பக்த துருவன்
பி. வி. ராவ் இயக்கத்தில் 1935 இல் வெளியான தமிழ்த்திரைப்படம்
பக்த துருவன் (Bhaktha Dhuruvan) 1935 ஆம் ஆண்டு வெளிவந்த 17000 அடி நீளமுடைய புராணத் தமிழ்த் திரைப்படமாகும். பி. வி. ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சி. எஸ். ஜெயராமன், பி. எஸ். சிவராமலிங்கம் பிள்ளை மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
பக்த துருவன் | |
---|---|
இயக்கம் | பி. வி. ராவ் |
தயாரிப்பு | ஏஞ்சல் பிலிம்ஸ் |
நடிப்பு | சி. எஸ். ஜெயராமன் பி. எஸ். சிவராமலிங்கம் பிள்ளை சி. எஸ். கோபாலகிருஷ்ணன் சி. எஸ். சமன்னா சுந்தரம் பி. எஸ். சிவபாக்கியம் எஸ். ஆர். ஜானகி |
வெளியீடு | 1935 |
ஓட்டம் | . |
நீளம் | 17000 அடி |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
உபத் தகவல்
தொகுபின்னணிப் பாடகர் சி. எஸ். ஜெயராமன், குழந்தை நடிகராக நடித்த இப்படத்தில், ‘இனிய கான சினிமா ராணி’ பி.எஸ். சிவபாக்கியம் குறத்தியாகவும், முதன்முதலில் ஒரே படத்தில் பல வேடங்களில் நடித்த பி.எஸ். சாமண்ணா அய்யர் குறவனாகவும் நடித்துள்ளார்கள். ‘பச்சை சிகப்பு மிச்சம் கருப்புப் பாசியிருக்குது, பாசி கோர்க்கும் ஊசி இருக்குது, நரிக்கொம்பிருக்குது, பெரிய வரிப்புலி நகமிருக்குது, நம்ம புள்ளைக்கு வாங்கிப் போட்டா நல்லாருக்குமே,’ என்றும், ‘பச்சைக் குத்த ஆசை உமக்கில்லீங்களா’ என்னும் பாடலை சிவபாக்கியம் பாடியிருக்கிறார்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Bhaktha Dhuruvan ( 1935 )". tamilrasigan.net. பார்க்கப்பட்ட நாள் 2016-10-20.
- ↑ "தினமலர் 'நிழலல்ல நிஜம்' – 28". www.dinamalarnellai.com (தமிழ்). Archived from the original on 2017-04-13. பார்க்கப்பட்ட நாள் 2016-10-20.