அறிவியல்" முறைகளுக்கு உட்பட்டு அறியப்படும் உணமைகளைப்பற்றியது அறிவியல். அறிவு என்பதே என்ன, அறிவது என்பது எதைக் குறிப்பது, இவைகளின் அடிப்படை யாவை என்று எல்லாவற்றையும் அலசுவது மெய்யியல். கடவுள் என்று ஒன்றுண்டா, அதன் உண்மை யாது என்று "அறிய" முற்படுவது தொன்றுதொட்டு வருவது - இந்த மெய்யியலைச் சேர்ந்தது. --செல்வா 23:06, 11 நவம்பர் 2007 (UTC)Reply

Return to "மெய்யியல்" page.